தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 25 februari 2015

மகிந்தவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும்: அரநாயக்க பிரதேச சபையில் யோசனை

போராட்டம் காரணமாக பொரளைப் பகுதியில் பாரிய போக்குவரத்து நெரிசல்
[ புதன்கிழமை, 25 பெப்ரவரி 2015, 11:16.21 AM GMT ]
போராட்டம் காரணமாக பொரளைப் பகுதியில் பாரியளவில் போக்குவரத்து நெரிசல் நிலைமை ஏற்பட்டுள்ளது.
பொரளை பொதுமயான சந்தி மற்றும் வோர்ட் பிளேஸ் ஆகிய இடங்களில் இவ்வாறு போக்குவரத்து நெரிசல் நிலைமை ஏற்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தி வரும் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றின் காரணமாக இவ்வாறு போக்குவரத்து நெரிசல் நிலைமை ஏற்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்களிடம் பணம் அறவீடு செய்வது தொடர்பிலான சுற்று நிருபத்திற்கு எதிராகவே இவ்வாறு போராட்டம் நடத்தப்படுவதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் நாஜீத் இந்திக்க தெரிவித்துள்ளார்.
ஆர்ப்பாட்டப் பேரணி கோட்டே ரயில் நிலையம் வரையில் செல்ல உள்ளதாக நாஜீத் இந்திக்க குறிப்பிட்டுள்ளார்.
சுற்றறிக்கையை மீறி பாடசாலைகளில் பணம் அறவீடு - கல்வி அமைச்சு
பாடசாலைகளில் அநாவசியமாக பணம் அறவிடுவதை தடுக்கும் வகையில் விடுக்கப்பட்ட சுற்றறிக்கையையும் மீறி சிலர் பணம் அறவிடுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாறான பணம் அறவிடுவதாக பல பகுதிகளில் இருந்தும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.
அரசாங்க பாடசாலைகளுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் போதும் பாடசாலை மாணவர்களிடமும் அநாவசிய பணம் அறவிடுவதை தடுக்கும் வகையில் கல்வி அமைச்சு கடந்த மாதம் 29ம் திகதி விசேட சுற்றறிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் சுற்றறிக்கையை மீறி பணம் அறவிடப்படுவதாக கல்வி அமைச்சு கூறியுள்ளது.
முறைப்பாடு தொடர்பாக 10 பேர் குறித்து இதுவரை விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதனோடு தொடர்புடைய தேசிய பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த அதிபர் மற்றும் ஆசிரியர்களை பாடசாலைகளில் இருந்து இடம் மாற்றல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கல்வி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyCRZSUnu1E.html

மகிந்தவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும்: அரநாயக்க பிரதேச சபையில் யோசனை
[ புதன்கிழமை, 25 பெப்ரவரி 2015, 11:29.44 AM GMT ]
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதமர் வேட்பாளராக மகிந்த ராஜபக்ச நிறுத்தப்படாது போனால், ரணில் விக்ரமசிங்க அமோக வெற்றியை பெறுவார் என அரநாயக்க பிரதேச சபையின் ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால், மகிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என அரநாயக்க பிரதேச சபையில் யோசனை ஒன்றையும் அவர்கள் நிறைவேற்றியுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர் அஜந்த திஸாநாயக்க யோசனையை முன்வைத்ததுடன் அதே கட்சியை சேர்ந்த என்.எஸ். சோமவர்தன அதனை வழிமொழிந்தார்.
மகிந்த ராஜபக்ச பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படாவிட்டால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாக பிளவுபட்டு, ஐக்கிய தேசியக் கட்சி கட்டாயம் வெற்றி பெறும்.
இதனால், கட்சியை பாதுகாக்கவும் வெற்றி பெற செய்யவும் மகிந்தவுக்கு பொதுத் தேர்தலில் தலைமைத்துவத்தை வழங்க வேண்டும் என யோசனை முன்வைத்து உரையாற்றிய திஸாநாயக்க தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyCRZSUnu1G.html

Geen opmerkingen:

Een reactie posten