தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 23 juli 2014

இலங்கைக்கான ஆயுத ஏற்றுமதியை அதிகரித்துள்ள பிரித்தானியா!

எதிர்க்கட்சித் தலைவர்களுடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா ஒரே மேடையில்
[ புதன்கிழமை, 23 யூலை 2014, 08:53.44 AM GMT ]
எதிர்க்கட்சித் தலைவர்களை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஒரு மேடையில் சந்திக்க உள்ளார். 
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா ஆகியோருடன் முன்னாள் ஜனாதிபதி நாளைய தினம் ஒரே மேடையில் தோன்றவுள்ளார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை முறை ஏன் ஒழிக்க வேண்டும் ? என்ற தலைப்பில் கொழும்பு நகர மண்டபத்தில் நாளை பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் கருத்தரங்களில் இவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
கருத்தரங்கில் கலந்து கொள்வதாக இவர்கள் அனைவரும் அறிவித்துள்ளனர் என நியாயமான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி ரவி ஜயவர்தன தெரிவித்தார்.
இவர்களை தவிர ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவச் சபையின் தலைவர் கரு ஜயசூரிய உட்பட அதன் உறுப்பினர்களும் கலந்து கொள்ள உள்ளனர் எனவும் அவர் கூறினார்.
முதலில் இந்த கருத்தரங்கு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடத்தப்படவிருந்ததுடன் இறுதி நேரத்தில் அரசாங்கத்தின் அழுத்தங்கள் காரணமாக அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை இந்த கருத்தரங்கில் முன்னாள் பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவும் கலந்து கொள்ள உள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRXLckt3.html
இலங்கைக்கான ஆயுத ஏற்றுமதியை அதிகரித்துள்ள பிரித்தானியா
[ புதன்கிழமை, 23 யூலை 2014, 09:21.14 AM GMT ]
இலங்கையின் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பில் பிரித்தானியா கவலைகளை வெளியிட்டு வரும் நிலையில், பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யப்படுவது அதிகரித்துள்ளதாக பிரித்தானிய நாடாளுமன்ற குழு கண்டறிந்துள்ளது.
பிரித்தானிய நாடாளுமன்றத்தின் ஆயுத ஏற்றுமதி கட்டுப்பாட்டு குழு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தெரியவந்துள்ளது.
இலங்கைக்கான ஆயுத ஏற்றுமதி 614 வீதமாக அதிகரித்துள்ளதாகவும் நடைமுறையில், 49.6 மில்லியன் பவுண்கள் ( 79 அனுமதிப்பத்திரங்கள்) மற்றும் 8.1 மில்லியன் பவுண்ட்ஸ்களுக்கான (49 அனுமதிப்பத்திரங்கள்) அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரியவந்துள்ளது.
ஏனைய நாடுகளை விட இலங்கைக்கு அதிகளவில் ஆயுதங்களை ஏற்றுமதி செய்துள்ளமை தொடர்பில் குறித்த நாடாளுமன்றக் குழு பிரித்தானிய அரசாங்கத்திடம் பதிலைப் பெற முயற்சித்து வருகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyHRXLckt6.html

Geen opmerkingen:

Een reactie posten