தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 21 februari 2015

உள்ளக விசாரணை மூலம் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கப் போவதில்லை!- சுரேஸ் எம்.பி.

தனது தாயாரை விடுதலை செய்யுமாறு விபூசிகா ஜனாதிபதி மைத்திரிக்கு கடிதம்
[ வெள்ளிக்கிழமை, 20 பெப்ரவரி 2015, 04:59.58 PM GMT ]
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது  செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது தாயான ஜெயக்குமாரியை விடுதலை செய்யுமாறு அவரின் மகள் விபூசிகா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
தற்போது மகாதேவா ஆச்சிரமத்தில் பராமரிக்கப்பட்டுவரும் சிறுமி விபூசிக்கா, தனது தாய் கைது செய்யப்பட்டமைக்கான விபரம் முழுவதையும் அக்கடிதத்தில் எழுதியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCRUSUnq7J.html 


யோசித்தவின் விடுமுறை, கே.பியின் விசாரணை தொடர்பில் ஜே.வி.பி அதிருப்தி
[ வெள்ளிக்கிழமை, 20 பெப்ரவரி 2015, 05:46.17 PM GMT ]
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகனான லெப்டினன்ட் யோசித்த ராஜபக்சவுக்கு எதிராக விசாரணைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கையில், அவரை வெளிநாடு செல்ல அனுமதித்தமை குறித்து ஜே.வி.பி மீண்டும் குற்றம் சுமத்தியுள்ளது.
ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
யோசித்தவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க குழு ஒன்றை அமைப்பதாக பாதுகாப்பு செயலாளர் உறுதியளித்திருந்தார்.

இந்தநிலையில் ஒரு மாத விடுமுறையில் யோசித்தவை வெளிநாடு செல்ல அனுமதித்தமை ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்று ஹேரத் செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்துள்ளார்.
இதேவேளை, விடுதலைப்புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் தொடர்பான விசாரணைகளும் தாமதமாக நடத்தப்படுவதாக விஜித ஹேரத் குற்றம் சாட்டியுள்ளார்.


உள்ளக விசாரணை மூலம் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கப் போவதில்லை!- சுரேஸ் எம்.பி.
[ வெள்ளிக்கிழமை, 20 பெப்ரவரி 2015, 11:39.25 PM GMT ]
அரசாங்கம் நடத்தவுள்ளதாக கூறப்படும் உள்ளக விசாரணை ஒருபோதும் தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கப் போவதில்லை. இதனை நம்புவதில் பலனில்லை என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் நேற்றுத் தெரிவித்தார்.
தென்னாபிரிக்காவில் நடைபெற்றது போன்று உண்மைகளைக் கண்டறிந்து இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதை அடிப்படையாகக் கொண்ட உள்ளக விசாரணை என அமைச்சர் ராஜித சேனாரட்ண கூறியிருக்கிறார்.
வெளிவிவகார அமைச்சரோ உள்ளக விசாரணை என கூறியிருக்கிறார் இதில் எது சரியானது என்பது எமக்குத் தெரியாது.
இருப்பினும் உள்ளக விசாரணையொன்று நடத்தப்பட்டால் அது நீதியானதும் நியாயமானதுமாக இருக்கும் என்று கூறமுடியாது.
இராணுவத்தை காட்டிக் கொடுக்க மாட்டோம். மஹிந்த ராஜபக்சவை காட்டிக்கொடுக்க மாட்டோம் என்று கூறுகிறார்கள். நாங்கள் யாரையும் காட்டிக்கொடுக்குமாறு கூறவில்லை.
ஆனால் நியாயமான முறையில் விசாரணைகள் நடத்தப்பட்டால் இவர்கள் குற்றவாளிகலாகலாம் என்பதையே கூறுகிறோம்.
இதனாலேயே நாம் ஐ. நா. ஊடக விசாரணை அறிக்கையை கொண்டுவந்தோம். அதுவும் இப்போது செப்டம்பர் மாதம் வரை பிற்போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அரசு கூறுவது போன்று உள்ளக விசாரணைகள் நடாத்துவதில் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதுடன் தமிழ் மக்களுக்கு இதனூடாக நீதி கிடைக்கப்போவதில்லை என்றும் கூறினார்.
இதேவேளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் கருத்துத் தெரிவிக்கையில்,
போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் அரசு நடத்தும் உள்ளக விசாரணைகளை மேற்பார்வை செய்வதற்கு ஐ. நா. மனித உரிமைகள் பேரவை அலுவலகத்தின் நேரடி கண்காணிப்பு இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
 http://www.tamilwin.com/show-RUmtyCRUSUnryG.html
 

Geen opmerkingen:

Een reactie posten