தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 15 februari 2015

அடிக்கடி காதலனை மாற்றும் யாழ்ப்பாண பெண்கள் ! கடத்தல் பின்னணி என்ன ?

யோசித ராஜபக்ஷவின் கம்பெனிக்கு முதலிடம்: ஆட்சி மாறினாலும் நடப்பது தான் நடக்கிறது ?

[ Feb 16, 2015 12:00:00 AM | வாசித்தோர் : 4840 ]
மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் , இலங்கை வங்கியின் பிரச்சார மற்றும் சந்தைப்படுத்தல் நடவடிக்கைக்கு ஒரு தனியார் நிறுவனத்திடம்தான் பொறுப்பை ஒப்படைத்தார்கள். இந்த நிறுவனத்தின் பெயர் "மெஜண்டா" ஆகும். இதனை யோசித ராஜபக்ஷவே நடத்தி வந்தார். கடந்த 2 தினங்களுக்கு முன்னர் இலங்கை வங்கியால் வீட்டுக் கடன் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. தற்போது ஆட்சி மாறி இருந்தாலும் சந்தைப்படுத்தல் தொடர்பான ஆலோசனைகளை வழங்க இந்த யோசித ராஜபக்ஷவின் கம்பெனிக்கே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இதுபோன்ற பல கம்பெனிகள் இருக்கிறது. ஆனால் அதனை எல்லாம் புறந்தள்ளி , யோசித ராஜபக்ஷவின் கம்பெனிக்கே அழைப்பு விடுக்கப்பட்டது பலரை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
எதிரணியில் உள்ள மைத்திரி மற்றும் சரத் பொன்சேகா ஆகியோர் மகிந்த ராஜபக்ஷவை பழிவாங்க முயற்சிகளை எடுக்கிறார்கள். ஆனால் ரணில் ஒரு மென்மையான போக்கை கடைப்பிடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. பாராளுமன்றில் ரணிலுக்கு தற்போது பெரும்பாண்மை இல்லை என்ற காரணத்தால் தான் அவர் சற்று நெளிவு சுளிவோடு நடந்துவருகிறார் என்று கூறப்படுகிறது. 
http://www.athirvu.com/newsdetail/2290.html

அடிக்கடி காதலனை மாற்றும் யாழ்ப்பாண பெண்கள் ! கடத்தல் பின்னணி என்ன ?

[ Feb 16, 2015 12:00:00 AM | வாசித்தோர் : 7495 ]
யாழ்ப்பாணத்தில் தலைதூக்கியுள்ள கலாச்சார சீரழிவு தொடர்பாக பல செய்திகள் நாளாந்தம் வெளியாகிக்கொண்டு இருக்கிறது. நேற்றைய தினம்(ஞாயிற்றுக்கிழமை) காலை யாழில் பட்டப் பகலில் நடந்த கடத்தல் சம்பவம் ஒன்று அனைவரையும் உலுக்கியுள்ளது. யாழ் பூனகரியைச் சேர்ந்த 19 வயதான லவனிதா என்னும் பெண், லண்டனில் உள்ள இளைஞர் ஒருவரோடு கதல்வயப்பட்டுள்ளார். பேஸ் புக் ஊடாகவே இந்தக் காதல் மலர்ந்துள்ளது என்கிறார் அவரது தோழன். பல மாதங்களாக காதல் லீலையில் இவர்கள் இருவரும் இருந்துள்ளார்கள். இதேவேளை லவனிதா யாழில் தங்கி படித்துவரும் நிலையில், டியூசன் கிளாசுக்கு வரும் வேறு ஒரு இளைஞரோடும் தொடர்பை ஏற்படுத்தியுள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுவிட்டது.
இந்த முக்கோண காதலால் தான் இந்த கடத்தல் இடம்பெற்றுள்ளது என்பது தற்போது தெளிவாகியுள்ளது. யாழ் போதனா வைத்தியசாலையின் பின் வீதியில் உள்ள விக்டோரியா வீதியில் உள்ள டியூசன் சென்ரன் ஒன்றில் லவனிதா கற்று வந்துள்ளார். நேற்றைய தினம்(15) அவர் டியூசனை முடித்துக்கொண்டு , குறித்த யாழ் காதலனோடு பேசிக்கொண்டு நடந்து சென்றுள்ளார். விக்டோரியா வீதி மற்றும் மணிக்கூடுகோபுர வீதி இணையும் சந்தியில் மின்னல் வேகத்தில் வெள்ளை வான் ஒன்று வந்து அவர்களை மறித்துள்ளது. அதில் இருந்து இறங்கிய 3 நபர்கள் லவனிதாவின் யாழ் காதலனை அடித்து தள்ளிவிட்டு அவரை கடத்திச் சென்றுவிட்டார்கள்.
வெள்ளை வேனுக்குள் இருந்த நபரை தன்னால் அடையாளம் காட்ட முடியும் என்றும். அவரே லவனிதாவின் வெளிநாட்டு காதலன் என்று உள்ளூர் காதலன் தெரிவித்துள்ளார். குறித்த நபர் லண்டனில் இருந்து யாழ் சென்று இக்காரியத்தில் ஈடுபட்டாரா என்று பொலிசார் விசாரணைகளை நடத்தி வருகிறார்கள். மேலும் லவனிதாவின் லாப்-டாப் , பேஸ் புக் சாட்டிங்கையும் அவர்கள் ஆராய்ந்து வருவதாக யாழில் இருந்து கிடைக்கும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. இப்போதெல்லாம்பெண்கள் காதலனை ஏமாற்றுவது என்பது சகஜமாகிப்போய்விட்டது. ஆனால் அதற்காக காதலியை கடத்தவேண்டும் என்ற நியதி இல்லையே. ஆனால் இந்த விடையத்தில் காதலன் சற்று அதிகமாகவே கோபம் அடைந்துவிட்டார் போல தெரிகிறது. வெளிநாட்டில் காதலனை வைத்துக்கொண்டு, அவன் அனுப்பும் பெரும் பணத்தை எடுத்து யாழில் செலவு செய்துகொண்டு, போதாக்குறைக்கு வேறு காதலன் ஒருவரையும் வைத்திருந்தால் எந்த ஆணுக்கு தான் கோபம் வராமல் இருக்கும் சொல்லுங்கள் ?
http://www.athirvu.com/newsdetail/2285.html

Geen opmerkingen:

Een reactie posten