தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 21 februari 2015

பிரபாகரனின் மகனை புலிகள் கொன்றிருக்கலாம் பொன்சேகா மறைமுக தகவல்

மைத்திரிக்கு பின்னர் ஜனாதிபதி பதவி ஒழிக்கப்படலாம்?
[ சனிக்கிழமை, 21 பெப்ரவரி 2015, 06:52.37 AM GMT ]
ஜனாதிபதி பதவி மற்றும் அந்த பதவிக்குரிய அதிகாரங்களை நீக்குவது குறித்து அரசியலமைப்பு உருவாக்கல் குழுவில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி பதவியையும் அதற்கான அதிகாரங்களும் நீக்கப்பட வேண்டும் என்பதே அரசியல் கட்சிகளில் நிலைப்பாடாக இருந்து வருகிறது.
உத்தேச புதிய அரசியலமைப்புச் சட்டத்தில் ஜனாதிபதி பதவி மற்றும் அதற்குரிய அதிகாரங்கள் உள்ளடக்கப்படக் கூடாது என ஜே.வி.பி அரசியலமைப்பு உருவாக்கல் குழுவிற்கு அறிவித்துள்ளது.
தற்போதைய ஜனாதிபதி பதவி மற்றும் அதற்கான அதிகாரங்கள் அமுலில் இருந்தாலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் முடிவடைந்த பின்னர், ஜனாதிபதி பதவி ஒன்று அவசியமில்லை எனவும் ஜே.வி.பி சுட்டிக்காட்டியுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில், நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அரசியமைப்பு உருவாக்கல் குழுக் கூட்டத்தில் இது சம்பந்தமாக பேசப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா, ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், ஜனாதிபதி சட்டத்தரணி ஜயம்பதி விக்ரமரத்ன உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.
புதிய அரசியலமைப்பின் மூலம் ஏற்படுத்தப்படும் பிரதமர் பதவி குறித்தும் இங்கு பேசப்பட்டுள்ளதுடன், தேர்தலுக்கு பின்னர், இரண்டு ஆண்டுகளுக்கு தேசிய அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்துவது பற்றியும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
எதிர்வரும் மார்ச் மாத நடுப்பகுதியில் புதிய அரசியலமைப்புச் சட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என இதன் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
 
 http://www.tamilwin.com/show-RUmtyCRVSUnr1D.html
 
 
பொலிஸார் வரும் போது ஷஷி வீரவன்ச வீட்டை விட்டு தப்பியோட்டம்: சிங்கள ஊடகம்
[ சனிக்கிழமை, 21 பெப்ரவரி 2015, 06:52.38 AM GMT ]
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவின் மனைவியை கைது செய்வதற்கு குற்ற புலனாய்வு பிரிவினர் கடுவெலயில் உள்ள அவரது வீட்டிற்கு செல்லும் முன்னர் ஷஷி வீரவன்ச வீட்டை விட்டு தப்பி ஓடியுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
குற்ற புலனாய்வு பிரிவு இவ்வாறு தெரிவித்ததாக குறித்த சிங்கள ஊடகம் குறிப்பிட்டிருந்தது. மேலும் விமலின் மனைவி மறைந்திருப்பதாக சந்தேகித்து பல வீடுகளில் குற்றப்புலனாய்வு பிரிவினரினால் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது எனினும் அவர் குறித்த வீடுகளில் இருக்க இல்லை.
சம்பவம் குறித்து விமலிடம் வினவியபோது அதற்கு பதிலளித்த விமல் வீரவனச, குறித்த அறிக்கை முற்றிலும் பொய். நுகேகொடை பேரணி இடம் பெற்ற அன்று மாலை பொலிஸார் பத்தரமுல்லையில் அமைந்திருக்கும் எனது அலுவலகம் மற்றும் வீட்டிற்கு வந்து எனது மனைவியை குற்ற புலனாய்வு பிரிவிற்கு வருமாறு கூறினார்கள்.
எனது மனைவி கடந்த சில நாட்களாக சுகவீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்பொழுது வரை அவர் வைத்தியசாலையில் தான் உள்ளார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதனால் சட்ட ரீதியான முறையில் பொலிஸாரிடம் வேறு ஒரு தினத்தை கேட்டுள்ளோம்.
எனது மனைவி வீட்டை விட்டு தப்பி ஓடவும் இல்லை எங்கும் மறைந்திருக்கவும் இல்லை . பொலிஸாருக்கு வேண்டுமென்றால் வைத்தியசாலைக்கு சென்று அவரிடம் தேவையான கேள்விகளை கேட்டுக்கொள்ள முடியும்.
இவ்வாறான ஊடகங்களின் செயற்பாடுகள் நாட்டுக்கு எதிரான ஒரு நடவடிக்கை எனவும். நுகேகொடை பேரணியின் மூலம் இவை வெளிப்பட்டுள்ளது இவ்வாறான சிங்கள் ஊடகங்கள் அரசாங்கத்துடன் இனைந்துக்கொண்டு தனக்கு எதிராக பேசுவது கவலைக்குரிய விடயமாகும் எனவும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
 http://www.tamilwin.com/show-RUmtyCRVSUnr1E.html


பிரபாகரனின் மகனை புலிகள் கொன்றிருக்கலாம் பொன்சேகா மறைமுக தகவல்
[ சனிக்கிழமை, 21 பெப்ரவரி 2015, 07:52.32 AM GMT ]
உலகளாவிய ரீதியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரின் மகன் பாலசந்திரனை புலிகள் கொன்றிருக்கலாம் என முப்படைகளின் முன்னாள் பிரதான பொன்சேகா மறைமுகமாக தகவல் வெளியிட்டுள்ளார்.
தொலைக்காட்சியொன்றுக்கு அண்மையில் வழங்கிய செவ்வியின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பிரபாகரனின் இளைய மகன் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இராணுவ தளபதி என்ற வகையில் தமக்கு எதுவும் தெரியாது எனவும், தனக்கு எந்த அறிக்கையும் கிடைக்கப்பெறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரபாகரன் மற்றும் அவரது மூத்த மகன் சார்ள்ஸ் அன்ரனிக்கு என்ன நடந்தது என்பது குறித்து எமக்கு தெரியும் அதை உறுதிபடுத்தி ஊடகங்களின் ஊடாகவும் தெரியப்படுத்தினோம்.

எனினும் பிரபாகரனின் மனைவி மற்றும் பெண்பிள்ளை, இளைய மகன் குறித்து எமக்கு எவ்வித தகவல்களும் கிடைக்க பெறவில்லை.

பிரபாகரனின் இளையமகனின் கொலை சம்பவம் குறித்து சனல்- 4இல் வெளீயான ஆவணப்படத்தை என்னால் பார்க்க வாய்ப்பு கிட்டாத போதிலும், சிறையிலிருந்த காலத்தில் பத்திரிகை செய்திகளின் ஊடாக அது பற்றி தெரிந்து கொண்டேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்த காணொளியில் இருப்பது உண்மையா என்பது குறித்து எனக்கு தெரியாது எனினும், இறுதி இரு நாள் யுத்தத்தின் போது பலர் கொலை செய்யப்பட்டார்கள்.

ஆனால் அந்த சிறு பிள்ளை சாரம் ஒன்றைச் சுற்றிக்கொண்டு பங்கர் ஒன்றில் இருந்தது. அந்த சாரம் வடபகுதித் தமிழ் மக்கள் பயன்படுத்தும் சாரம் போன்றது. அதை நான் அவதானித்தேன். அதன் பின்னர் அங்கு சிப்பாய் போன்ற ஒருவர் நிற்பது போன்று ஒரு பக்கம் மட்டும் தெரிகின்றது. ஆனால், அந்தச் சீருடை இலங்கை இராணுவச் சிப்பாய் அணியும் சீருடை அல்ல. அது இந்திய இராணுவத்தின் காட்டு உடைக்குச் சமமான ஓர் ஆடை.  இந்திய இராணுவத்தின் காட்டு உடையை புலிப் பயங்கரவாதிகள் அதிகமாக அணிவர். அங்கிருந்து களவெடுத்துக் கொண்டுவந்து அணியும் பழக்கம் அவர்களுக்கு இருந்தது.

அப்படி ஒருவர்தானா அங்கு இருக்கிறார் என்ற சந்தேகம் எனக்கு வந்தது. அதன் பின்னர் உள்ள படங்களில் அவர் கீழே விழுந்து கிடக்கிறார். வயிற்றில் மூன்று துப்பாக்கிச் சூடுத் துளைகள் உள்ளன. இதனூடாக எனக்கு ஒரு முடிவுக்கு வரமுடியாமல் இருந்தது.

அவர் ஒரு பதுங்கு குழியில் இருக்கின்றார். அது எமது பதுங்கு குழியா? புலிகளின் பதுங்கு குழியா என்று தீர்மானிக்க முடியாது. யுத்தத்தின் இறுதி 2 மாதங்களாக புலிகள் பதுங்கு குழிகளில்தான் வாழ்ந்தனர். வீடுகளில் இருக்க அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கும் என்று நான் நினைக்கவில்லை. அவ்வாறானதொரு பதுங்கு குழியில் இருந்திருக்கலாம். அவர்களுடைய பதுங்கு குழியில் இருந்து எடுத்த புகைப்படமாகவும் இருக்கலாம். அவர் சுட்டு வீழ்த்தப்பட்டிருந்தார். பிடித்து வைத்து சுட்டனரா அல்லது வேறேதும் நடந்ததா என்று தெரியவில்லை. இரண்டு நாள் இறுதி யுத்தத்தின்போது இரவு நேரங்களில் பலர் கொல்லப்பட்டனர்.

ஆனால், இராணுவத் தளபதி என்ற வகையில், பிரபாகரனின் மகன் பற்றி எனக்கு எந்த அறிக்கையும் கிடைக்கவில்லை. அவரது சடலம்கூட கிடைத்தது என்றுகூட எனக்கு அறிக்கை கிடைக்கவில்லை  என சரத் பொன்சேகா  தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் மேலும் தெரிவித்தார்.
 http://www.tamilwin.com/show-RUmtyCRVSUnr2B.html

Geen opmerkingen:

Een reactie posten