தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 25 februari 2015

நான் புலிகளின் தலைவரை வழி நடத்தவில்லை! தமிழரசுக் கட்சியிலிருந்து விலகி விட்டேன்: வித்தியாதரன்

மீண்டும் மகிந்த அவதாரம்: தினேஷ், விமல், கமன்பில,வாசு முயற்சி!
[ புதன்கிழமை, 25 பெப்ரவரி 2015, 10:13.53 AM GMT ]
தினேஷ், விமல், கம்மன்பில, வாசுதேவ ஆகியோர் மீண்டும் மகிந்தவின் அவதாரத்தை கொண்டு வருவதற்கு முயற்சிக்கிறார்கள் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று அக்கட்சியின் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தில் அநாதைகளாக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருப்பதனால் ராஜபக்சவின் நிழலையாவது கொண்டு வந்து கூட்டணியை கட்டியெழுப்புவதற்கு சிலர் முயற்சிக்கிறார்கள்.
உதயகம்மன்பில, தினேஷ் குணவர்தன, வாசுதேவ நாணயக்கார மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் புதிய கூட்டணியை உருவாக்கிக்கொண்டு ராஜபக்சவின் அவதாரத்தை கொண்டுவருவதற்கு பாரிய முயற்சி ஒன்றினை மேற்கொள்கிறார்கள் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCRZSUnu0I.html


நான் புலிகளின் தலைவரை வழி நடத்தவில்லை! தமிழரசுக் கட்சியிலிருந்து விலகி விட்டேன்: வித்தியாதரன்
[ புதன்கிழமை, 25 பெப்ரவரி 2015, 10:16.54 AM GMT ]
நான் ஒரு போதும் விடுதலைப் புலிகளின் தலைவரை வழி நடத்தவில்லை. அவரிடம் ஒரு வினாவைக் கூட 2002 இல் வினவவில்லை என கூறுகிறார் சிரேஸ்ட ஊடகவியலாளர் வித்தியாதரன்
வெளிப்படையாக இன்று தான் கூறுகிறேன். இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இருந்து விலகி விட்டேன். அவர்களின் கொள்கை பிடிக்கவில்லை என லங்காசிறி வானொலிக்கு வழங்கிய செவ்வியில் என்.வித்தியாதரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி - சுவிஸ் பழைய மாணவர் சங்கம் அமைப்பின் தலைவர் த.நீதிராஜா தலைமையில் வித்தியின் என் எழுத்தாயுதம் நூலின் அறிமுக விழா சுவிஸின் சூரிச் நகரில் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyCRZSUnu0J.html

Geen opmerkingen:

Een reactie posten