தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 21 oktober 2011

மிக கொடூரமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்ட கடாபி!!


சரணடைந்த கோழை கடாபியும் சரணடைதவனை அடித்தே கொன்ற லிபிய பேய்களும் அதனை பாராட்டிய உலக தலைமை அரக்கர்களும்


மனிதாபிமானம் பற்றி வாய் கிழியப்பேசும் ஐரோப்பிய அரசுகள் கடாபி கொல்லப்பட்டதை வரவேற்றதும் அங்குள்ள மனிதாபிமான அமைப்புகள் எனச்சொல்லப்படுபவை மௌனம் சாதிப்பதும் அவர்கள் மனிதர்களே அல்ல என்பதை உலகுக்கு உணர்த்தவே இல்லை.சரணடைந்தவனை அடித்தே கொன்ற அரக்கர்களை பாராட்டி தம்மை வெளிப்படுத்திய இவர்களை யார் தண்டிப்பதோ??

donderdag 20 oktober 2011

படமெடுத்த புலனாய்வுத்துறையினரை படமெடுத்த தமிழர்கள் !

19 October, 2011

தமிழ்த்தலைமைகள் தமிழரை கொள்ளையடிக்க சிங்களம் பரவாயில்லை என தொடர்ந்து குமுறும் தமிழ் மக்கள் !!

சம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது!‏
-திருமலை அமுதன்
தமிழரசுக் கட்சியினாலும் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியாலும் ஈழத் தமிழர்களுக்கு அறிமுகமானவர் திரு. இரா சம்பந்தன். தமிழினத்தின் தலைவர்கள் கொல்லப்பட்டு வெற்றிடங்கள் ஏற்பட சம்பந்தன் தமிழினத்துக்குத் தலைவர் ஆகிவிட்டார். இவர் தமிழினத்துக்காக இதுவரை எந்தத் தியாகத்தையும் செய்தது கிடையாது. திருகோணமலை மாவட்டத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஆக்கப்படுவார். தமிழரசுக் கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி இவரது வளர்ச்சிக்கு உதவி வந்தது. இறுதியாக தலைமைக்குப் பஞ்சம் எற்பட்ட இந்தப் பத்தாண்டுகளில் விடுதலைப் புலிகளின் புண்ணியத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற அரசியல் கூட்டணிக்கும் தலைவர் ஆனார் திரு. சம்பந்தன்.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவிதான் தமிழ் இனத்தின் அதி உயர்ந்த பதவியாகும். ஈழத்தில், அதற்கும் மேலான பதவி மந்திரி பதவியாகும். டக்ளஸ் தேவானந்தாவும், விநாயகமூர்த்தி முரளீதரனும் எம்.பி. பதவியையும் தாண்டி மந்திரிப் பதவியை வரித்துக்கொண்டுள்ளனர். பதவிகளை அடைய சம்பந்தன் போன்றவர்களுக்கும் விருப்பம்தான். ஆனால் தமிழர்கள் துரோகி என்று கூறி முத்திரை குத்திவிடுவார்கள் என்ற பயத்தினால் இந்த எம்.பி. பதவியே போதும் என்று கண்டனர். சம்பளமும், சலுகைகளும் கூடவே அதிகாரமும் கிடைக்கும் போது இதனை எக்காரணம் கொண்டும் நழுவவிடாது பார்த்துக் கொண்டு மேலும் வருவாயைப் பெருக்க வேண்டும் என்பது இவர்களது குறிக்கோள் ஆகும்.

zaterdag 3 september 2011

woensdag 10 augustus 2011

Genocide of Eelam Tamils - presented by Vaiko (in English)

Sri Lanka war crimes: War survivors relive horror of Sri Lanka's killing fields

கொலைக்களத்தின் கண்கண்ட சாட்சியங்கள் காணொளி - பாதிக்கப்பட்டோரின் வாக்குமூலங்கள்
[ செவ்வாய்க்கிழமை, 09 ஓகஸ்ட் 2011, 11:47.43 PM GMT ]
 

maandag 1 augustus 2011

Sinhala Army killed our people by carrying out Phosphorus bomb attack

பொஸ்பரஸ் குண்டுகளை இலங்கை இராணுவம் பாவித்தது: ஆதாரப் புகைப்படங்கள் !

zondag 10 juli 2011

zondag 15 mei 2011

அதிகாரவர்க்கத்தின் கொடுமையை அழிக்க இன்னொரு அதிகாரவர்க்கமா!!

கடாபி அமெரிக்க எதிராளிகளின் நம்பிக்கை நட்சத்திரம் என்ற ஒரே காரணத்துக்காக
ஜனநாயக மீட்பு என்றபெயரில் நேட்டோ செய்யும் அட்டகாசத்துக்கு முடிவேயில்லை
போலிருக்கிறது.இவர்களேஅதிகார வெறிபிடித்தவர்கள்,இவர்களால் சாதாரண
வேற்றுநாட்டு மக்களுக்கு சுதந்திரமாவது,கிடைப்பதாவது.அடக்கியாளுவதை ,அந்நிய நாடுகளில் அறிமுகப்படுத்தியதே பிரிட்டனும் பிரான்சும்தான். இவர்களை நம்பி புரட்சயை தொடங்கியவர்கள் இவர்களின் கைக்கூலிகளே
தவிர மக்களை சுதந்திரத்துக்கு இட்டுச்செல்லும் புனிதர்களல்ல என்பதை காலம்தான் உணர்த்தவேண்டும்.பாவம் மக்கள்!!


woensdag 27 april 2011

கட்டளைத் தளபதிகளில் ஒருவரான கேணல் பாணு கொல்லப்பட்டுள்ளார்

 
[ புதன்கிழமை, 27 ஏப்ரல் 2011, 02:50.47 PM GMT ]

Former UN Deputy Secretary-​General tells Channel 4 News Ban is powerless to defy Russia and China

[ Wednesday, 27 April 2011, 07:43.49 AM GMT +05:30 ]Ban Ki-Moon has come under attack for failing to push for a war crimes probe in Sri Lanka. But a former UN Deputy Secretary-General tells Channel 4 News Ban is powerless to defy Russia and China.
A former senior UN official has defended Secretary-General Ban Ki-Moon after critics accused the UN chief of failing to take on China and Russia in pushing for a war crimes investigation in Sri Lanka. Ban said he lacks the authority to personally order an inquiry into allegations of mass killings of civilians in the final months of the island nation's bloody civil war in 2009. The advocacy group Human Rights Watch say he could set up an international investigation without the backing of the UN security council. Critics say Ban is reluctant to take on China and Russia - veto-wielding permament council members who are against a probe into the Sri Lankan conflict - as he intends to stand for re-election for the UN's top job and needs their backing. But Mark Malloch Brown, who was Kofi Annan's deputy in 2006, told Channel 4 News Ban is in an almost impossible position as a "new cold war of ideas" puts Western liberals on a collision course with China and Russia on human rights. A 200-page report commissioned by Ban concluded that up to 40,000 civilians may have died in the final act of the Sri Lankan government's war against the Tamil Tiger rebels. The report accuses the government of widespread shelling including targeting field hospitals, as well as other violations of human rights. "It's clear that for any Secretary-General facing re-election, he is walking in a political minefield." John J Metzler Three months after the conflict, Channel 4 News broadcast footage apparently showing government troops summarily executing Tamils. Sri Lanka's President Mahinda Rajapaksa has urged supporters to rally on May Day against which the report, which the government says is based on false accusations from human rights groups and pro-Tiger members of the Tamil diaspora. Ban said an international investigation would need the co-operation of the Sri Lankan government - something it has already rejected - or a Security Council referral likely to be vetoed by China and Russia. Last week Ban appeared to call for Russia to support his expected bid for a potential second term in the top UN post after the end of this year, telling President Dmitry Medvedev: "I'd like to really count on your strong support, leadership and guidance in continuing my work as Secretary-General." A spokesman for Ban later denied he was asking for personal support, saying: "What he was asking for was Russia's support for the full range of United Nations work on major topics." The former South Korean foreign minister has not publicly declared his candidacy for the election, but diplomats say he has made his intentions to seek re-election clear in private, and the United States and other key Security Council members have given preliminary pledges of support for a second five-year term. John J Metzler, a veteran UN correspondent and lecturer in Asian Studies at St John's University in New York, told Channel 4 News: "I believe he clearly seeks re-election, and he's certainly within his rights to do such. "He must balance the interests of the five permanent members of the Security Council. He must tread very, very carefully when it comes to humanitarian issues. "It's clear that for any Secretary-General facing re-election, he is walking in a political minefield, especially with issues like human rights violations. Many of these kinds of governments are going to say: 'We are a sovereign state. We didn't invite you to come here.' "Ban Ki Moon has been a very active and positive force in keeping humanitarian pipelines open in Haiti or Pakistan after the floods. When it comes to something as sharp and upfront as Sri Lanka or Darfur...then they back away and they become political and they become very, very cautious." "It's hard for a Secretary-General to prevail when he is in the middle of a field with elephants trampling around." Mark Malloch Brown Mr Malloch Brown said the issue highlighted a "new cold war of ideas" with Western liberal democracies calling for greater respect for the rights of minorities clashing with powers like Russia and China, which reject greater international scrutiny an affront to national sovereignty. He said: "It is too much of an apparent war crime to go uninvestigated. But if he doesn't have the support of the international community and if the Sri Lankans continue to not just stonewall but to actively campaign against him in the UN it would be in practical terms almost impossible to complete any inquiry. "He may have fallen a fence before human rights would have wanted him to fall, but this was not something he was ever going to be able to bring to fruition. "Sri Lanka could give anyone a masterclass in using the powers of the UN to its own political advantage. It is brilliant at doing this and ruthless at doing this. "This is an issue that is clearly dividing the new east and west. And Sri Lanka is in a sense from the point of view of the east more important than what is happening in the Arab world. "There is a meeting of domestic intelligence chiefs, which the Russians host each year, and at the one after what happened in Sri Lanka to the Tamils, the Sri Lankan security guys were there, and they got a standing ovation. "There was a view that the Sri Lankans had proved that there could be a military solution - that you don't have to follow this Western defeatist notion, as they see it, that you always have to deal with these terrorists. The Russians obviously felt that in Chechnya there was a military solution too. "So Ban is up against this really tough, ingrained opposition, which captures the fundamental dispute with human rights in the global community at the moment. It's hard for a Secretary-General to prevail when he is in the middle of a field with elephants trampling around."
channel4.com




woensdag 6 april 2011

தளபதி சூசையின் உடலத்துக்கு பக்கத்தில் இருப்பவர் யார்: தொடரும் மர்மம் !

5 வயது சிறிமியைச் சுட்ட கும்பலைத் தமிழர்கள் சும்மா விடமாட்டார்கள்: Daily Star

பிரான்சில் தமிழ் இளைஞரை கொலைசெய்த 20 வயதுடைய இலங்கை தமிழர் கைது

பிரான்சின் தலைநகர் பாரிசின் புறநகர் பகுதியான லாகூர்நெவ்வில் அண்மையில் 26 வயதுடைய சங்கரதாஸ் தேவராசா என்ற இளைஞரை மிகக் கோரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்த குழுவிலுள்ள முக்கிய குற்வாளி கைது செய்யப்பட்டுள்ளதாக லு பரிசியன் பத்திரிகை செய்தி வெளியட்டுள்ளது

20 வயதுடைய இலங்கை தமிழரான இந்த நபர் கடந்த புதன்கிழமை காலை நுவாசி லு கிறாண்ட் பகுதியில் இருக்கும் அவரது இல்லத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர் நீண்ட காலமாகவே காவற்துறையால் கண்காணிக்கப்பட்டு வந்தவர் என்றும் இந்த கொலை நடந்த லாகூர்நெவ் பகுதி அமைந்துள்ள சென் சென்டனி மாவட்ட காவல்துறையினரை மேற்கோள் காட்டி லு பரிசியன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது

கைது செய்பட்டுள்ள நபர் கொல்லப்பட்ட இளைஞன் மீது கோடாரியால் கொத்தியதைப் பார்த்தாக பல சாட்சிகள் தெரிவித்துள்ளதுடன் அவரை அடையாளம் காட்டியதாகவும் லு பரிசியன் பத்திரிகை கூறியுள்ளது.இந்த கொலையாளி வேறும் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இவர் கைது செய்யப்பட்டதையடுத்து இவருடன் சேர்ந்து இக்கொலையை புரிந்த ஏனையவர்களும் கைது செய்யப்படலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

zaterdag 2 april 2011

தயவுசெய்து, “NATO” விடமிருந்து லிபிய புரட்சியைக் காப்பாற்றுங்கள்

கருத்துகள்: 002-04-2011
லிபிய புரட்சியாளர்களின் தலைமையகமாக கருதப்படும், பெங்காசி நகர வழக்கறிஞர்களின் நேர்காணலை நெதர்லாந்து தொலைக்காட்சி ஒளிபரப்பியது. “கடாபியின் சட்டங்களில் என்ன குறை கண்டீர்கள்?”, என்ற கேள்விக்கு அவர்களது பதில் இவ்வாறு அமைந்திருந்தது. “கடாபியின் சட்டங்கள் இஸ்லாமிய ஷரியா அடிப்படையில் அமைந்திருக்கவில்லை. உதாரணத்திற்கு திருட்டுக் குற்றச்சாட்டுக்குள்ளான நபரின் கையைத் துண்டிப்பதிலை.” (Niuewsuur, 30-03-2011)

லிபிய மக்கள் எழுச்சி ஆரம்பித்த காலங்களில், மேலைத்தேய ஊடகவியலாளர்கள் கடாபியை நேர்கண்டார்கள். “கிளர்ச்சியாளர்களை அல்கைதா” என்று வர்ணித்த கடாபிக்கு பைத்தியம் என்று பரிகசித்தார்கள். மேற்குலக மக்களும் கடாபியின் “அல்கைதா நகைச்சுவை” கேட்டு சிரிக்க வைக்கப் பட்டார்கள். மேற்குலக அரசுகளும் சேர்ந்து சிரித்தார்களே தவிர, எதையும் மறுக்கவில்லை. ஆமாம், லிபிய கிளர்ச்சியில் அல்கைதா சம்பந்தப்படவில்லை என்று இது வரை எந்தவொரு மேற்குலக தலைவரும் மறுத்துரைக்கவில்லை. இப்போது அமெரிக்காவின் மூத்த அதிகாரி ஒருவரே, லிபிய எழுச்சியில் அல்கைதாவின் பங்களிப்பு உள்ளதை ஒத்துக் கொண்டுள்ளார்.Presence of al-Qaeda Seen among Libya’s Rebels

2001 ம் ஆண்டு, அமெரிக்கா “அல்கைதா பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” அறிவித்த காலத்தில், கடாபியும் அதனை ஆதரித்தார். அன்றிலிருந்து கடாபி அரசுடன், மேற்குலக நாடுகள் நட்புப் பாராட்ட ஆரம்பித்தன. அன்றைய பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர், கடாபியின் பிரத்தியேக ஆலோசகர் ஆனார். லிபியாவின் சிறப்பு அதிரடிப் படைக்கு, பிரிட்டன் பயிற்சி வழங்கியது. பாதுகாப்புத் துறை சம்பந்தமான நவீன தகவல்களைப் பரிமாறிக் கொண்டது. (Libya: Tony Blair agreed to train Gaddafi’s special forces in ‘deal in the desert’) ஒரு காலத்தில் மேற்குலகை வெறுத்த கடாபி, அவர்களை நண்பர்களாக்கிக் கொண்ட நாள் முதல் கடாபியின் வீழ்ச்சி ஆரம்பமாகி விட்டது. மேற்குலகின் புத்திமதிகளைக் கேட்டு, நாட்டில் தனியார்மயத்தைக் கொண்டு வந்தார்.(One Day Before Benghazi Rebellion. IMF Commends Qadhafi Government.) இதனால், கடாபியின் குடும்பமும், உறவினர்களும் நாட்டிலேயே பெரும் பணக்காரர்களாக மாறி, பெரும்பான்மை மக்களின் வெறுப்பை சம்பாதித்தார்கள்.

கடாபி ஆட்சியைக் கைப்பற்றிய ஆரம்ப காலங்களில், எண்ணை உற்பத்தி தேசியமயப் படுத்தப் பட்டிருந்தது. கடந்த தசாப்தங்களாக, லிபியாவின் பிரதானமான எண்ணெய் ஏற்றுமதியும் தனியாருக்கு திறந்து விடப்பட்டது. வெளிநாட்டு நிறுவனங்களுடன், கூட்டு ஒப்பந்தம் போட்ட லிபிய அரசு நிறுவனமான TAMOIL மேற்கத்திய நாடுகளில் முதலீடு செய்திருந்தது. இன்று அந்த நிறுவனத்தின் மில்லியன் கணக்கான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. மேற்கத்திய நாடுகள் தனக்கு நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டதாக கடாபி குமுறியதிலும் உண்மை இல்லாமலில்லை. இருந்த போதிலும், கடந்த வருடம் கடாபி மீண்டும் எண்ணெய் உற்பத்தியை தேசியமயமாக்கப் போவதாக அரசால் புரசலாக கதை அடிபட்டது. நேட்டோவின் இராணுவத் தலையீட்டுக்கு அதுவே முக்கிய காரணமாகக் கருதப் படுகின்றது.

பொருளாதாரத்தை தனியார்மயமாக்கியதால் கூடவே வேலைவாய்ப்பின்மையும், தனிநபர் வருமானத்தில் சரிவும் ஏற்பட்டது. பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரித்தது. பணக்காரர்களின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டே சென்றது. உலகமயமாக்கலின் விதிகளுக்கேற்ப கடாபியும் சோஷலிசத்தை கைவிட்டு விட்டு, முதலாளித்துவத்தை தழுவிக் கொண்ட நாள் முதல், சமூகத்தில் ஏற்பட்ட பிளவு விரிசல் அடைந்து கொண்டே சென்றது. கடாபி உறுதியளித்தவாறு மில்லியன் வீடுகளை கட்டிக் கொடுக்கும் திட்டம் நிறைவேறாததால் ஏற்பட்ட விரக்தியே, கடாபி அரசுக்கு எதிரான முதலாவது மக்கள் எழுச்சிக்கு வழிவகுத்தது.

லிபிய மக்கள் பல்வேறு இனக்குழு சமூகங்களாக பிரிந்துள்ளனர். முதலாளித்துவ பொருளாதார நலன்களை கடாபியின் இனக்குழுவினர் முழுமையாக பயன்படுத்தி வந்துள்ளனர். கிழக்கு லிபியாவை சேர்ந்த இனக்குழுவினர் புறக்கணிக்கப் பட்டதால், வேலையற்றோர் எண்ணிக்கை அங்கே அதிகம். சுருங்கக் கூறின், கடாபியின் அரசுக்கு எதிராக ஆரம்பத்தில் ஏற்பட்ட மக்கள் எழுச்சி தனியார்மயமாக்களினால் ஏற்பட்ட விளைவு எனலாம். ஆனால், திடீரென களத்தில் குதித்த இஸ்லாமியவாதிகள் போராட்டத்தின் திசையை மாற்றினார்கள். லிபியாவில் கடின வேலைகளை செய்யும் உழைக்கும் வர்க்கம் முழுவதும் வெளிநாட்டவர்கள். இவர்கள் யாரும் மக்கள் எழுச்சியில் பங்குபற்றவில்லை. மாறாக, நாட்டை விட்டு வெளியேறி விட்டார்கள்.

லிபிய கிளர்ச்சி ஆரம்பமாகியதும், கடாபி அரசில் பதவி வகித்த அமைச்சர்கள், அதிகாரிகள், ஜெனரல்கள், தூதுவர்கள் பலர் தமது பதவிகளை விட்டு விலகி கிளர்ச்சியாளர்களுடன் சேர்ந்தார்கள். “கடாபி சொந்த மக்களை குண்டு போட்டுக் கொல்வதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக…”, தமது பதவி விலகலுக்கு காரணம் கூறினார்கள். இவர்களின் பின்னணியை ஆராய்ந்தால் சுவாரஸ்யமான தகவல்கள் கிடைக்கின்றன. பலர் கிழக்கு லிபிய இனக்குழுக்களை சேர்ந்தவர்கள் என்பதும், தமது இனக்குழு விசுவாசத்தைக் காட்ட இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்துகின்றனர் என்பதும் தற்செயல் அல்ல. லிபிய இராணுவத்தை விட்டு ஓடிப் போய், இன்று கிளர்ச்சிப் படைகளின் கமாண்டராகியுள்ள ஜெனரல் Khalifa Hifter சி.ஐ.ஏ. உளவாளி என நிரூபிக்கப் பட்டவர்.(American media silent on CIA ties to Libya rebel commander) பொருளாதார பிரச்சினைகளுக்கு காரணமான தனியார்மயமாக்கலை அமுல் படுத்திய கடாபியின் அமைச்சரான Mahmoud Jibril, இன்று கிளர்ச்சியாளரின் இடைக்கால அரசாங்கத்தின் முக்கிய தலைவர். நேற்று வரை கடாபியின் சர்வாதிகார ஒடுக்குமுறை ஆட்சிக்கு உறுதுணையாக இருந்த முக்கிய புள்ளிகள், இன்று கிளர்ச்சிக்கு தலைமை தாங்குகிறார்கள். மேற்குலக நாடுகளும், நேட்டோவும் இத்தகைய நபர்களைத் தான் தெரிவு செய்கின்றது. நிச்சயமாக, அது ஜனநாயகத்தை கொண்டு வருவதற்கான முயற்சியாக இருக்க முடியாது. லிபியாவில், கடாபியின் மறைவுக்குப் பின்னர், மீண்டும் ஒரு சர்வாதிகார ஆட்சி ஏற்படப் போவது உறுதி.

துரோகிகளின் பட்டியலில்!

அமெரிக்காவின் அத்துமீறல்களாலும் எஜமாந்தனத்தலையீட்டாலும் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் நாசங்கள்!

ஆப்கானில் ஐ.நா பணியாளர்கள் 20 பேர் படுகொலை

உலக வர்த்தக மையம் மீதான தாக்குதல் அமெரிக்காவின் சதித்திட்டமே: ஓமர் பின் லேடன்

லிபியாவின் தாக்குதலுக்கு சி.ஐ.ஏ தான் காரணம்

தலிபான் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட நோட்டோ படையினர்

இஸ்ரேலின் வான் வழித் தாக்குதல்: ஹமாஸ் கடும் எச்சரிக்கை

லிபியாவில் வான்தாக்குதலால் பொதுமக்கள் சாவதாக நீலிக்கண்ணீர் வடித்த நேர்ரோவும் ஐக்கிய நாடுகள் சபையும் முக்கியமாக அமெரிக்காவும் இது போன்ற இஸ்ரேல் வான்தாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்படுவதை ரசிப்பதேனோ!!நண்பன் கொன்றால் பயங்கரவாதி,எதிரி கொன்றால் அப்பாவிகளோ!!வலியவன் எளியவனை வருத்தினால் வலியோனை தெய்வம் வருத்தும்??

donderdag 31 maart 2011

சுட்டவர்களைப் புதைக்கும் புதை குழி: புது ஆதாரங்கள் வெளியாகியுள்ளது !

29 March, 2011 by admin


முள்ளிவாய்க்காலில் மே 18ம் தேதி சரணடைந்த பல பொதுமக்களையும், புலிகளின் உறுப்பினர்கள் பலரையும் இராணுவம் சுட்டுக் கொண்றது யாவரும் அறிந்ததே. இவர்களில் புலிகளின் சிரேஷ்ட தளபதிகளின் மனைவி மற்றும் பிள்ளைகளும் அடங்குவதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே நாம் சனல் 4 தொலைக்காட்சியில் பார்த்த கொலைகள், நடைபெற்ற இடத்துக்குப் பக்கமாக இக் கொலைகள் நடந்திருக்காலம் எனவும், அங்கே சுட்டுகொல்லப்பட்ட பலரது உடல்களை இராணுவம் உடனே குழி தோண்டி அவ்விடத்திலேயே புதைத்தது எனவும் கூறப்படுகிறது. ஆனல் நீங்கள் இங்கே பார்ப்பது பிறிதொரு உடல்களாகும். இவை பிறிதொரு இடத்தில் சுடப்பட்டு, பின்னர் அவர்கள் உடல்களை டிராக்டர் வண்டியில் ஏற்றிச் செல்கிறது இராணுவம்.

இவர்களின் உடல்கள் பிறிதொரு இடத்தில் கொத்துக்கொத்தாக புதைக்கப்பட்டதாக இராணுவச் சிப்பாய் ஒருவர் தெரிவித்துள்ளார். சரணடைந்த சில பெண்புலிகளைக் கொண்ற இராணுவத்தினர், அவர்களின் உடல்களையும் ஏற்றிச் சென்று புதைத்தாக தற்போது செய்திகள் கிடைக்கப்பெற்றுள்ளது. இது எங்கே எவ்வாறு நடந்தது என்பது குறித்த விபரங்கள் தற்போது அதிர்வு இணையத்தால் பெறப்பட்டு, அவை ஆவணப்படுத்தப்படுகிறது. மேலும் கீழ் காணும் புகைப்படத்தில் உள்ள மூவரையும் இலங்கை இராணுவம் கைதுசெய்து, அவர்களை தமது தற்காலிக முகாமுக்கு கூட்டிச் சென்றுள்ளது.



மே 18ம் தேதி மாலை சுமார் 5.19 க்கு இப் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப் புகைப்படத்தில் இருக்கும் மூவரும் தற்போது உயிருடன் உள்ளனரா ? இல்லை இவர்கள் யார் என அறிய அதிர்வு இணையம் பல முயற்சிகளை மேற்கொண்டு உள்ளது. எனவே இப் புகைப்படத்தில் இருப்பவர்கள் யார் என்பது தெரிந்தால் உடனடியாக எம்மோடு தொடர்புகொள்ளவும்.

இப்படத்தில் உள்ளவர்கள் புலிகளின் தளபதி ராம் அவர்களின் மனைவி மற்றும் பிள்ளைகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இருப்பினும் இவர்கள் தற்போது எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. மனைவி பிள்ளைகளைப் பிடித்த இராணுவம் பின்னர் இவர்களைக் காட்டி தளபதி ராமையும் சரணடையச் செய்தனர் என்று சொல்லப்படுகிறது.

புதுமாத்தளான் பகுதியைக் திடீரென இராணுவம் கைப்பற்றியவேளை, அங்கே இருந்த தற்காலிக வைத்தியசாலையில் காயப்பட்டு இருந்த பல பெண்களை இராணுவம் துஷ்பிரயோகம் செய்ததாகவும், அவர்களை கேலிசெய்தும், போத்தியிருந்த ஆடைகளைக் களைந்து அவர்களை மானபங்கப்படுத்தியதாகவும், மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது. கீழ்தரமான இவ்வேலைகளைச் செய்யும்போது மோபைல் போனில் எடுக்கப்பட சில புகைப்படங்களும் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளன.




woensdag 30 maart 2011

ஆஸ்திரேலிய இந்து கோவிலில் துப்பாக்கி சூடு. (வீடியோ இணைப்பு)

[ 2011-03-30 20:44:21 | வாசித்தோர் : 119 ]

புதுத் தெற்கு வேல்ஸில் உள்ள ஆஸ்திரேலியாவின் பழமைவாய்ந்த இந்துகோயிலில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் சிலர் புகுந்து பலமுறை துப்பாக்கியால் சுட்டுள்ள சம்பவம் இந்து சமுதாயத்தினரை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

ஆபர்னில் உள்ள 30 ஆண்டுகளுக்கும் மேலான ஸ்ரீமந்திர் ஆலயத்தில் முகமூடிகள் அணிந்த மர்ம நபர்கள் 2 பேர் நுழைந்து மார்ச் 19-ம் தேதி இரவு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கோயிலில் தாக்குதல் நடத்திய அந்த நபர்கள் சிசிடிவி விடியோவில் பதிவாகியுள்ளனர். இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை. இந்த சம்பவம் கோயில் ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் இடையே பீதியை ஏற்படுத்தி உள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தும் ஒருபகுதியாக இந்து சமுதாயத்தினருடன் இணைந்து போலீசார் செயல்பட்டு வருவதாக சிட்னி பத்திரிகை ஒன்று போலீஸ் செய்தித்தொடர்பாளர் ஒருவரை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

சிசிடிவியில் பதிவான விடியோ காட்சிகள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், எனினும் அதன்மூலம் இதில் எதுவும் செய்யமுடியவில்லை என்றும் இந்தியன் என்ற செய்திப் பத்திரிகையின் ஆசிரியர் ரோஹித் ரெவோ தெரிவித்தார்.

கோயிலின் பிரதான கதவுக்கு சில அடி  தூரத்தில் உள்ள நுழைவாயிலில் சில துப்பாக்கிக் குண்டுகள் மோதி உள்ளன. அதில் ஒரு குண்டு சுவர் முழுவதும் உரசிச் சென்றுள்ளதாக அவர் கூறினார்.

குண்டுகளின் அடையாளங்களைப் பார்க்கும்போது, சிறப்புவாய்ந்த பெரிய குண்டுகள் இதில் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். சாதாரண குண்டுகள் மிகச்சிறிய அகலத்துடன் இருக்கும். ஆனால் இந்த குண்டுகள் சுவர்களில் பெரிய துளைகளை உருவாக்கியுள்ளது என்றார் அவர்.

dinsdag 29 maart 2011

சோகம் தாங்காமல் ஆயிரக்கணக்கான மக்கள் கதறியழ நல்லடக்கம் செய்யப்பட்ட சக்திதரனின் பூதவுடல்!

தங்களது மைந்தன் சக்திதரனை இழந்த சோகம் தாங்காது குப்பிளான் கிராமமே இருள் சூழ்ந்து கடும் சோகத்தில் ஆழ்ந்திருந்தது.


கவிஞராக, மிகச் சிறந்த பேச்சாளராக, எழுத்தாளராக, தீவிர சமயப் பற்றுக் கொண்ட பல்வேறு பரிமாணங்களைப் பெற்ற மிகச் சிறந்த ஆளுமையாகக் காணப்பட்ட சக்திதரனின் மரணத்தை ஜீரணிக்க முடியாத நிலை குப்பிளான் எங்கும் காணப்பட்டது.

கிராமம் எங்கும் தோரணங்கள், கறுப்புக் கொடிகள், மதில்கள் தோறும் கண்ணீர் அஞ்சலிச் சுவரொட்டிகளுடன் எங்கும் ஒரு வித மயான அமைதி.. குப்பிளான் கிராமமே திரண்டு வந்து எம் தவப் புதல்வனுக்கு தமது இறுதிஅஞ்சலியைச் செலுத்தியது.

குடும்பத்தினரைக் கண்கொண்டு பார்க்கவே முடியவில்லை. அவர் ஆசிரியராகப் பணியாற்றிய சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள் , மாணவர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அவர்களும் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டார்.
சக்திதரனின் வீட்டில் இறுதிக் கிரியைகள் இடம்பெற்று பின்னர் கண்ணீர் அஞ்சலிக்கூட்டம் இடம்பெற்றது.

அதில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் அதிபர் பேசுகையில்,

மிகச் சிறந்த ஆசானை தமது பாடசாலை இழந்து விட்டதாகக் கூறினார். அவர் கல்வி கற்பித்த மாணவர்கள் தங்கள் பாடசாலையில் என்றுமில்லாதவாறு சிறந்த பெறுபேற்றைப் பெற்றதாகக் கூறினார். பாடசாலையில் இடம்பெறும் சமய நிகழ்வுகளிளிலும் சரி ஏனைய விழாக்கள் குறிப்பாக பட்டிமன்றம் போன்றவற்றிலும் சிறப்பாக மாணவர்களை வழிநடாத்தும் பண்பைக் கொண்டவர் என்றும் எப்போதும் குறித்த நேரத்துக்கு பாடசாலைக்கு வந்துவிடும் அவரது நேரம் தவறாமை தன்னை வெகுவாக ஈர்த்ததாகவும் குறிப்பிட்டார். (குப்பிளானுக்கும் சாவகச்சேரிக்கும் இடையிலான தூரம் யாவரும் அறிந்ததே).

அதிபருடைய இரங்கலுரையை அடுத்து பலரும் இரங்கல் உரையாற்ற முன் வந்தனர். அடுத்து வந்த ஆசிரியர் ஒருவர் உரையாற்ற வந்தார் ஆனால் அவரால் பேச முடியவில்லை. கண்ணீரையே உரையாகத் தந்து விட்டுப் போய்விட்டார். இதே நிலை அவரைத் தொடர்ந்து பேச வந்த நிறையப் பேருக்குக் காணப்பட்டது.

பின்னர் அவர் கற்பித்த தரம் 7 C மாணவர்களின் இரங்கலுரையும் இறங்கற்பாடலும் இடம்பெற்றன.

குப்பிளான் கிராமமே கண்டிராத அளவுக்கு ஏராளமான மக்களால் வீடு நிரம்பி வழிந்தது. அங்கு வந்த எல்லோருமே துக்கம் தாங்காமல் கண்ணீர் விட்டு கதறி அழுத வண்ணமிருந்த்தனர்.

பின்னர் மதியம் 1.40 மணியளவில் எம்மைந்தனின் பூதவுடல் குப்பிளான் இளைஞர்களால் காடகடம்பை மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது வீட்டிலிருந்து பூதவுடல் கொண்டு சென்ற வழி நெடுகிலும் தெருவெங்கும் வெள்ளைத்துணி விரிக்கப்பட்டு அதன் மேலேயே கொண்டு செல்லப்பட்டது.

போகும் வழியெங்கும் இளைஞர்கள் கண்ணீர் விட்டுக் கதறியழுதது பார்ப்போரின் நெஞ்சை உருகச் செய்தது. மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டு இளைஞர்களின் ஓலத்துக்கு நடுவே எம் மைந்தனின் பூதவுடல் கனத்த மனதுடன் புதைக்கப்பட்டது.

எப்போதும் சிரித்த அந்த அப்பாவித்தனமான முகத்தையும் யதார்த்தமான சொல்லாடல்களையும் நாம் இனி எங்கு காண்போம்?

சில கேள்விகளும் விடை தெரியாத வினாக்களும்?

* இன்று ஊடகங்களில் வந்த செய்தியை யாவரும் அறிந்திருப்பீர்கள்... தோற்கடிக்கப்பட்ட ஒரு சமூகத்தின் துப்பாக்கிகளால் சூழப்பட்டு இருக்கும் ஒரு பிரதேசத்தின் தனி மனிதனின் பாதுக்காப்பும் எதிர்க் கேள்வி கேட்க முடியாத ஒரு சர்வாதிகாரப் போக்கும் கொண்ட இராணுவ ஆட்சியில் உயிர் வாழ்தலென்பது கஷ்டமான காரியம் தான்... வேறு எதுவும் பேசாமல் உணவு உட்கொள்ள மட்டும் வாயைத் திறந்தால் அதிககாலத்துக்கு உயிர் வாழலாம்.

* இன்று ஊர் மக்களோ அல்லது குடும்பத்தினரோ சக்திதரனுக்கு என்ன நடந்தது என்பது குறித்து பேசுவதற்கு கூட ஒரு வித பய உணர்வு காணப்படுகின்றது... உண்மைதான் நடந்து கொண்டிருக்கும் மிகச் சிறந்த ஜனநாயக ஆட்சியில் நாளைக்கு அவர்களின் பாதுகாப்பை யார் உறுதிப்படுத்துவது...?

* சம்பவம் நடந்து கிட்டத்தட்ட இரு வாரங்களின் பின்னர் யாழ் மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி சக பொலிஸார்கள் சகிதம் இன்றைய தினம் சக்திதரனின் வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தியுள்ளார். இன்று ஊடகங்களில் செய்தி வெளியாகும் மட்டும் குறிப்பாக இவ்வளவு நாளும் இந்தப் பொலிஸார் உரிய விசாரணை நடத்தாமல் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயற்பட்டது நிதர்சனமாகியுள்ளது.

* இன்றைய தினம் அச்செழு இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவத்தினர் சக்திதரனின் வீட்டுக்குச் சென்று மலர் வளையம் வைத்து அனுதாபம் தெரிவித்தார்களாம்... (ஆடு நனையுதே என்று ஓநாய் அழுத கதை ஞாபகத்துக்கு வருகிறது)

* இவரின் விடை தெரியாத அந்த மரணத்தை நீதிமன்றில் கூட முறையிட முடியாத நிலை காணப்படுகின்றது. இதைத் தான் பாரதி அழகாகச் சொன்னான்... பேய் அரசு ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாஸ்திரங்கள் என்று...

* வேறு எங்கும் நீதி கிடைக்காது... இனி என்ன செய்வது? கடவுள் என்ற ஒருவர் இருந்தால் அவரிடம் பிரார்த்தியுங்கள்.. எங்கள் அன்பு மைந்தனின் ஆத்மா சாந்தியடைய....

-துருவன்
28 Mar 2011

இராணுவத்தினருடன் முரண்பட்ட ஆசிரியர் அடித்துக் கொலை! யாழில் சம்பவம்!
[ திங்கட்கிழமை, 28 மார்ச் 2011, 01:26.17 AM GMT ]
யாழ். சாவகச்சேரி இந்துக்கல்லூரி ஆசிரியர் ஒருவர் இராணுவத்தினரால் அடித்துப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று கடந்த வாரம் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம் குப்பிளான் தெற்கைச் சேர்ந்த சம்பந்தன் சக்திதரன் (வயது – 28) என்ற ஆசிரியர் கடந்த வாரம் இரவு 7.30 மணியளவில் திருநெல்வேலி சந்திப்பகுதியில் இராணுவத்தினர் அவரை கடுமையாகத் தாக்கியதாக அந்தப் பகுதியில் நின்றிருந்த வர்த்தகர்கள் கண்ணுற்றிருக்கின்றனர்.
இதேவேளை மறுநாள் காலை யாழ். ஆரியகுளம் சந்திப் பகுதியில் வீசப்பட்ட நிலையில் காணப்பட்ட அவர் பொலிஸாரால் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் அதன் பின்னர் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்துள்ளதாகவும் யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் நடைபெற்ற நாளன்று மாலை 5.30 மணியளவில் வீட்டில் இருந்து புறப்பட்ட ஆசிரியர் சம்பந்தன் சக்திதரன் காங்கேசன்துறை வீதியில் நாச்சிமார் கோவிலுக்கு அண்மித்த மதுபான விற்பனை நிலையத்தில் மது அருந்தியிருக்கின்றார்.
அதே மதுபான விற்பனை நிலையத்திற்கு வருமாறு தனது நண்பருக்கு எஸ்.எம்.எஸ் தகவல் அனுப்பியிருந்ததாக குறித்த நண்பர் தெரிவித்திருக்கின்றார். ஆனாலும் குறித்த நண்பர் அங்கு சென்றிருக்கவில்லை.
அதன் பின்னர் யாழ்.பல்கலைக்கழகத்திற்குச் சென்ற ஆசிரியர் சக்திதரனை பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு ஊழியராகக் கடமையாற்றும் குப்பிளானைச் சேர்ந்த நபர் போதை அதிகம் என்பதால் தொடர்ந்து பயணிக்க வேண்டாம் என்று மறித்திருக்கின்றனர்.
அங்கிருந்து 7.30 மணியளவில் வெளியேறிய சக்திதரன் திருநெல்வேலி சந்திப்பகுதியில் தடுமாறியதாகவும், அவரை இடைமறித்த இராணுவத்தினர் இருவரும் சிவில் உடையில் இருந்த இருவரும் உரையாடியிருக்கின்றனர். அதன் பின்னர் இராணுவத்தினர் அவரைத் தாக்கியதை தாம் கண்ணுற்றதாக திருநெல்வேலி சந்திப் பகுதி வர்த்தகர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
இதேவேளை தமிழீழம் கிடைத்தால் நீங்கள் யாழ்ப்பாணத்தில் நிற்க முடியாது என்று இராணுவத்தினரைப் பார்த்து அவர் தெரிவித்ததை அடுத்தே இராணுவத்தினர் அவரைத் தாக்கியதாகவும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பிரதே பரிசோதனையில் உயிரிழந்தமைக்கான காரணம் கொலையே என்று சட்டவைத்திய அதிகாரி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இரண்டாம் இணைப்பு - இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.
ஆசிரியரான சத்திதரன் கடந்த 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை குப்பிளானிலுள்ள தமது வீட்டிலிருந்து தாயாருக்கு மருந்து வாங்குவதற்காக மாலை 5.30 மணியளவில் புறப்பட்டு யாழ்ப்பாணம் வந்துள்ளார். அங்கு நண்பருடன் இணைந்து சில மணிநேரத்தைக் கழித்துள்ளார்.
பின்னர் பலாலி வீதி வழியாக மோட்டார் சைக்கிளில் தனியாகப் பயணித்துள்ளார். திருநெல்வேலியில் பழைய பிரதேச செயலகத்திற்கு அருகில் இவரை இராணுவத்தினர் மறித்து விசாரணை செய்துள்ளனர். அவ்வேளை அங்கு ஒரு முறுகல் நிலைமை ஏற்பட்டதாகத் தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து அங்கு மக்கள் கூடியுள்ளனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அருகிலுள்ள மஞ்சமுன்னா தடியை முறித்து மிரட்டியதைத் தொடர்ந்து மக்கள் கலைந்துசென்றுள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் யார் என்பது குறித்துத் தெரியவில்லை.
அன்றைய தினம் இரவு 8.30 மணியளவில் பிரஸ்தாப ஆசிரியர் சுயநினைவு இல்லாத நிலையில் 119 அவசர அம்புலன்ஸ் மூலம் யாழ். ஆஸ்பத்திரிக்கு எடுத்துவரப்பட்டார். அங்கு அவர் விபத்தில் சிக்கிக் காயமடைந்ததாகத் தெரிவித்தே அனுமதிக்கப்பட்டார். உடனடியாக ஆசிரியர் அவசர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டார்.
அவரது உடலில் உள்ளாடையைத் தவிர வேறெந்த ஆடைகளும் இல்லாத நிலையிலேயே ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார் எனக் கூறப்பட்டது. தொடர்ந்து சுயநினைவில்லாமல் இருந்த பிரஸ்தாப ஆசிரியர் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இரவு 7.30 மணியளவில் சிகிச்சை பயனின்றி மரணமானார்.
இவரது முதுகுப்புறத்தில் வயரினால் தாக்கியமைக்கான காயங்கள் காணப்படுவதுடன் தலையில் பலமாகத் தாக்கப்பட்டமைக்கான அடையாளங்கள் (காயங்கள்) உள்ளன என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. விபத்தில் காயமடைந்தமைக்கான எந்தவித அடையாளங்களும் இல்லை என்றும் அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டன.
யாழ்.நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா யாழ்.ஆஸ்பத்திரியில் மரண விசாரணைகளை நடத்தினார். சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.