தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 30 juli 2014

பிரிட்டன் பெண் ஒருவரை துஸ்பிரயோகம் செய்த நபர் கைது - சிறுமி துஸ்பிரயோக​ம்! முதியவா் கைது

வவுனியாவில் காணாமல்போன 8 வயது சிறுவன் யாழில் மீட்பு
[ புதன்கிழமை, 30 யூலை 2014, 07:42.16 AM GMT ]
வவுனியா பேருந்து நிலையத்தில் காணாமல்போன 8 வயதுச் சிறுவன் இன்று யாழ்ப்பாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளான்.
வவுனியா காரிக்குளத்தைச் சேர்ந்த பெர்ணான்டோ சாரங்கன் என்ற சிறுவனே காணாமல் போயிருந்த நிலையில் இன்று கண்டுபிடிக்கப்பட்டு, பொலிஸ் நிலையத்தில் இளைஞன் ஒருவரால் ஒப்படைக்கப்பட்டுள்ளான்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
திருகோணமலையிலுள்ள உறவினர் வீடொன்றிற்குச் சென்று திரும்பி வரும்போது நேற்று வவுனியா பேருந்து நிலையத்தில் வைத்து சிறுவன் காணாமல்போயுள்ளான்.
இதனையடுத்து, வவுனியா பொலிஸ் நிலையத்தில் உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று இளைஞன் ஒருவரால் குறித்த சிறுவன் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளான்.
யாழ்ப்பாணம் பொலிஸார் சிறுவனின் பெற்றோரை யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு அழைத்துள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyHQULchu2.html
சுன்னாகத்தில் வாள்வெட்டுக்கு இலக்காகி வர்த்தகர் படுகாயம்- விபத்தில் இளைஞன் பலி
[ புதன்கிழமை, 30 யூலை 2014, 07:43.16 AM GMT ]
யாழ். சுன்னாகம் நகரப் பகுதியில் வர்த்தகர் ஒருவர் இனந்தெரியாதோரின் வாள்வீச்சுக்கு இலக்காகி  படுகாயமடைந்தார்.
நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 9 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் இளவாலை பொலிஸ் நிலைய வீதியைச் சேர்ந்த இராஜரத்தினம் இராஜகுமார் (வயது 38)  என்ற வர்த்தகரே  படுகாயமடைந்து தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
சுன்னாகம் நகர்ப் பகுதியில் வர்த்தக நிலையம் வைத்திருக்கும் குறித்த நபர் தனது கடையைப் பூட்டிவிட்டு நேற்று இரவு 9 மணியளவில் காங்கேசன்துறை வீதியில் நடந்து சென்றுள்ளார்.
இதன்போது முகத்தை துணியால் மூடிக் கட்டிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், அவரை வாளால் வெட்டிக் காயப்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
வாள் வெட்டுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி
மட்டக்களப்பு - திருகோணமலை வீதியில் இறால்குளி பாலம் பகுதியில் இன்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கிண்ணியாவில் இருந்து மூதூர் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கொங்கிரீட் தூண் ஒன்றில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த இரண்டு பேர் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து சென்ற நபர் உயிரிழந்துள்ளார்.
கிண்ணியா பிரதேசத்தை சேர்ந்த 19 வயதான இளைஞனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyHQULchu3.html
பிரிட்டன் பெண் ஒருவரை துஸ்பிரயோகம் செய்த நபர் கைது - சிறுமி துஸ்பிரயோக​ம்! முதியவா் கைது
[ புதன்கிழமை, 30 யூலை 2014, 07:47.13 AM GMT ]
பிரிட்டன் பெண் ஒருவரை துஸ்பிரயோகம் செய்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொத்துவில் அருகம்பே பிரதேசத்தில் குறித்த பெண் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்.
20 வயதான பிரிட்டன் யுவதியை நேற்று மாலை குறித்த நபர் அருகம்பே குடாகள்ளி பிரதேசத்தில் வைத்து துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரண்டு சந்தேக நபர்களை கைது செய்ய உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் பொத்துவில் நீதவான் எதிரில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.
பொத்துவில் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
சிறுமி மீது துஸ்பிரயோகம் - முதியவர் கைது
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகசேனையை அண்மித்த தோட்டமொன்றில் குடும்ப வறுமை காரணமாக 14 வயதுடைய சிறுமி தனது பாடசாலை கல்வியை இடை நிறுத்தி விட்டு தனது நகரத்தில் உள்ள பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த 60 வயதுடைய வர்த்தகரின் வீட்டிற்கு வேலைக்காக சென்றுள்ளார்.
சம்பந்தப்பட்ட வர்த்தகரின் முதல் மனைவி வெளி நாட்டில் தொழில் புரிவதோடு 3 பிள்ளைகளும் உள்ளனர்.
இவரின் மனைவி தன்னை விட்டுப் பிரிந்ததால் இரண்டாவது திருமணம் முடித்துள்ளார்.  சம்பந்தப்பட்ட வர்த்தகர் இரு மனைவிமாரையும் விவாகரத்துச் செய்துள்ளார்.
இவர் தனிமையில் இருந்த போது  குறித்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என சிறுமியின் தரப்பினர் லிந்துலை பொலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட வர்த்தகரை கைது செய்வதற்காக  தேடும் பணியில் ஈடுபட்ட போது வர்த்தகர் தலைமறைவாகியுள்ளார்.
எனினும் நேற்று சட்டத்தரணியுடன் லிந்துலை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
இவரை பொலிஸார் கைது செய்து நுவரெலியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
சிறுமி தற்போது 7மாத கர்ப்பிணியாக இருப்பதோடு குடும்ப வறுமை காரணமாக உடுதுணிகள் வாங்க முடியாத நிலையில் இருக்கின்றமை குறிப்பிடதக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyHQULchu4.html

Geen opmerkingen:

Een reactie posten