தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 26 juli 2014

15 வயதுச் சிறுமிக்கு நயினாதீவு சென்றவேளை காதல்: 23 வயது வாலிபரிடம் கற்பை இழந்தார் !

நயினாதீவு திருவிழாவுக்குச் சென்ற 15 வயதுச் சிறுமி காதல் என்ற போர்வையில் 23 வயது இளைஞனால் கற்பழிக்கப்பட்ட சம்பவம் இடம் பெற்றுள்ளது. யாழ்., இளவாலை, பனிப்புலம் பகுதியினைச் சேர்ந்த 15 வயதுச் சிறுமியினை பாலியல் துஷ்பிரயோகம் செய்த, குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 23 வயது இளைஞனை ஆகஸ்ட் மாதம் 6ம் திகதி வரை தடுப்பு காவலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார் என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. அராலி சுழி புரத்தை சேர்ந்த இந்த இளைஞர் காதல் என்னும் போர்வையில் சிறுமியை கற்பழித்துள்ளார்.

நடந்தது என்ன ?
இளவாலை பனிப்புலத்தை சேர்ந்த 15 வயதான சிறுமி ஒருவர், சில வாரங்களுக்கு முன்னர், நயினாதீவு அம்மன் ஆலயத்திற்குச் சென்றிருந்த தருணத்தில் குறித்த இந்த இளைஞரோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் உடனே தத்தமது தொலைபேசி இலக்கங்களை பரிமாறிக்கொண்டார்களாம். பின்னர் வீடு திரும்பியதும், இவர்கள் தொலைபேசியூடாக அரட்டை அடிப்பது வழக்கம். கடந்த 19ம் திகதி இச் சிறுமியை பறாளை முருகன் ஆலயத்திற்கு அருகில் அழைத்துச் சென்ற இன் நபர், அவரை ஒரு வீட்டில் வைத்து கற்பழித்துள்ளார். இவர் இவ்வாறு இச் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தது இது தான் முதல் தடவையா என்று தெரியவில்லை. இது இவ்வாறு இருக்க,
இதன் பின்னர் சிறுமி வீட்டிற்கு செல்லவில்லை. சிறுமி, பஸ் ஏறி யாழ். நகரம் வந்து, நயினாதீவிலுள்ள தனது பாட்டியினைத் தேடிச் சென்றுள்ளார். பாட்டி, அச்சிறுமியை வீட்டுக்குச் செல்லுமாறு கூறியுள்ளார். இந்நிலையில், குறித்த சிறுமி, வீட்டுக்குச் செல்லாது தனது நெல்லியடியிலுள்ள நண்பியின் வீட்டிலும் 2 நாட்கள் சென்று தங்கியுள்ளார். இச் சிறுமி வீட்டிற்கு செல்லாமல் இருக்க ஒரு காரணம் உண்டு. அது என்னவென்றால், மாதவிடாய் தள்ளிப்போனது தான். தான் கர்பமாக இருப்பதை அவர் உணர்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், சிறுமியினைக் காணவில்லையென சிறுமியின் தாயார் கடந்த 19ஆம் திகதி இளவாலைப் பொலிஸ் நிலையத்தின் முறைப்பாடு பதிவு செய்திருந்தார்.
மேற்படி சந்தேகநபருடன் தமது மகள் கதைப்பதினை அறிந்திருந்த, சிறுமியின் பெற்றோர் இளைஞனின் வீட்டிற்குச் சென்று சண்டை பிடித்துள்ளனர். இதேவேளை கடந்த வியாழக்கிழமை (24) சிறுமி மத்திய பேருந்து நிலையத்திற்கு வந்து, அங்கு நின்றிருந்த ஒருவரின் தொலைபேசியினை வாங்கி தனது காதலனின் தொலைபேசிக்கு அழைப்பினை ஏற்படுத்தியுள்ளார். சிறுமி தொலைபேசியில் பேசிய விதம், அழுது கொண்டு நின்ற நிலையைப் பார்த்து அந்த நபர் சந்தேகம் கொண்டுள்ளார். இன் நபர் வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையம் சென்று, மத்திய பேருந்து நிலையத்தில் சிறுமியொருவர் அநாதரவாக நிற்பதாகவும் அவரை மீட்கும்படியும் கேட்டுள்ளார்.
இதனையடுத்து, இது தொடர்பில் வட்டுக்கோட்டைப் பொலிஸார் இளவாலைப் பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டுவந்ததினை அடுத்து, இளவாலைப் பொலிஸார் முறைப்பாட்டாளரையும் அழைத்துக்கொண்டு, பேருந்து நிலையத்திற்குச் சென்று சிறுமியினை மீட்டனர். தொடர்ந்து சிறுமியிடம் விசாரணை செய்த போது, மேற்படி சந்தேகநபர் சிறுமியினை பாலியல் துஷ்பிரயோகம் செய்த விடயத்தை தெரிவித்துள்ளார். இதனையடுத்து, சந்தேகநபரைக் கைது செய்த பொலிஸார் வியாழக்கிழமை (24), சிறுவர் நீதிமன்ற நீதவானின் வாசஸ்தலத்தில் ஆஜர்ப்படுத்தினர். இதன்போதே நீதவான் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்தார். பெற்றோர் கவனக் குறைவால் யாழ்பாணத்தில் என்னவெல்லாம் நடக்கிறது பார்த்தீர்களா ?
http://www.athirvu.com/newsdetail/573.html

Geen opmerkingen:

Een reactie posten