தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 31 januari 2015

இலங்கைக்கு எதிராக அமெரிக்காவின் புதிய யோசனை

ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிராக 2000 முறைப்பாடுகள் பதிவு
[ சனிக்கிழமை, 31 சனவரி 2015, 08:12.59 AM GMT ]
ராஜபக்ச குடும்பத்தினரினதும் அரசியல்வாதிகளினதும் ஊழல் தொடர்பிலான முறைப்பாடுகள் 2000 பதிவாகியுள்ளதுடன், 30 முறைப்பாடுகளே இலங்கை ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பிலுள்ள தேசிய நூலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அதன் ஏற்பாட்டாளர் வசந்த சமரசிங்க இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
முன்னைய அரசாங்கம் பல ஊழல் மோசடிகள், குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில் இது தொடர்பில் இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும் எந்தவொரு நடவடிக்கையும் எடுத்தபாடில்லை.
ஊழல் எதிர்ப்பு குரல் அமைப்பினது ஊழல் மோசடி தொடர்பிலான ஆவணங்களை தற்போது திரட்டி வருகிறது.
இதற்கமைய இதுவரை 2000 முறைப்பாடுகள் எம்மிடம் கிடைக்கப்பெற்றுள்ளன. இவை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச, சிரந்தி ராஜபக்ச, யோசித்த, ரோஹித்த ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச குடும்பத்தினரிற்கும் மேலும் முன்னைய அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்திய அமைச்சர்கள் தொடர்பிலான மோசடி குறித்த முறைப்பாடுகளும் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
இதற்கமைய மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக 150 முறைப்பாடுகளும் சஜின்வாஸ் குணவர்தன எம்.பி.க்கு எதிராக 200 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.
இவற்றில் 30 முறைப்பாடுகள் இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேற்குறித்த முறைப்பாடுகளை உரிய முறையில் செய்து மேலும் 20 முறைப்பாடுகள் விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளது.
குறித்த முறைப்பாடுகளுக்கு அமைவாக சஜின்வாஸ் குணவர்த்தன எம்.பி. யின் மனைவியின் பெயரில் சிங்கப்பூரில் ஹோட்டல் இருப்பதாகவும் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு சிங்கப்பூர் வங்கி ஒன்றில் கணக்கு இருப்பதாகவும் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmtyBQVKcep7.html

இலங்கைக்கு எதிராக அமெரிக்காவின் புதிய யோசனை
[ சனிக்கிழமை, 31 சனவரி 2015, 07:27.37 AM GMT ]
இலங்கைக்கு எதிராக மற்றுமொரு யோசனையை ஐ.நா மனித உரிமை பேரவையில் முன்வைக்க அமெரிக்கா தயாராகி வருகிறது.
எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் இந்த யோசனையை சமர்பிக்க அமெரிக்கா உத்தேசித்துள்ளது.
2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் முன்வைக்கப்பட்ட யோசனைகளின் தொடர்ச்சியாக இந்த புதிய யோசனை அமையும் எனக் கூறப்படுகிறது.
இதனிடையே தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் துணை ராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் இன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
இவர் தனது விஜயத்தின் போது இலங்கையின் உயர்மட்ட தரப்பினரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
கொழும்பில் நடைபெறும் முதல் கட்டப் பேச்சுவார்த்தைகளின் பின்னர் பிஸ்வால், யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார்.
இலங்கை விஜயத்தை முடித்து கொள்ளும் துணை ராஜாங்க செயலாளர் எதிர்வரும் 3 ஆம் திகதி பிரித்தானியா நோக்கி புறப்பட்டுச் செல்ல உள்ளார்.
இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்பட உள்ள யோசனை குறித்து அவர் பிரித்தானிய அரசாங்கத்துடன் கலந்துரையாட எண்ணியிருப்பதாக கூறப்படுகிறது.
இதன் பின்னர் ஜெனிவா சென்றும் அவர் இந்த விடயம் தொடர்பாக பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக தெரியவருகிறது.
தொடர்புடைய செய்தி:
http://www.tamilwin.com/show-RUmtyBQVKcep6.html

Geen opmerkingen:

Een reactie posten