தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 27 januari 2015

புலிகளுடன் தொடர்புடையவர்களுக்கு அபாய எச்சரிக்கை….

இலங்கையில் மைத்திரிபால சிறிசேன தலைமையில் புதிதாகச் சிங்கள ஆட்சி மலர்ந்துள்ளது. இதனால் தமிழ் மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இனி சொந்த நாட்டில் நிம்மதியாக, பாதுகாப்பாக வாழமுடியும் என்ற நோக்குடன் புலம்பெயர்ந்து வாழுகின்ற தாயகத் தமிழ் உறவுகள் தாயகம் திரும்ப எத்தனித்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் இலங்கையில் புதிய ஆட்சி மலர்ந்துள்ளமை வடக்கு, கிழக்கு இணைந்த தாயகத்தில் மீண்டும் தமிழ் மக்களின் பாதுகாப்பினைக் கேள்விக் குறியாக்கியுள்ளதால் புலத்திலிருந்து தாயகம் திரும்புகின்றவர்கள் நிதானமாகச் சிந்தித்துச் செயற்படவேண்டும்.
இந்த வகையில், தாயகத்தில் தமிழ் மக்களின் தமிழ்த் தேசிய உணர்வினை நசுக்கி தமிழனைக் கொல்ல வேண்டும் என்ற நோக்குடன் கடந்த 1979 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பயங்கரவாதாத் தடைச் சட்டம் தற்பொது பால்வேறு வடிவங்களில் உருப்பெற்று தமிழன் தன்னைத் தமிழன் என அடையாளப்படுத்த முடியாத அளவிற்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இச்சட்டத்தின் கீழ் கைதாகி காணமல்போன பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்கள் தொடர்பாத் தற்பொழுதும் தகவலில்லை. இந்நிலையில் தற்பொழுது ஆட்சியில் அமர்ந்துள்ள புதிய அரசாங்கமும் இச்சட்டத்தை நீக்கமுடியாது என்ற சமிக்ஞையைக் காட்டியுள்ளது. இதனால் வட,கிழக்கில் இராணுவத்தின் அராஜகம் தற்பொழுதும் தொடர்கின்றது.
இரவு 10 மணிக்குப் பின்னர் இராணுவ முகாம்களை விட்டு வெளியேறுகின்ற சிங்கள இராணுவத்தின் குண்டர்கள் வீதிப் பாதுகாப்பு என்ற போர்வையில் போய்களைப் போல் குடியிருப்புகளுக்குள் நடமாடுகின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் தெற்கில் புதிதாக சில சிங்களவர் ஆட்சியில் அமர்ந்துள்ள போதிலும் தாயகத்தில் தமிழ் மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்நிலையில், தமிழ் மக்களைக் கொல்ல வேண்டும், தாயகத்திலிருந்து தமிழனை அடித்துத் துரத்த வேண்டும் என்ற வெறியுடன் சிங்களத்தின் இராணுவத் தளபதியாக கடமையதற்றிய, முன்னாள் இராணுவத் தளபதியான சரத் பொன்சேகா தற்பொது மீண்டும் இராணுவத்தின் கொள்ளை வகுப்புகளை மேற்கொள்ளக் கூடிய அதிகாரத்தினைப் பெற்றுள்ளார்.
இவர், தாயகத்தில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் பொழுது முள்ளிவாய்க்கால் வாரை சுமார் இரண்டு இலட்சம் தமிழ் மக்களை கொத்துக் கொத்தாக, கொத்துக் குண்டுகளையும் பொஸ்பரஸ் குண்டுகளையும் பயன்படுத்தி கொலை செய்து, கொலைவெறித் தாண்டவமாடி சிறை சென்று திரும்பியுள்ள சிங்கள இனவாதி.
புதிய அரசாங்க இவருக்கு இராணுவப் பதவிகளைத் திரும்பவும் வழங்கிய கையுடன் விழுதலைப் புலிகளில் எஞ்சியவர்களையும் கொல்ல வேண்டும் என்கின்ற தன்னுடைய இனவாத வெறித்தனைத்தை வெளிக்காட்டியுள்ளார்.
பொன்சேகாவின் கூற்று
தற்பொழுது இவர், மேலைத்தேய நாடுகளிலும் தமிழ் நாட்டிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் இப்போதும் உள்ளனர். இதுபோல வடக்கு, கிழக்கிலும் ஒரு சில அரசியல்வாதிகள் இருக்கின்றனர். அதை பூரணமாக மறுக்க முடியாது. நிலைமையை அரசியல் ரீதியாவும் இராணுவ ரீதியாவும் சரியாக கையாளப்படாவிடின் பயங்கரவாதம் அதன் கொடூரத்தை மீண்டும் தொடங்கும். வடக்கில் இராணுவ பிரசன்னத்தை குறைக்க முடியுமென நான் நினைக்கின்றேன். எவ்வாறாயினும், யுத்தம் உச்ச கட்டத்திலிருந்ததை விட இப்போது மிக குறைவாகவே அங்கு இராணுவம் உள்ளது. தேவையேற்படின் பயன்படுத்தக்கூடிய அளவுக்கு வைத்துக்கொண்டு இராணுவ குறைப்பை மேற்கொள்ள வேண்டும் கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் சில தமிழீழ விடுதலைப் புலிகள் கைது செய்யப்பட்டனர்.
முன்னிருந்த அரசாங்கத்தின் அக்கறையின்மையே இவ்வாறானதொரு நிலைமை ஏற்படக் காரணம். நான் இராணுவத்தை விட்டு இளைப்பாறிய கையுடன் அவர்கள் தேடுதல் முயற்சியில் ஈடுபட்டிருக்க வேண்டும். இதன்மூலம் தப்பியிருந்த புலி உறுப்பினர்களை பிடித்திருக்கலாம். ஆனால், முன்னைய அரசாங்கம் இதை செய்யவில்லை. உண்மையில் முன்னைய அரசாங்கம், கே.பி, கருணா அம்மான், பிள்ளையான், எமில் காந்தன் ஆகிய புலித் தலைவர்களுக்கு செல்லம் கொடுத்திருந்தனர். இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் தவறினர்.
எனவே புலிகளை புதிய அரசாங்கம் தேடுவதற்கு இராணுவத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இதனால், புலத்திலும் தாயகத்திலும் புலிகளின் கட்டமைப்புக்களைச் சிதைக்க வேண்டும் என்கின்ற தன்னுடைய கொலை வெறித்தனமாக ஆசையை வெளிக்காட்டியுள்ளார்.
மஹிந்த, கோதாபய போனதால் அல்லது ஒதுக்கப்பட்டதால் தாயகத்தில் பாதுகாப்பு என நினைத்து திரும்புவதற்கு எத்தனிக்கின்றவர்கள் சற்றுச் சிந்திக்க வேண்டும். தற்போதய சூழலில் தாயகத்தில் விடுதலைப் புலிகளின் அமைப்பில் ஒருநாளேனும் ஆயுதப் பயிற்சி பெற்றவர்களுக்கும், புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் (வன்னியில்) இருந்தவர்களுக்கும், புலிகளுடன் இணைந்து பணியாற்றியவர்களுக்கும், போராளி மற்றும் மாவீரர்களின் குடும்பங்களுக்கும் பாதுகாப்பில்லை.
இதனால் தாயகத்திற்குத் திரும்புகின்ற தமிழ் மக்கள் மீண்டும் பயங்கரவாதாத் தடைச்சட்டத்தின் கீழ்க்கைது செய்யப்பட்டு காணமல்போகக் கூடிய ஏதுநிலை தேன்றியுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாதுகாப்பு வழங்கும் என்ற என்ணத்தில் தாயகம் திரும்புவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். குறிப்பாக இந்தியாவில் தங்கியுள்ளவர்கள் தாயகம் திரும்பமுன்னர் இங்குள்ள களநிலமைகள் தொடர்பாகச் சிந்தியுங்கள். எமது தேசிய இனத்தை உலக அரங்கிலிருந்து அகற்றி கொல்வதற்கு சிங்களம் திட்டமிட்ட வகையில் சதிவேலைகளில் இறங்கியுள்ளது. தங்களுடைய குடும்ப உறுப்பினர்களை தயகத்தில் பாதுகாப்பாக வைத்திருக்க முடியாத நிலையில் புலத்தில் தங்க வைத்துள்ள கூட்டமைப்பின் மூத்த அரசியல்வாதிகள், தங்களுடைய வாக்கு வங்கிகளை அதிகரிப்பதற்காக சிங்களத்துடன் இணைந்து சொல்லுகின்ற போலிவாக்குறுதிகளை நம்பி தாயகம் திரும்புவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
தாயகத்தில் மீண்டும் முன்னரைப் போன்று தமிழனும் ஆயுதபலத்துடன் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வரை புலத்திலுள்ளவர்கள் நாடுதிரும்புவதை தவிர்ப்பதே எமது உயிருக்குப் பாதுகாப்பாக அமையும் என்பதை மறந்துவிட வேண்டாம்.
http://www.jvpnews.com/srilanka/95611.html

Geen opmerkingen:

Een reactie posten