தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 28 juli 2014

தமிழர் பாரம்பரியத்தில் வீரம் இரண்டறக் கலந்தது: மாட்டு வண்டிச் சவாரிப் போட்டியில் மாவை எம்.பி!

போலி நாணயத்தாள்களுடன் ஒரு குடும்பமே கைது (செய்தித் துளிகள்)
[ திங்கட்கிழமை, 28 யூலை 2014, 05:32.36 AM GMT ]
குருணாகல் பிரதேசத்தில் போலி நாணயத்தாள்களுடன் ஒரு குடும்பத்தையே பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்களிடம் 22 போலி நாணயத்தாள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வேயான்கொட பிரதேசத்திலிருந்து வான் ஒன்றில் வந்து, இரண்டாயிரம் ரூபா கொடுத்து மரக்கறி வாங்கிய போது, குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாய், மகள், மருமகன் மற்றும் மகன் ஆகியோர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
2000 ரூபா பெறுமதியான இருபது போலி நாணயத்தாள்களும் 1000 ரூபா பெறுமதியான இரண்டு போலி நாணயத்தாள்களும் சந்தேக நபர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் குருணாகல் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஜாஎல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் படுகாயம்
ஜாஎல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று காலை ஜாஎல ருக்மனிதேவி சந்தியில் இடம்பெற்றதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நபர், ராகம வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காயமடைந்தவரின் நிலைமை ஆபத்தான கட்டத்தில் உள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டார் மஹிந்த சமரநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜாஎல பிரதேசத்தில் வங்கியொன்றில் பணத்தை வைப்பிலிட மனைவியுடன் சென்று கொண்டிருந்த போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
காயமடைந்தவர் சீதுவ பிரதேசத்தில் குளிர்பான விநியோக நிறுவனமொன்றின் உரிமையாளர் எனத் தெரிவிக்கப்படுகிறது. 
விமானப்படை முகாம் மீதான தாக்குதல்!- பிரதான சந்தேக நபர் தொடர்ந்தும் விளக்கமறியலில்
அனுராதபுரம் விமானப்படை முகாம் மீது நடத்தப்பட்ட விடுதலைப் புலிகளின் தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அனுராதபுரம் விசேட மேல் நீதிமன்றத்தில் சம்பவம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, சந்தேக நபரை எதிர்வரும் 4ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த சந்தேக நபருக்கு எதிராக ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் நான்கு விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு எதிராக குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்ய நீதிபதி ரேகா சுவர்ணாதிபதி குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அனுமதி வழங்கினார்.
அனுராதபுரம் விமானப்படை தளம் மீது 2007 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 14 படையினர் கொல்லப்பட்டதுடன், 10 விமானங்கள் அழிக்கப்பட்டன. மேலும் ஆறு விமானங்கள் பாதியளவில் அழிவடைந்தன.
தங்காலை பிரதேச சபைத் தலைவர் வெற்றிடம் நிரப்பப்படவில்லை
தங்காலை பிரதேச சபைத் தலைவர் வெற்றிடம் இன்னமும் நிரப்பப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
தங்காலை பிரதேச சபையின் தலைவராக கடமையாற்றி வந்த சம்பத் விதான பத்திரணவிற்கு நீதிமன்றம் 20 ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் பிரஜை குராம் ஷேக் படுகொலை தொடர்பிலான வழக்கில், சம்பத் விதான பத்திரண உள்ளிட்ட நான்கு பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சம்பத் விதான பத்திரணவிற்கு பதிலீடாக ஒர் தலைவர் இதுவரையில் நியமிக்கப்படவில்லை.
பிரதேச சபையின் தலைவரது உத்தியோகபூர்வ அறையின் சாவியை விதான பத்திரண எடுத்துச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் புதிதாக தலைவர் நியமிக்கப்பட்டாலும் அவருக்கு பணிகளை முன்னெடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyHRcLciwz.html
பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாம் அடுத்த வருடம் மூடப்படும்
[ திங்கட்கிழமை, 28 யூலை 2014, 06:16.20 AM GMT ]
வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாம் அடுத்த வருடம் நடு பகுதியில் மூடப்படும் என புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் ஜகத் விஜேதிலக்க தெரிவித்துள்ளார்.
பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் தற்போது 122 விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது.
இவர்கள் விடுவிக்கப்பட்ட பின்னர், புனர்வாழ்வு முகாம் மூடப்படும் என்றும் அவர் கூறினார்.
வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் சிங்கள மொழி பாடநெறியை பூர்த்தி செய்த, முன்னாள் போராளிகளுக்கு சான்றிதழ்களை வழங்கும் நிகழ்வில் பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
2009 ஆம் ஆண்டு போர் நிறைவுக்கு வந்த பின்னர், 12 ஆயிரம் முன்னாள் போராளிகள் அரசாங்கத்தின் புனர்வாழ்வு பயிற்சிகளுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் 11 ஆயிரத்து 800 பேர் பயிற்சிகளை முடித்து சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர்.
யுத்தத்தின் முடிவின் போது 594 சிறுவர் போராளிகள், பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்தனர். இவர்களுக்கு கல்வி கற்பதற்கான ஏற்பாடுகளை பாதுகாப்பு அதிகாரிகள் செய்து கொடுத்தனர்.
இவர்களில் பலர் உயர்கல்வியை கற்று வருகின்றனர். புனர்வாழ்வு முகாமில் பயிற்சி பெற்று சென்றவர்களில் நான்கு பேர் தற்போது மருத்துவர்களாக தேசிய வைத்தியசாலைகளில் பணியாற்றி வருகின்றனர்.
அத்துடன் புனர்வாழ்வு ஆணையாளர் அலுவலகத்தினால் வழங்கப்பட்ட தொழிற்பயிற்சிகளை முடிந்த முன்னாள் போராளிகள் பலர், வெளிநாடுகளில் தொழில் புரிந்து வருகின்றனர் எனவும் புனர்வாழ்வு ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRcLciw0.html

தமிழர் பாரம்பரியத்தில் வீரம் இரண்டறக் கலந்தது: மாட்டு வண்டிச் சவாரிப் போட்டியில் மாவை எம்.பி
[ திங்கட்கிழமை, 28 யூலை 2014, 06:51.57 AM GMT ]
யாழ். மட்டுவில் துர்க்கா சனசமூக நிலையத்தால் சந்திரக்கிராய் சவாரித்திடலில் மாபெரும் மாட்டு வண்டிச் சவாரி நடைபெற்றுள்ளது.
வடமாகாணத்திலுள்ள பல சவாரி மாடுகள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டு போட்டியிட்டு பரிசில்களை தட்டிச்சென்றன.
இந்தப் போட்டியில் விருந்தினர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை. சேனாதிராஜா, சி.சிறீதரன், வடமாகாணசபை உறுப்பினர் கே.சயந்தன், பச்சிலைப்பள்ளி பிரதேச சபை உறுப்பினர் சுரேன் உட்பட பெருமளவான பாரம்பரிய விளையாட்டு அபிமானிகள் கலந்கொண்டனர்.
இதில் வெற்றியீட்டியர்களுக்கு மதிப்பளித்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராஜா,
பண்டைய எமது சமூகத்தின் சுவடுகளை பின்பற்றி நடக்கக்கூடிய விழுமியங்களில் இந்த மாட்டு வண்டிச் சவாரியும் ஒன்று.
தமிழரின் இரத்தத்தில் ஊறிய அம்சமான வீரத்தின் வெளிப்பாடு இது. காளை அடக்குதல் நமது பண்பாடு. ஆண்மையை நிரூபிக்க அன்று காளை அடக்குதல் ஒரு வீர விளையாட்டாக இருந்தது.
அது இன்றும் பின்பற்றப்படுகின்றது. நாம் எதை இழந்துவிட்டாலும் நம் வீரத்தை அந்த பண்பாட்டை இழக்கமாட்டோம் என்பதற்கு இந்த மாட்டு வண்டிச் சவாரிகள் நல்ல உதாரணம்.
நவநாகரீக உலகில் கணனி விளையாட்டுக்களில் உலகம் சுருங்கிவிட்ட நிலையில், தமிழர்கள் கணினியிலும் உச்ச நிலையில் இருக்கின்ற அதே வேளை எமது பண்பாடான இப்படியான பாரம்பரிய விளையாட்டுக்களுக்கு முன்னுரிமை அளித்து வருவதும் நாம் அழிந்துவிடாமல் இருப்பதற்கு பலமாய் இருக்கின்றது.
எனவே இந்த பாரம்பரிய விளையாட்டு சிந்தனையாளர்களை அதை செயல் வடிமாக்குகின்றவர்களை, அதை எமது சந்ததிக்கும் கையளிக்கின்றவர்களை, நாம் போற்றுகின்றோம் பாராட்டுகின்றோம் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRcLciw1.html

Geen opmerkingen:

Een reactie posten