தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 30 januari 2015

இலங்கை மீதான மீன் ஏற்றுமதி தடையை விரைவில் நீக்க ஐரோப்பிய ஒன்றியம் உறுதி

இலங்கையின் புதிய அரசாங்கம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் நம்பிக்கை
[ வெள்ளிக்கிழமை, 30 சனவரி 2015, 02:16.58 AM GMT ]
உள்ளூர் விசாரணைகளுக்கு அப்பால் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம், ஐக்கிய நாடுகளின் சர்வதேச விசாரணைகளுக்கும் ஒத்துழைக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
பான் கீ மூனின் பேச்சாளர் ஸ்டீபன் டுடாஜரிக் இது தொடர்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துரைத்தார்.
இலங்கையின் புதிய அரசாங்கம், ஐக்கிய நாடுகளுடன் எவ்வாறு ஒத்துழைக்கும் என்பதை தாம் அறிந்து கொள்ள முயற்சிப்பதாக டுடாஜரிக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் உள்ளக விசாரணைகள் இடம்பெறும். தேவையேற்படின் வெளிநாட்டு நிபுணர்களின் உதவிகள் பெற்றுக் கொள்ளப்படும் என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்திருந்தது.
இது தொடர்பிலேயே டுடாஜிரிக் கருத்துரைத்துள்ளார். இலங்கை அரசாங்கம் சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்கும் என்றே தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBQUKcft0.html
இலங்கை மீதான மீன் ஏற்றுமதி தடையை விரைவில் நீக்க ஐரோப்பிய ஒன்றியம் உறுதி
[ வெள்ளிக்கிழமை, 30 சனவரி 2015, 02:23.02 AM GMT ]
இலங்கை உரிய ஒழுங்கு செயற்பாடுகளை எடுக்குமானால், இலங்கை மீது விதிக்கப்பட்டுள்ள மீன் ஏற்றுமதி தடையை விரைவில் நீக்கமுடியும் என்று ஐரோப்பிய ஒன்றியம் உறுதியளித்துள்ளது.
இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர நேற்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வைத்து, பெல்ஜிய உதவி பிரதமர் டிட்லர் ரேய்டெர்ஸ் உட்பட்டவர்களை சந்தித்தபோதே இந்த உறுதிமொழி வழங்கப்படடுள்ளது.
மங்கள சமரவீர, ஐரோப்பிய ஒன்றியத்தின் சுற்றாடல் துறை ஆணையாளர் கர்மெனு வெலாவையும் சந்தித்தார்.
இதன்போது இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்திக் கொள்வது தொடர்பிலும் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுக்கள் நடத்தப்பட்டன.
http://www.tamilwin.com/show-RUmtyBQUKcft1.html

Geen opmerkingen:

Een reactie posten