தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 30 januari 2015

மீன் சந்தையாக மாறிய இலங்கைப் பாராளுமன்றம்!



இலங்கை பாராளுமன்றம் இன்று மீன் சந்தையைப் போன்று கூச்சலும், குழப்பமும் நிறைந்ததாக இருந்ததை அவதானிக்க முடிந்தது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ஆளும் கட்சியினரே சபையில் குழப்பம் விளைவித்ததாக தெரிவிக்கப்படுகிறது. விமல் வீரவன்ஸ உள்ளிட்ட உறுப்பினர்கள் மீன் வியாபாரிகள் போன்று கூச்சலிட்டு கத்தியுள்ளனர்.
இதனால் பொறுத்துக் கொள்ள முடியாத சபாநாயகர் சபை நடவடிக்கைகளை ஒத்தி வைத்தார்.
பாராளுமன்றத்தில் சலசலப்பு - 20 நிமிடங்கள் சபை நடவடிக்கை ஒத்தி வைப்பு
பாராளுமன்றத்தில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கிடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக சபை 20 நிமிடங்கள் ஒத்தி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் பதவி விலக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதம நீதியரசர் தொடர்பில் கருத்து வெளியிட்ட போது, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உள்ளிட்டவர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இதனால் சபையில் குழப்ப நிலைமை ஏற்பட்டது. இதனை அடுத்து அவையின் நடவடிக்கைகளை ஒத்தி வைப்பதாக சபாநாயகர் சமால் ராஜபக்ச அறிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyBQUKcfw2.html

Geen opmerkingen:

Een reactie posten