தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 23 februari 2015

ராணுவத்தினர் பலமாக இருக்கும்வேளையில் புலப்படுகிறது விடுதலைப் புலிகளின் வலு !

யாழ் ஊர்காவற்துறையில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்ட்பு !

[ Feb 23, 2015 12:00:00 AM | வாசித்தோர் : 2895 ]
ஊர்காவற்றுறை நாரந்தனைப் வடக்குப் பகுதியில் கைகள் கட்டப்பட்ட நிலையில் யுவதி ஒருவரின் சடலம் ஊர்காவற்றுறைப் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து தெரியவருவதாவது, நாரந்தனை வடக்கு பகுதியைச் சேர்ந்த உதயகுமார் விபூசனா (வயது 19) யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் கல்வி கற்று வருகின்றார். நேற்று முற்பகல் 11மணியளவில் கல்வி நிலையத்திற்குச் செல்வதாக கூறி வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார் விபூசிகா.
பின்னர் மாலை 4 மணியளவில் அவரது வீட்டில் இருந்து 700 மீற்றர் தூரத்திலுள்ள பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து கைகள் கட்டப்பட்ட நிலையில் விபூசிகாவின் சடலம் ஊர்காவற்றுறை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.  தற்போது உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது. மரணம் குறித்த விசாரணைகளை ஊர்காவற்றுறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

http://www.athirvu.com/newsdetail/2367.html


சற்று முன்னர் விமல் வீரவங்சவின் மனைவி கைதுசெய்யப்பட்டுள்ளார் என அறியப்படுகிறது !

[ Feb 23, 2015 12:00:00 AM | வாசித்தோர் : 2555 ]
முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவங்சவின் மனைவியான ஷசி வீரவங்ச கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். முன்னாள் அமைச்சரின் மனைவி 2010ஆம் ஆண்டு, பொய்யான தகவல்களை கொடுத்து இராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் அந்த கடவுச்சீட்டு 2009ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் திகதி காலாவதியான அவரது சாதாரண கடவுச்சீட்டுடன் ஒப்பிட்டு பார்க்கையில் அதில் அடங்கியுள்ள தகவல்கள் வித்தியாசமானதாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

ராணுவத்தினர் பலமாக இருக்கும்வேளையில் புலப்படுகிறது விடுதலைப் புலிகளின் வலு !

[ Feb 23, 2015 12:00:00 AM | வாசித்தோர் : 6290 ]
வன்னியில் தற்போதுள்ள மக்கள் தங்கள் துயரங்களை வெளிப்படுத்துவதற்கும், தங்கள் குடும்பத்தவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிவதற்குமான தேவை அதிகமாகக் காணப்படுகின்றது என சில நாள்களுக்கு முன்னர் அப்பகுதிக்கு சென்று திரும்பிய பிரிட்டனின் இலங்கைக்கான பிரதித் தூதுவர் லாரா டேவிஸ் தெரிவித்துள்ளார். நான் கடந்த சில நாட்களுக்கு முன்னரே வன்னிக்கு பயனம் மேற்கொண்டுவிட்டு திரும்பியுள்ளேன். முன்னர் விடுதலைப்புலிகளின் கோட்டையாகவும், இறுதிப்போர் இடம்பெற்ற பகுதியாகவும் விளங்கிய அந்தப் பிரதேசத்திற்குச் செல்வதற்கு எனக்குக் கிடைத்த முதல் வாய்ப்பு இது.
மோதல்கள் எவ்வாறு முடிவுக்கு வந்தன என்பதையும், அதனால் ஏற்பட்டுள்ள காயங்கள் எப்படி இன்னமும் ஆறாமல் உள்ளன என்பதையும் புறக்கணிக்க முடியாது. மிகச் சிறந்த வீதிகளூடாக பயணம் செய்தவேளை எறிகணை மற்றும் துப்பாக்கிச் சன்னச் சிதறல்களால் பாதிக்கப்பட்ட பல வீடுகளை என்னால் பார்க்க முடிந்தது. பல இராணுவ நினைவுத் தூபிகளைக் காண முடிந்தது. விடுதலைப்புலிகளின் வலுவையும் உணரமுடிந்தது. அப்பகுதியில் தனியாருக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்கள் எவற்றையும் காணமுடியவில்லை. இராணுவத்தின் நலன்புரி கடைகளைக் காணமுடிந்தது. பலர் அவற்றால் தங்களது சிறு வியாபாரம் பாதிக்கப்படுவதாக முறையிடுகின்றனர்.
மொத்தத்தில் இராணுவ அதிகார பரவலாக்கத்தின் மத்தியிலும் புலப்படுகிறது ,விடுதலைப்புலிகளின் வலு என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.athirvu.com/newsdetail/2369.html

Geen opmerkingen:

Een reactie posten