தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 25 februari 2015

புலிகளின் வான்படைப் பிரிவு பொறுப்பாளரின் கணனி தொடர்பில் விசாரணை?

தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படைப் பிரிவுக்கு பொறுப்பாக கடமையாற்றி வந்த குணசாந்தன் சந்திரலிங்கராஜா என்பவரின் கணனி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குணசாந்தன் பயன்படுத்திய கணனி மலேசியாவிலிருந்து இலங்கைக்கு தருவிக்கப்பட்டுள்ளது.
மலேசிய பொலிஸார் இந்தக் கணனியை இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்தக் கணனி தொடர்பில் இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை நடத்தியுள்ளனர்.
விமான ஓடு பாதைகள் அமைத்தல், விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டமை உள்ளிட்ட விபரங்கள் இந்தக் கணனித் தகவல்களிலிருந்து கிடைக்கப்பெற்றுள்ளன.
தமிழீழ விடுதலைப் புலிகள் ஸ்லிங் ரக இரண்டு விமானங்களை செக் குடியரசிடமிருந்து, பங்களாதேஸ் விவசாய நிறுவனமொன்றின் ஊடாக இலங்கைக்குள் கொண்டு வந்துள்ளனர் என குறித்த பத்திரிகையில் மேலும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
குணசாந்தனிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குணசாந்தன் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட போதும் குறித்த விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்ட விதம் தொடர்பில் சில சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும் தற்போது குணசாந்தனின் கணனியின் ஊடாக இந்தத் தகவல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறித்த சிங்கள ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyCRZSUnt6A.html

Geen opmerkingen:

Een reactie posten