தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 28 februari 2014

விஜய் தொலைக்காட்சியையும் அவர்களால் தெரிவு செய்யப்பட்ட பாடகர்கள் செயலையும் க(த)ண்டிப்பது யார்??



மகிந்தரின் மண்ணில் சூப்பர் சிங்கர் குத்தாட்டம்! பின்னனியில் CID – “ரோ” அம்பலம்

தமிழருக்கு பூந்தமல்லி சிறப்பு முகாமில் நடந்த! நடக்கும்! கொடுமை அம்பலம்…



லண்டனில் ஜெயவாணி குழந்தைகளுடன் தற்கொலை செய்த சம்பவம்: புதிய தகவல்கள் கசிவு
சமூக ஆர்வலர்களின் எச்சரிக்கையினை கவனத்தில் கொள்ளாமையினால் தற்கொலை இடம்பெற்றுள்ளதாக ஜெயவாணி மற்றும் அவருடைய இரு குழந்தைகளின் மரணம் தொடர்பில் புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன.

அதாவது தாய் குழந்தைகளை கொல்வதற்கு சில வாரங்களின் முன்பிருந்தே அவர்களை தொடர்ச்சியாக துன்புறுத்தியதாகவும் அது தொடர்பில் சமூக சேவை அதிகாரிகளிற்கு அறிவித்த பொழுதிலும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லையென பராமரிப்பாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். 

தை மாதம் 26ம் நாள் வேலை முடிந்து வீடு திரும்பிய சக்திவேல் வாகீஸ்வரன் (36) தன்னுடைய ஐந்து வயது மற்றும் எட்டு மாதங்களேயான இரு குழந்தைகளின் சடலங்களையும் கறுப்பு நிற பையினுள் இருந்து கண்டெடுத்தார். அவரது மனைவியும் இறந்து சடலமாக காணப்பட்டார். 

http://www.lankaroad.com/index.php?subaction=showfull&id=1393365397&archive=&start_from=&ucat=1&
இம்மரணங்கள் ஏற்படுவதற்கு பாரிய தவறொன்று வழிவகுத்துள்ளதாக கூறப்படுகின்றது. 

திருமதி ஜெயவாணி வாகீஸ்வரனின் குழப்பகரமான மனநிலை தொடர்பாக அறிவிப்பதற்காக சிறுவர் சமூக பாதுகாப்பு உறுப்பினர்கள் பல முறை சமூக தொண்டு நிறுவன முகாமையாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போதிலும் அவர் அத்தொலைபேசி அழைப்பிற்கு பதிலளிக்கவில்லையென குற்றஞ்சாட்டப்படுகின்றது. 

இம்மரணம் நிகழ்வதற்கு 4 வாரங்களின் முன்னர் இத்தம்பதியினர் குடும்ப பாதுகாப்பு அதிகாரிகளிடத்தே விஜயம் மேற்கொள்ள வேண்டியிருந்ததாயினும், அவர்கள் உரிய திகதியில் விஜயம் மேற்கொள்ளவில்லை. ஆகையால் பிள்ளைகளின் பாதுகாப்பு தொடர்பில் விசேட அவதானம் செலுத்திய அதிகாரிகள் முகாமையாளரை இது தொடர்பில் தலையீடு செய்யுமாறு கேட்டுக்கொண்டனர். 


முகாமையாளர் உரிய கவனத்தை செலுத்த தவறிவிட்டார். சக்திவேலின் தற்போதைய நிலை குறித்து கருத்து வெளியிட்ட அவருடைய நண்பர் கௌதமி மஹாதேவ, 

சக்திவேல் தன்னுடைய இரு குழந்தைகளை எண்ணி அழுதவாறே உள்ளார். அவரால் அவருடைய வீட்டிலும் வசிக்க இயலவில்லை. குழந்தைகளின் ஞாபகங்களினால் பெரிதும் துன்புறுகின்றார் என்று கூறினார். 

25 Feb 2014

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்

சிறிலங்கா மீதான அமெரிக்காவின் 56 பக்க குற்றப்பட்டியலின் சுருக்கம்!!

donderdag 27 februari 2014

இதன் பிறகும் சேர்ந்து வாழ்வது சாத்தியமா ?

சேர்ந்து வாழ்வது சாத்தியமா ? உங்கள் கருத்து என்ன ?
*********************************************

donderdag 6 februari 2014

திட்டமிட்டு ஆதாரங்கள் அழிப்பு! அவுஸ்திரேலியாவின் குற்றச்சாட்டை இலங்கை இராணுவம் நிராகரிப்பு!!

கச்சதீவு விவகாரத்தில் மத்திய அரசு தெரிவித்த முரணான தகவல்! விளக்கம் கோரி வழக்கு தாக்கல்!!


கச்சத்தீவு விவகாரத்தில் மத்திய அரசு முன்னுக்கு பின் முரணாக தகவல் வழங்கியமை குறித்து விளக்கம் தரக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் கச்சதீவு விவகாரம் தொடர்பாக கடந்த வாரம் மத்திய அரசு தனது பதில் மனுவை தாக்கல் செய்தது.
அதில் கச்சதீவு விவகாரம் முடிவடைந்த ஒன்று. தமிழக மீனவர்களுக்கு கச்சதீவில் மீன் பிடிக்க எவ்வித உரிமையும் இல்லை. ஆண்டுதோறும் இங்கு நடைபெறும் அந்தோனியார் கோயில் திருவிழாவில் கலந்து கொள்ள மட்டுமே அவர்களுக்கு அனுமதி உண்டு என்று மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
இன்று உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது மீனவர் தரப்பு வழக்கறிஞரான பீட்டர் ராயன் தனது வாதத்தை தொடக்கி வைத்து வாதாடினார். அப்போது நீதிமன்றத்தில் மத்திய அரசு தவறான தகவலை தெரிவித்துள்ளதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
கச்சதீவை இலங்கைக்கு தாரை வார்த்த சமயத்தில், நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பிக்கள் கேள்வியெழுப்பிய போது பதிலளித்த மத்திய அமைச்சரான ஸ்வரன் சிங், கச்சதீவில் தமிழக மீனவர்களுக்கு மீன் பிடிக்கவும், மீனவர்கள் தங்கள் வலைகளை உலர்த்திக்கொள்ளவும் உரிமை உண்டு என்று ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்து அந்த ஒப்பந்தத்தையும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.
ஆனால் மத்திய அரசோ தற்போது உண்மைக்கு மாறாக இரு நாட்டு அரசுகளுக்கும் இடையே நடைபெற்ற கடிதப் போக்குவரத்தை காரணம் காட்டியுள்ளது தவறான தகவல், எனவே நீதிமன்றம் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என பீட்டர் கேட்டுக்கொண்டார்.
பின்னர் நீதிபதிகள் இவ்வழக்கின் அடுத்த விசாரணையை மார்ச் மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.
இந்நிலையில், உயர்நீதிமன்றத்தில் இன்று பீட்டர் ராயன் தாக்கல் செய்துள்ள மனுவில்,
கச்சதீவில் மீன்பிடி உரிமையில்லை என கடந்த வாரம் மத்திய அரசு பதில் மனுத் தாக்கல் செய்திருந்தது. ஆனால், 1974ல் கச்சதீவில் மீன்பிடி உரிமையுள்ளதாக மத்திய அமைச்சர் நாராயணசாமி விளக்கம் அளித்துள்ளார்.
எனவே, மத்திய அரசின் பதில் மனுவை ஏற்கக் கூடாது. கச்சதீவு பகுதியில் மீன்பிடிப்பது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் தர வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

http://news.lankasri.com/show-RUmsyCTaMdft3.html

பலவந்தமாக 54 இலங்கையரை நாடுகடத்தியது அவுஸ்திரேலியா!