தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 28 juli 2014

கூட்டமைப்புக்கு சர்வதேசத்தினாலேயே அழிவு ஏற்படும் என்கிறது அரசாங்கம்!



குட்டிமணி, தங்கத்துரை ஆகியோரின் 31வது ஆண்டு நினைவு தின நிகழ்வு
[ திங்கட்கிழமை, 28 யூலை 2014, 04:49.29 AM GMT ]
1983ம் ஆண்டு ஜூலைக் கலவரத்தின் போது வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட தமழீழ விடுதலை இயக்கத்தின் மூத்த உறுப்பினர்களான குட்டிமணி, தங்கத்துரை ஆகியோருக்கு அஞசலி செலுத்தும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மட்டக்களப்பில் இடம்பெற்றது.
இவ்வஞ்சலி நிகழ்வு தமிழீழ விடுதலை இயக்கத்தின் மட். மாவட்ட காரியாலயத்தில் அமைப்பின் மாவட்ட செயலாளர் குணசுந்தரம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் உபதலைவர்களுமான கோவிந்தம் கருணாகரம் (ஜனா), பிரசன்னா இந்திரகுமார் மற்றும் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட உப செயலாளர் சற்குணராசா (திலக்), அம்பாறை மாவட்ட செயலாளர் லோகநாதன் (நாதன்), அமைப்பின் மூத்த உறுப்பினரான பிரபு மற்றும் ஏனைய உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
தளபதிகளான தங்கத்துரை, குட்டிமணி ஆகியோரின் உருவப்படங்களுக்கு விளக்கேற்றி மலர்மாலை அணிந்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு, மிகவும் எளிமையான முறையில் மேற்படி நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது அதிதிகளினால் நினைவுரைகள் நிகழ்த்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyHRcLciv5.html
மாவை சேனாதிராசாவே தலைமைக்கு பொருத்தமானவர்!- சீ.வி. விக்னேஸ்வரன்
[ திங்கட்கிழமை, 28 யூலை 2014, 05:06.36 AM GMT ]
பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மாவை.சேனா­தி­ரா­சாவே தமி­ழ­ரசுக் கட்சியின் தலைமைப் பத­விக்குப் பொருத்­த­மா­னவர். தலைவர் இரா.சம்­பந்­த­னுக்கு அடுத்­த­ப­டி­யாக அவரே தமி­ழ­ரசுக் கட்­சியை நீண்­ட­கா­ல­மாக கட்­டி­வ­ளர்த்த பெரு­மைக்­கு­ரி­யவர் என வட­மா­காண முத­ல­மைச்சர் சீ.வி.விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்தார்.
தமி­ழ­ரசுக் கட்­சியின் தலைமைப் பத­விக்கு வட­மா­காண முத­ல­மைச்சர் சீ.வி.விக்­கி­னேஸ்­வரன் வர­வுள்­ள­தாக வெளியா­கிய செய்தி தொடர்­பாக கருத்துத் தெரி­விக்­கும்­ போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.
இவ் விடயம் தொடர்­பாக அவர் மேலும் தெரி­விக்­கையில்,
வட­மா­காண ஆளுநர் மீள் நிய­மனம் கார­ண­மாக முத­ல­மைச்சர் பத­வி­ வி­லகத் திட்­ட­மிட்­டுள்ளார் எனவும் முத­ல­மைச்சர் பத­வி­யி­லி­ருந்து விலகி பெரிய பத­வியை குறி­வைக்­கின்றார் எனவும் சிலர் கூறி­வந்­துள்­ளனர்.
இவ் விட­யங்கள் அனைத்தும் பொய் எனத் தெரிந்துகொண்ட பின்னர் அதே கதையைக் கூறி­ய­வர்கள், நான் தமி­ழ­ரசுக் கட்­சியின் தலைமைப் பத­விக்கு வர­வுள்­ள­தாக கூறு­கின்­றனர்.
அப்­ப­த­வியை நான் பொறுப்­பேற்பேன் என எவ­ருமே நினைக்கக் கூடாது. உண்­மையில் தமி­ழ­ரசுக் கட்­சியின் தலைமைப் பத­விக்கு மாவை.சேனா­தி­ரா­சாவே வர­வேண்­டி­வரும், வரக்­கூ­டி­ய­வ­ரா­கவும் உள்ளார்.
இதனை நான் உறு­தி­யாக கூறு­கின்றேன். நான் அறிந்­த­வ­ரையில் கட்­சியில் தலை­மை­களும் அவ்­வாறே கரு­து­கின்­றனர்.
இவ்­வா­றான கதை­களைப் பரப்புவதன் மூலம் சிலர் கட்சியைச் சிதைக்க எடுக்கும் முயற்சியை முறியடித்து மாவை.சேனாதிராசாவிற்கு முழு ஒத்துழைப்பையும் வழங்குவேன் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRcLciv6.html
கூட்டமைப்புக்கு சர்வதேசத்தினாலேயே அழிவு ஏற்படும் என்கிறது அரசாங்கம்
[ திங்கட்கிழமை, 28 யூலை 2014, 05:18.49 AM GMT ]
சர்­வ­தேச அமைப்­புக்­களை தூண்­டி­விட்டு நாட்டை பிரிக்க முயற்­சித்து வரும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பிற்கு சர்­வ­தே­சத்­தி­னா­லேயே அழிவு ஏற்­படும் எனவும் அர­சாங்கம் எச்­ச­ரித்­துள்­ளது.
தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பை பிள­வு­ப­டுத்த அர­சாங்கம் நினைக்­கின்­றது என அக் கட்­சியின் தலைவர் இரா. சம்­பந்தன் தெரி­வித்­துள்­ளதை அடுத்து அது தொடர்பில் அர­சாங்­கத்­திடம் வின­விய போதே அமைச்­ச­ரவைப் பேச்­சாளர் கெஹ­லிய ரம்­புக்­வெல மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,
பிரி­வினை வாதத்­தினை தூண்­டு­வதும் நாட்டை பிள­வு­ப­டுத்த நினைப்­பதும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் வேலையே தவிர அர­சாங்கம் யாரையும் அழிக்க ஒரு­போதும் செயற்­ப­டாது.
தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பினை பிள­வு­ப­டுத்­து­வ­தனால் அர­சாங்­கத்­திற்கு எவ்­வித இலா­பமும் கிடைக்­கப்­ போ­வ­தில்லை. அவ்­வா­றா­ன­தொரு அவ­சி­யமும் எமக்கு இல்லை.
எனினும் கூட்­ட­மைப்பின் தலை­வரே அவ்­வா­ற­ன­தொரு கருத்­தனை குறிப்­பிட்­டி­ருப்­பது உண்­மை­யி­லேயே தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பிற்குள் பிள­வினை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளதா என்று எண்ணத் தோன்­று­கின்­றது.
கட்­சிக்குள் முரண்­பா­டுகள் ஏற்­பட்­டுள்­ள­தெனின் அதனை தீர்த்து வைக்க முயற்­சிக்க வேண்­டுமே தவிர அர­சாங்­கத்தை குற்றம் சுமத்­து­வது அர்த்­த­மற்ற ஒன்­றாகும்.
அதேபோல் ஊட­கங்­களின் கருத்­துக்கள் தனித்­து­வ­மா­னவை. அதனை அர­சாங்­கத்­துடன் ஒப்­பிட்டு பேசவும் முடி­யாது.
மேலும் இன்று சர்­வ­தேச அமைப்­பு­களின் மூலம் அவர்­களின் அழுத்­தங்­களை பயன்­ப­டுத்தி இந்த நாட்டை பிள­வு­ப­டுத்த நினைப்­பது அர­சாங்­க­மல்ல, தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பி­னரே.
இலங்­கைக்கு எதி­ராக சர்­வ­தேச ரீதியில் செயற்­ப­டு­வதும் பொய்­யான சாட்­சி­களை தயா­ரித்து கொடுப்­பதும் அர­சாங்­க­மல்ல, தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பி­னரே.
இந்த நாட்டின் பிர­ஜை­க­ளாக இருந்து கொண்டு தாய் நாட்­டிற்கு எதி­ராக துரோகச் செயல்­களில் ஈடு­ப­டு­வது கண்­டிக்­கத்­தக்க விட­யமே.
எனினும் அவர்­க­ளுக்கும் இலங்­கையில் அர­சியல் செயல்­களில் ஈடு­பட உரிமை உண்டு. அதனை நாம் ஏற்றுக் கொண்­டுள்­ளதன் கார­ணத்­தி­னா­லேயே இடமளித்துள்ளோம்.
எனினும் இன்று சர்வதேசத்துடன் கைகோர்த்து தாய் நாட்டிற்கு புதிதாக இந்த நாட்டை பிளவுப்படுத்த முயற்சிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சர்வதேசத்தின் சூழ்ச்சிகளினாலேயே அழிவை எதிர்நோக்குவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRcLciv7.html

1 opmerking: