தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 31 januari 2015

72 மணித்தியாலங்களுக்குள் கிழக்கு மாகாண முதலமைச்சரை அறிவிப்போம்: ஹக்கீம்

இன்னும் 72 மணித்தியாலங்களுக்குள் கிழக்கு மாகாண முதலமைச்சரை ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் நியமிக்கும் இதற்கான இணக்கப்பாட்டை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்டுள்ளார் என கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட செயற்குழுக்கூட்டம் இன்று மருதமுனை கலாசார மத்திய நிலைய மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக்கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் ரவூப் ஹக்கீம்  இதனைத் தெரிவித்தார்.
கட்சியின் சிரேஸ்ட பிரதித் தலைவரும், கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வருமான ஏ.எல்.அப்தல் மஜீட் தலைமையில் இந்த செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.
இங்கு அமைச்சர் றஊப் ஹக்கீம் மேலும்; உரையாற்றுகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்; கிழக்கு மாகாணத்தில் அமைக்கப்போகின்ற ஆட்சியில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளையும் சார்ந்த பிரதிநிதிகளையும் இணைத்து ஒரு நல்லாட்சியை ஏற்படுத்த முயற்சிக்கின்றோம்
மக்களுக்கான இந்த நல்லாட்சியில் எல்லாக் கட்சிகளும் சார்ந்த பிரதிநிதிகளும் பூரண ஒத்துளைப்பை வழங்க முன்வர வேண்டும். நடக்கின்ற  100 நாள் வேலைத்திட்டத்தில் எல்லா விடையங்களையும் 100 நாட்களுக்குள் செய்து விடமுடியாது.
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு முகம் கொடுக்கக்கூடிய வகையில் எமது கட்சிப்பணிகளை துரிதப்படுத்தி கட்சிகளை புனரமைத்து நமக்குள் ஸ்தீரத்தன்மையை  ஏற்படத்த வேண்டும் என அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyBQVKces2.html

Geen opmerkingen:

Een reactie posten