தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 29 juli 2014

அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க முயன்ற இலங்கையர் உள்ளிட்ட குழுவினர் கைது!



இலங்கையர்கள் உட்பட்ட சட்டவிரோத குடியேறிகள் குழு ஒன்று மெக்சிக்கோவில் இருந்து டெக்ஸாஸ் செல்லும் வழியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச செய்தி ஒன்று இதனை தெரிவித்துள்ளது.
கடந்த வார இறுதியில் இந்த குழு அமெரிக்காவின் மாநிலமான டெக்ஸாஸிக்குள் பிரவேசிக்கும் நோக்கில் சென்று கொண்டிருந்தபோது கடந்த 26 ஆம் திகதி கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரியோ கிரான்டே ஊடாகவே இந்தக்குழு டெக்ஸாஸுக்கும் பிரவேசிக்க முற்பட்டுள்ளது.
இலங்கை, பங்களாதேஸ் மற்றும் நேபாளத்தை சேர்ந்தவர்கள் இந்தக்குழுவில் அடங்கியுள்ளனர். இவர்கள் அனைவருமே ஆண்களாவர்.
மெக்ஸிக்கோவின் ஊடாக டெக்ஸாஸுக்கு சட்டவிரோதமாக பிரவேசிப்போரில் ஆசிய நாட்டவரே அதிகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmsyHRdLchp7.html

Geen opmerkingen:

Een reactie posten