தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 19 februari 2015

ஐ.நா விசாரணை அறிக்கை காலதாமதமாக வெளியிடப்படுவதனை கண்டித்து கையெழுத்து போராட்டம்!



நுகேகொடை கூட்டம் வெற்றிலைக் கூட்டணியின் பலத்தைப் பிரதிபலித்துள்ளது!- சுசில் பிரேம்ஜயந்த
[ வியாழக்கிழமை, 19 பெப்ரவரி 2015, 11:25.18 AM GMT ]
நுகேகொடையில் நேற்று நடைபெற்ற கூட்டம் வெற்றிலைக் கூட்டணியின் பலத்தைப் பிரதிபலித்துள்ளதாக ஸ்ரீ.ல.சு.க. தேசிய அமைப்பாளர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளராக தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த கொழும்பு, டார்லி வீதியில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் தனது கடமைகளை இன்று பொறுப்பேற்று கொண்டார்.
அதன் பின்னர் அங்கு வருகை தந்திருந்த ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், நுகேகொடையில் நேற்று நடத்தப்பட்ட கூட்டம் வெற்றியளித்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் (வெற்றிலையின்) பலத்தை அக்கூட்டம் பிரதிபலித்திருக்கின்றது.
சுருக்கமாகச் சொல்வதானால், நுகேகொடையில் புதன்கிழமை நடத்தப்பட்ட கூட்டம் வெற்றியளித்துள்ளது.
அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அந்த கூட்டத்துக்கு செல்வது தொடர்பில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாட வேண்டியிருந்தது என்றும் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளராக தெரிவு செய்யப்பட்ட எஸ்.பி நாவின்னவும் தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.



ஐ.நா விசாரணை அறிக்கை காலதாமதமாக வெளியிடப்படுவதனை கண்டித்து கையெழுத்து போராட்டம்!
[ வியாழக்கிழமை, 19 பெப்ரவரி 2015, 12:44.33 PM GMT ]
வடகிழக்கு தமிழர் தாயகத்தில் இடம்பெற்ற அநீதிகளுக்கு நியாகம் கோரும் ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையகத்தின் ஆய்வு அறிக்கை காலதாமதமாக வெளியிடப்படுவதனை கண்டித்து யாழ். பல்கலைக்கழகத்தையடுத்து தமிழ் சிவில் சமூகத்தினரும் கையெழுத்துப் போராட்டத்தினை வடகிழக்கு மாகாணங்களில் நடத்தப் போவதாக அறிவித்திருக்கின்றனர்.
எதிர்வரும் 24ம் திகதி யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மேற்படி அறிக்கை காலதாமதமாக்கப்பட்டமையினைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துவதற்கு தீர்மானித்திருக்கின்றது.
இந்நிலையில் அது தொடர்பில் கலந்துரையாடுவதற்கான கூட்டம் ஒன்று யாழ். பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றிருந்தது. இதன் போதே தமிழ் சிவில் சமூக அமையம் மேற்படி கருத்தினை தெரிவித்திருக்கின்றது.
இன்றைய கூட்டத்தில் பலவேறுபட்ட சமூக அமைப்புக்கள், மனிதாபிமான அமைப்புக்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு தாம் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். என தெரிவித்திருக்கும் தமிழ் சிவில் சமூகத்தினர்,
ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையகத்தினால் நியமிக்கப்பட்ட குழுவின் ஆய்வு அறிக்கை முன்னதாகவே திட்டமிட்டபடி எதிர்வரும் மார்ச் மாதம் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். என கேட்டுள்ளதுடன், குறித்த அறிக்கையினை காலதாமதமாக வெளியிடுவதனைக் கண்டித்து. வடகிழக்கு மாகாணங்களில் தமிழ் சிவில் சமூகத்தினர் கையெழுத்துப் பெறும் போராட்டத்தினை மேற்கொள்ளவுள்ளதாகவும் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.
மேலும் குறித்த ஐ.நா அறிக்கை கால தாமதப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் அதற்குப் பலர் பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டியிருந்தாலும் அதன் மூலம் தமிழர்களின் நீதி மறுக்கப்பட்டுள்ளமையே
உண்மையாகும் என்பதனையும் அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.
இதேவேளை குறித்த கூட்டத்தில் கருத்து தெரிவித்த யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஆர்.இராசகுமாரன் தெரிவிக்கையில்,
யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஒழுங்கமைத்திருந்த ஆர்ப்பாட்டம் முன்னதாக திட்டமிட்டபடி நடைபெறும்.
இதன்போது 24ம் திகதி காலை 9மணிக்கு யாழ்.பல்கலைக்கழக முன்றலில் ஆரம்பமாகும் ஆர்ப்பாட்டம் ஊர்வலமாக சென்று யாழ்.நல்லூர் பகுதியில் உள்ள ஐ.நா அலுவலகத்தின் முன்னால் இடம்பெற்று அங்கே எமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஐ.நா அதிகாரிகளுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவித்திருக்கின்றார்.
இதேவேளை குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்களின் விருப்பத்திற்கிணங்க ஊடகவியலாளர்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகள் எடுப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில் கூட்டத்தின் நிறைவில் இடம்பெற்ற சம்பாஷணைகள் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு கூறப்பட்டது.
http://www.tamilwin.com/show-RUmtyCSdSUnq0B.html

Geen opmerkingen:

Een reactie posten