தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 24 februari 2015

என் தலைவர் ஈரோஸ் பாலகுமார்! பசீர் ஆதங்கம்

லசந்தவின் படுகொலை விசாரணை ஆரம்பம்….

கல்கிஸ்ஸ மேலதிக மாவட்ட நீதவான் மொஹமட் சஹாப்டீன் இந்த உத்தரவினை வழங்கியுள்ளார். லசந்த படுகொலை குறித்த வழக்கு விசாரணைகள் அண்மையில் கல்கிஸ்ஸ நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கடந்த அமைச்சரவையின் முக்கிய அமைச்சர் ஒருவர் புலனாய்வுப் பிரிவினரிடம் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், விசாரணைகளை மேற்கொள்ளுமாறு லசந்தவின் உறவினர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் நீதவானிடம் கோரியுள்ளனர்.
லசந்த படுகொலை சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


இந்த அனைத்து விடயங்களையும் கருத்திற்கொண்ட நீதவான் எதிர்வரும் மார்ச் மாதம் 20ஆம் திகதிக்கு வழக்கு விசாரணைகளை ஒத்தி வைத்துள்ளார். லசந்த படுகொலையுடன் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபயவிற்கு தொடர்பு உண்டு என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா அண்மையில் பகிரங்கமாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.Lasantha-Wikramuthunga

என் தலைவர் LTTE பாலகுமார்! பசீர் ஆதங்கம்

அது மட்டுமல்லாமல் பெரும் தலைவன் மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரஃபின் மரணத்துக்கு பிற்பாடு முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினை காப்பாற்றுவதற்கான வலுவையும் அறிவையும், ஞானத்தையும், புலனாய்வுத் திறனையும் எனக்கு தந்ததும் ஈரோஸ் தலைவன் பாலகுமாராகும்.
ஆகவே இன்று வரைக்கும் முஸ்லிம் காங்கிரஸ் காப்பாற்றப்பட்டது என்றால் இந்த ஈரோஸ் பசிரே தவிர முஸ்லிம் காங்கிரசின் பசீர் அல்ல என்ற கருத்தினை 22.02.2015 ஞாயிற்றுக் கிழமை ஏராவூரில் மர்ஹூம் றூபி மொஹைத்தின் மாதிரிக்கிராமம் ஒன்றினை திறந்து வைத்ததற்கு பிற்பாடு “இம்முறையும் பசிர் வெல்லுவாரு அது எப்படி என்று மேடையில் சொல்லுவாரு* என்ற தலைப்புடன் இடப்பெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னால் அமைச்சரும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான அல்-ஹாஜ் பசீர் சேகு தாவூத் தெரிவித்தார்.
முஸ்லிமாகவும், முஸ்லிம் காங்கிரசின் தலைவராக இருந்து கொண்டு ஈரோஸின் தலைவர் பாலகுமாரை விடுதலை செய்யக்கோரி கடிதம் எழுதியது சரிதானா? என பலர் தன்னிடம் கேற்பது சம்பந்தமாகவே நான் பாலகுமாரைப் பற்றி இங்கு உரையாற்ற கடமைப்பட்டுள்ளேன் எனக் கூறிய முன்னால் அமைச்சர் பசீர் சேகுதாவூத் அவர்கள் மேலும் கூறியதாவது, நான் இயக்கத்தில் இருக்கும் போது பாலகுமாரிடம் கற்றுக்கொண்ட அனுபவப்படிப்பு, அரசியல், ஆயுதம், வியூகம், புலனாய்வுத் துறை என்பனவே முஸ்லிம் காங்ரசியும் அதன் தலைமையையும் காப்பாற்ற எனக்கு உதவியது. அது மட்டுமல்லாமல் முதன் முதலில் வன்னி முகாமிலிருந்து வெளியேற்றப்பட்ட குடும்பம் என்றால் ஈரோஸ் தலைவன் பாலகுமாரின் குடும்பமே ஆகும்.
இப்போதும் எனக்கு அரசியல் கற்றுத்தந்த தலைவன் பாலகுமார் உயிருடன் இருக்கின்றார் என்ற சந்தேகம் எனக்குள் இருக்கின்றது. ஏனென்றால் கடந்த வட மாகாண சபைத் தேர்தலில் பாலகுமாரை கொண்டு வந்தால் வெல்ல முடியுமா என்ற கேள்வியினை பசில் ராஜபக்ஸவினால் கேட்கப்பட்டதாக அறியக்கிடைத்தது. பாலகுமார் பசில் ராஜபக்ஸ நினைப்பது போல் தன்மானம் இழந்த, இடம் மாறித்திறிகின்ற தலைவனாக நான் பாலகுமாரை பார்த்ததில்லை.
பாலகுமார் மக்களுக்காக போராடுபவன். சுத்தமான அரசியல் செய்யபவன், தத்துவ வாதி, நான் கண்ட தமிழ் தலைவர்களில் உன்னத தலைவன். அதிலும் என்னுடைய பார்வையில் சொல்லப் போனால் தந்தை செல்வாவை விடவும் பெரும் தலைவன். எனக்கு உயிர் ஊட்டியவர், உணர்வூட்டியவரும் அவரேயாவார். முதன் முதலில் எனக்கு பாராளுமன்ற பதவியை ஈரோஸ் தந்திரா விட்டிருந்தால் முஸ்லிம் காங்கிரஸ் என்னை கணக்கெடுத்தும் பார்த்திருக்காது.
நாங்கள் எல்லோரும் முஸ்லிம் ஆகையால் எமது மார்க்கத்தில் மாற்றுமத்தினர் செய்த உதவிகளை மறக்கச் சொல்லி எந்த இடத்திலாவது குறிப்பிடப்பட்டுள்ளதா என்ற கேள்வியினையும் சமூகத்துக்கு ஒரு கேள்வியாக தொடுத்தார் முன்னாள் அமைச்சர் பசிர் சேகுதாவூத்.
ஆகையால் பாலகுமாரின் உயிருக்காக குரல் கொடுப்பது எனது தார்மீகப் பொறுப்பாகும். அதனடிப்படையில் புதியதோர் நல்லாட்சி உறுவாக்கப்பட்டுள்ளது என்ற இந்த காலகட்டத்தில் அந்த முகாமில் இருக்கின்றார், இந்த முகாமில் இருக்கின்றார் என்ற கதைகள் எழுந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் பாலகுமார் அண்ணனையும், அவருடைய மகன் சூரிய தீபனையும் என்னால் வெளியில் கொண்டுவர முடியுமாக இருந்தால் எனது பாராளுமன்ற பதவியைக் கூட தூக்கி எறிவதற்கு தான் தயாராக உள்ளதாக மிக உணர்ச்சி வசப்பட்டவாராக முஸ்லிம் காங்கிரசின் தவிசாளர் பசீர் செகுதாவூத் உரையாற்றினார்.
அவருடைய பிள்ளைகள் எனது பிள்ளைகளைப் போன்றவர்கள் என்றே நான் எப்போதும் நினைத்து வாழ்ந்து கொண்டிருப்பவன். ஆகவே எமது முஸ்லிம் சமூகம் இவ்வாறு நாங்கள் செய்கின்றோம் என பெருமைப்பட வேண்டும் அதனை தமிழ் சமூகம் அங்கீகரிக்கவும் வேண்டும் என “இம்முறையும் பசீர் வெல்லுவாரு எப்படி என்று மேடையில் சொல்லுவாரு* என்ற தொனிப்பொருளில் இடம் பெற்ற கூட்டத்தில் வைத்து முன்னாள் அமைச்சர் அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/98572.html

Geen opmerkingen:

Een reactie posten