தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 27 februari 2015

600 காவற்துறை அதிகாரிகளின் கொலைக்கும் தமக்கும் தொடர்பில்லை - கருணா

மட்டக்களப்பிற்கு நிதியமைச்சர் விஜயம் (படங்கள் இணைப்பு)
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தனது அமைச்சுப் பொறுப்பை பொறுப்பேற்றதன் பின்னர் முதல் தடவையாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு தனது விஜயத்தினை இன்று மேற்கொண்டிருந்தார்.

இவ் விஜயத்தின் போது கல்குடா தொகுதியில் உள்ள முஸ்லீம் மக்களால் ஓட்டமாவடி பிரதேச சபைக்கு முன்பாகவும், தமிழ் மக்களால் கறுவாக்கேணி சந்தியிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் எல்.ரீ.எம்.புர்கான், கே.மோகன், ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட் மற்றும் உறுப்பினர்களான ஐ.ரீ.அஸ்மி, ஏ.எல்.ஜூனைட், முஹாஜிரீன், எம்.அஹமட், பிரதி அமைச்சர் அமீர் அலியின் இணைப்புச் செயலாளர் எச்.எல்.எம்.கலீல் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

கல்குடாத் தொகுதியில் இரண்டு இடங்களிலும் இடம் பெற்ற வரவேற்பு நிகழ்வுகளின் போதும் அமைச்சருக்கு பொன்னாடை போர்த்தப்பட்டது.


27 Feb 2015
http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1425039656&
archive=&start_from=&ucat=1&

உண்மைகளைக் கண்டறிவதன் மூலமே இனப்பிரச்சினைக்கு அரசியல்தீர்வை எட்ட முடியும்! தென்னாபிரிக்க குழுவிடம் சம்பந்தன்
உண்மைகள் கண்டறியப்படுவதன் ஊடாகவே இனப்பிரச்சினைக்கு நிலையான அரசியல் தீர்வை எட்ட முடியும் என்பதே தமது நிலைப்பாடு என்று,தென்னாபிரிக்க வெளிவிவகார பிரதி அமைச்சர் தலைமையிலான குழுவினரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

உண்மைகள் கண்டறியப்படுவதன் ஊடாகவே இனப்பிரச்சினைக்கு நிலையான அரசியல் தீர்வை எட்ட முடியும் என்பதே தமது நிலைப்பாடு என்று,தென்னாபிரிக்க வெளிவிவகார பிரதி அமைச்சர் தலைமையிலான குழுவினரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கை அரசு, தென்னாபிரிக்காவின் உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாடுகளை ஒத்த நடவடிக்கைகளை இங்கு முன்னெடுப்பதற்கு திட்டமிட்டுள்ளது. இதற்காக தென்னாபிரிக்காவின் துணை ஜனாதிபதி சிறில் ரமபோஷ அடுத்த மாதம் இலங்கைக்கு வருகை தந்து பேச்சுக்களை நடத்தவுள்ளார். இந்த நிலையில் அதற்கு முன்னோடியாக தென்னாபிரிக்க வெளிவிவகார பிரதி அமைச்சர் நொமைண்டியா தலைமையிலான குழுவினர் கொழும்புக்கு நேற்றுமுன்தினம் கொழும்புக்கு வருகை தந்துள்ளனர்.

இவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை நேற்று மாலை கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடினர். கொழும்பு - தாஜ் சமுத்திரா ஹோட்டலில் மாலை 5 மணியிலிருந்து இரவு 7 மணி வரை நடைபெற்ற இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரைச் சந்தித்து இவர்கள் கலந்துரையாடினர். இந்தச் சந்திப்பு தொடர்பாக கருத்து வெளியிட்ட, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்-

"இலங்கையில் ஆட்சி மாற்றத்தின் பின்னர் தென்னாபிரிக்காவின் அனுசரணையுடன் இங்கு முன்னெடுக்கப்படவுள்ள நல்லிணக்க முயற்சிகளை நாம் வரவேற்கின்றோம். தென்னாபிரிக்கா மத்தியஸ்தம் வகிக்க இலங்கையின் புதிய அரசுடன் ஆக்கபூர்வமான - அர்த்தமுள்ள பேச்சுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகவுள்ளது. ஆனால், உண்மைகள் கண்டறியப்பட வேண்டும். இதற்கு தென்னாபிரிக்கா, இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்"

"இறுதிப் போரின்போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் மீறல் தொடர்பில் ஐ.நாவின் சர்வதேச விசாரணை அறிக்கையை தமிழ் மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்கள். உண்மைகள் வெளியில் வரவேண்டும் என்பதிலும். தமக்கு நீதி கிடைக்கவேண்டும் என்பதிலும் தமிழ் மக்கள் உறுதியாகவுள்ளனர்" என்றார்.
27 Feb 2015
http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1425051220&archive=&start_from=&ucat=1&
குமார் குணரட்னத்திற்கு குடியுரிமை நிராகரிப்பு
முன்னணி சோசலிச கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் குமார் குணரட்னத்திற்கு குடியுரிமை நிராகரிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு குடியுரிமை வழங்குமாறு கோரி குமார் குணரட்னம் சமர்ப்பித்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நிஹால் ரணசிங்க இதனை உறுதி செய்துள்ளார்.

சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய இன்றைய தினம் குறித்த விண்ணப்பத்தை நிராகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். குமார் குணரட்னத்தை கைது செய்ய அல்லது நாடு கடத்த தடை விதிக்குமாறு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
27 Feb 2015

600 காவற்துறை அதிகாரிகளின் கொலைக்கும் தமக்கும் தொடர்பில்லை - கருணா
1990ம் ஆண்டு ஜுன் மாதம் 600 காவற்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டப்பட்டமைக்கும் தமக்கு தொடர்பில்லை என்று கருணா தெரிவித்துள்ளார். அரசாங்க தொலைகாட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் இடம்பெறும் போது தாம் வடக்கில் இருந்ததாக அவர் கூறியுள்ளார்.

இந்த கொலைகள் மூலம் விடுதலைப் புலிகளே யுத்தக் குற்றங்களை புரிந்துள்ளதாகவும், இறுதி யுத்தத்தில் இராணுவத்தினர் எந்த யுத்தக் குற்றங்களையும் மேற்கொள்ளவில்லை என்றும் அவர் இந்த செவ்வியில் கூறியுள்ளார்.

மேலும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை விடுதலைப் போராளிகள் என்று கூற முடியாது எனவும், அவர்கள் பொது மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தியதாகவும் கருணா குற்றம் சுமத்தியுள்ளார்.
27 Feb 2015

Geen opmerkingen:

Een reactie posten