தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 25 januari 2015

இராணுவ முகாமுக்குள் சென்ற பந்து! குடும்பஸ்தர் மீது இராணுவத்தினர் தாக்குதல்!

ஆட்சியை கைப்பற்றுமாறு கோத்தபாய இராணுவத்திற்கு உத்தரவிட்டார்: மேர்வின் சில்வா
[ ஞாயிற்றுக்கிழமை, 25 சனவரி 2015, 09:22.45 AM GMT ]
தேர்தல் ஆணையாளர் அலுவலகம் மற்றும் தேர்தல் சம்பந்தப்பட்ட இடங்களின் அதிகாரத்தை பிடிக்குமாறும் இராணுவம் அவற்றுக்குள் செல்லும் போது எந்த இராணுவப் படைப் பிரிவு என்பதை அடையாளம் காண முடியாதபடி சீருடையில் இருக்கும் பதக்கங்களை அகற்றுமாறும் கோத்தபாய ராஜபக்ஷ உத்தரவிட்டிருந்தாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கூறியுள்ளார்.
எனினும் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியான தினம் இரவு அலரி மாளிகைக்கு சென்றிருந்தவர்களில் சிலர் கோத்தபாயவின் அந்த உத்தரவை ஏற்க மறுத்தனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவது பற்றி பேசியதாக உதய கம்மன்பில கூறுகிறார். தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நேரத்தில் ஏன் அவசரமாக ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும். ஏன் இந்த குழப்பம்.
மட்டக்குளி ரொக் ஹவுஸ் முகாமிற்கு 3 ஆயிரம் இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டிருந்தனர். நியூன்ஹெல்ல என்பவரும் புலனாய்வுப் பிரிவின் தலைவர் ஒருவரும் அங்கு இருந்தனர்.
சீருடையில் உள்ள பெஜ் மற்றும் தொப்பில் உள்ள பெஜ்களை அகற்றுமாறு இராணுவத்தினருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. அவை இருந்தால், எந்த படைப் பிரிவு என்பதை அடையாளம் கண்டு விடலாம் என்பதே இதற்கு காரணம்.
எனினும் அலரி மாளிகையில் அந்த நேரத்தில் இருந்த சிலர் இராணுவ சதித்திட்டத்தை ஏற்க மறுத்தனர். இந்த சம்பவத்தை உறுதிப்படுத்த சாட்சியங்கள் இருக்கின்றன எனவும் மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBRZKciwz.html

இராணுவ முகாமுக்குள் சென்ற பந்து! குடும்பஸ்தர் மீது இராணுவத்தினர் தாக்குதல்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 சனவரி 2015, 09:17.10 AM GMT ]
வடமராட்சி, எள்ளங்குளம் பகுதியில் இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான குடும்பஸ்தர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.
நேற்று மாலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
எள்ளங்குளம் பகுதியில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் இளைஞர் குழுவினர் உதைப்பந்தாட்டம் விளையாடியுள்ளனர்.
உதைப்பந்தாட்டம் விளையாடியவர்களின் பந்து அருகில் இருந்த இராணுவ முகாமிற்குள் விழுந்துள்ளது.
இதனை எடுப்பதற்காக இராணுவ முகாமுக்குள் சென்ற குடும்பஸ்தர் மீது அங்கு நின்ற இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தாக்குதலில் இருந்து ஒருவாறு தப்பிய அவர் வீட்டுக்கு ஓடியுள்ளார். நண்பர்களும் ஓடித் தப்பிவிட்டனர்.
தனது மோட்டார் சைக்கிளை மைதானத்தில் நிறுத்தியிருந்த அவர் அதை எடுக்க மீண்டும் சென்றுள்ளார். இதன்போது அவரை பிடித்த இராணுவத்தினர் சரமாரியாக மீண்டும் தாக்கியுள்ளனர்.
இராணுவத்தினரால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் குறித்த நபர் ஊறணி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதே பகுதியைச் நேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான செல்வராஜா ஜெகன் (வயது- 29) என்பவரே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அத்துடன் சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் வைத்தியசாலைக்கு சென்ற இராணுவ புலனாய்வாளர்கள் குறித்த நபரை மிரட்டியதுடன், பொலிஸ் முறைப்பாட்டை மீளப்பெற வேண்டுமென எச்சரிக்கை விடுத்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmtyBRZKciwy.html

Geen opmerkingen:

Een reactie posten