தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 26 juli 2014

போர் குற்றம் தொடர்பான ஐ.நா விசாரணை அறிக்கை 2015 இல்!

யோகா பயிற்சியில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு
[ சனிக்கிழமை, 26 யூலை 2014, 08:36.06 AM GMT ]
யோகாசன பயிற்சியில் ஈடுபட்ட களனி பல்கலைக்கழக மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இது சம்பந்தமாக கிரிபத்கொட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்த மாணவியின் சடலம் கொழும்பு பொலிஸ் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மரணத்திற்கு பின்னரான விசாரணைகள் இன்று நடைபெறுகின்றன.
உயிரிழந்த மாணவி களனி பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டில் பயின்று வந்தவர். அவர் பயின்று வந்த நடிப்பு கலை பாடநெறியில் யோகாசனமும் ஒரு பாடம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyHRaLcjx1.html
காஸா பிரச்சினையை தீர்க்காத ஐ.நா 3 ஆண்டுகளாக இலங்கையை பின்தொடர்கிறது!- அமைச்சர் பீரிஸ்
[ சனிக்கிழமை, 26 யூலை 2014, 09:44.14 AM GMT ]
காஸாவில் ஏற்பட்டுள்ள துன்பத்திற்கு தீர்வுகாணத் தவறியுள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பு கடந்த 3 ஆண்டுகளாக இலங்கையை பின் தொடர்ந்து வருவதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் நேற்று நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.
இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் காஸாவில் அப்பாவி மக்களை கொலை செய்து மேற்கொண்டு வரும் தாக்குதல்களை கண்டித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் கொண்டு வந்த சபை ஒத்திவைப்பு நேர விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அமைச்சர் பீரிஸ் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மனித உரிமைகளை அரசியல் ஆயுதமாக்கி கொண்டுள்ளனர் என்பதை இந்த செயல் மூலம் காணமுடிகிறது.

நாடுகளில் உள்விவகாரங்களில் தலையிட மனித உரிமைகளை பயன்படுத்துவது கவலைக்குரியது.
ஐக்கிய நாடுகள் அமைப்பு இன்று அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது. அந்த அமைப்பு தனது அடிப்படை சித்தாந்தங்களை நிறைவேற்றுவதில் இருந்து விலகியுள்ளது.
மனித வர்க்கத்தின் கௌரவத்திற்கு பாத்திரமாக வேண்டிய அமைப்பு காஸாவில் ஏற்பட்டுள்ள துயரமான நிலைமையை மிக விரைவில் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
உடனடியாக போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்தி, இரு தரப்புக்கும் இடையிலான வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வந்து நீடித்த தீர்வை ஏற்படுத்த வேண்டும்.
இதற்கு இலங்கை பூரணமான ஒத்துழைப்பை வழங்கும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRaLcjx4.html
அணிவகுப்பில் நிறுத்தப்பட்டோர் உண்மையான குற்றவாளிகளா? - சம்பந்தன் எம்.பி. - சிறிய சம்பவத்தை கூட்டமைப்பு பெரிதுபடுத்துகிறது!- பிரதமர்
[ சனிக்கிழமை, 26 யூலை 2014, 10:14.33 AM GMT ]
காரை­ந­கரில் இரண்டு சிறு­மிகள் பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­திற்­குட்­பட்ட சம்­பவம் தொடர்பில் இடம்­பெற்ற அடை­யாள அணி­வ­குப்பில் உண்­மை­யான குற்­ற­வா­ளிகள் நிறுத்­தப்­ப­டாது வேறு நபர்­களே நிறுத்­தப்­பட்­டுள்­ளனர் என தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான இரா. சம்­பந்தன் நேற்று சபையில் குற்றம்சாட்­டினார்.
அத்துடன், இன்று வட­ப­குதி முழு­வதும் இரா­ணுவ மய­மாக்­கப்­பட்டு பெண்­க­ளுக்கு பாது­காப்பு இல்­லாத நிலை ஏற்­பட்­டி­ருப்­ப­தா­கவும் விசனம் தெரி­வித்தார்.
பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை காரைநகரில் இரு சிறு­மிகள் கடற்­ப­டை­யி­னரால் பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்­யப்­பட்­டமை தொடர்­பாக கூற்­றொன்றை விடுத்து உரை­யாற்றும் போதே இரா.சம்­பந்தன் எம்.பி. இவ்­வாறு தெரி­வித்தார்.
சபையில் அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்;
வடக்கு, கிழக்கில் வாழும் பெண்­களின் பாது­காப்பு இன்று கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்­ளது. எனவே இச் சபையில் அதனை சுட்­டிக்­காட்டி பேச வேண்­டிய நிலை ஏற்­பட்டது.
கடந்த சில தினங்­க­ளுக்கு முன்பு காரை­ந­கரில் ஊரி என்­னு­மி­டத்தில் 11 வயது சிறு­மி­யொ­ருவர் காரை­நகர் கடற்­படை முகாமைச் சேர்ந்த கடற்­படை வீரர்­களால் பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு உள்­ளாக்­கப்­பட்டார்.
இது தொடர்­பாக பொலி­ஸிலும் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. இதே­போன்று இன்­னு­மொரு 10 வயது சிறு­மியும் பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு உள்­ளா­ன­தா­கவும் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.
இது மிகவும் கொடூ­ர­மான செயல். இத­னோடு தொடர்­பு­டை­ய­வர்­க­ளுக்கு எதி­ராக கடு­மை­யான சட்ட நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட வேண்டும்.
அத்­துடன் இவ்­வா­றான சம்­ப­வங்கள் மேலும் இடம்­பெ­றாத வண்ணம் தடுப்­பதை உறுதி செய்து அதற்­கான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும்.
வட மாகாணம் இன்று இரா­ணுவ மய­மாக்­கப்­பட்­டுள்­ளது. இதனை பல தட­வைகள் இச் சபையில் சுட்­டிக்­காட்­டினோம்.
இவ்­வா­றா­ன­தொரு சூழ்­நி­லை­யி­லேயே இந்த கொடூ­ர­மான சம்­ப­வங்களும் இடம்­பெற்­றுள்­ளன.
இச் சம்­பவம் தொடர்பில் சில கடற்­படை வீரர்கள் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்ட போதும் பின்னர் அவர்கள் அனை­வரும் விடு­விக்­கப்­பட்­டனர்.
இச்­சம்­பவம் தொடர்பில் உண்மைக் குற்­ற­வாளி கைது செய்­யப்­ப­ட­வில்லை. வேறு நபர்­களே அடை­யாள அணி­வ­குப்பில் நிறுத்­தப்­பட்­ட­தா­கவே கூறப்­ப­டு­கின்­றது.
இதனால் முறைப்­பாடு செய்­த­வர்கள் பல பிரச்­சி­னை­க­ளுக்கு முகம் கொடுக்க வேண்­டி­யுள்­ளது.
சிறு­மிகள் துஷ்­பி­ர­யோகம் செய்­யப்­பட்ட சம்­பவம் தொடர்பில் அர­சாங்கம் எடுத்த நட­வ­டிக்கை என்ன?
கைது செய்­யப்­பட்டு அடையாள அணி வகுப்பில் நிறுத்தப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகளா? இது தொடர்பிலான பொலிஸ் விசாரணைகள் திருப்திகரமானதாக இல்லை.
எனவே, இவ்விடயத்தில் நீதி நிலைநாட்டப்பட்டு உண்மைக் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றார்.
சிறிய சம்பவத்தைக் கூட்டமைப்பு பெரிதுபடுத்த முயற்சி செய்கின்றது - பிரதமர் 
இந்தியா உட்பட உலகில் தினமும் எத்தனையோ வல்லுறவுச் சம்பவங்கள் நடைபெறுகின்றன. ஆயினும் காரைநகரில் நடைபெற்ற சம்பவத்தை ஒரு சிறிய சம்பவத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சர்வதேசத்துக்குப் பெரிதுபடுத்திக் காட்ட முயற்சித்து வருகின்றது. இவ்வாறு நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார் பிரதமர் டி.எம்.ஜயரத்ன.
நாடாளுமன்றில் காரைநகர் சம்பவம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் விடுத்த விசேட கூற்றுக்குப் பதிலளித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் அங்கு மேலும் தெரிவித்துள்ளதாவது:
கடந்த 15ம் திகதி காலை 7 மணியளவில் பாடசாலைக்கு நடந்து சென்ற சிறுமியயாருவரை காரைநகரிலுள்ள முருகன் கோயிலுக்கருகில் வைத்து புலிகளின் சீருடை போல் சீருடை அணிந்திருந்த நபரொருவர் அருகிலுள்ள காட்டுக்குள் தூக்கிச் சென்றுள்ளார். 
இதன்போது அங்கு வந்த கடற்படைச் சிப்பாய் இதனைக் கண்டுவிட்டு விசாரிக்க முற்பட்டபோது அந்நபர் சிறுமியை கைவிட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார். அதன்போது தாயார், மகள் நேரகாலத்துடன் பாடசாலை விட்டு வந்தமை தொடர்பில் அதிபரிடம் வினவியுள்ளார். 
தினமும் மகள் இவ்வாறு வருவதாகவும் கூறியுள்ளார். ஆனால், அச்சிறுமி அக்காலப்பகுதியில் பாடசாலைக்கு சமுகமளிக்கவில்லை என பாடசாலை அதிபர் கூறியுள்ளார்.
இவ்வாறான சூழ்நிலையில் அச்சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக யாழ்.வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அச்சிறுமி வல்லுறவுக்குட்படுத்தப்பட்டது தெரியவந்தது. 
இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ். வைத்தியசாலைப் பொலிஸார் ஊர்காவற்றுறைப் பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டு வந்தனர். நீதிமன்றத்துக்கும் தெரிவிக்கப்பட்டது. 
இதன் தொடர்ச்சியாக 9 கடற்படைச்சிப்பாய்கள் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். எனினும், இரண்டு பேர் விடுமுறை எடுத்திருந்ததால் 7 பேரே அடையாள அணிவகுப்பில் உட்படுத்தப்பட்டனர்.
எனினும் இவர்களில் எவரையும் சம்பந்தப்பட்டவர் அடையாளம் காட்டவில்லை. அதன்பின்னர் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர். நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரமே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதேவேளை இதுபோல் பல சம்பவங்கள் இந்தியா உட்பட உலகெங்கும் தினமும் இடம்பெறுகின்றன. ஆனால், காரைநகரில் இடம்பெற்ற ஒரு சிறு சம்பவத்தை பெரிதுபடுத்தி  சர்வதேசத்துக்கு காட்டுவதற்கு கூட்டமைப்பு முயற்சிக்கின்றது என்று தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRaLcjx5.html
போர் குற்றம் தொடர்பான ஐ.நா விசாரணை அறிக்கை 2015 இல்
[ சனிக்கிழமை, 26 யூலை 2014, 10:37.03 AM GMT ]
இலங்கையின் போர் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தும் ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் விசாரணைக்குழுவின் விசாரணை அறிக்கை மற்றும் பரிந்துரைகள் எதிர்வரும் 2015 ஆம் ஆண்டு மார்ச் 26 ஆம் திகதி வெளியிடப்பட உள்ளது.
விசாரணை நடத்தும் விசாரணைக்குழு பற்றிய தகவல்கள் வெளியிடப்படும் என மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் உறுதியளித்த போதிலும் அது தற்போது நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா விசாரணைக்குழுவின் முன் சாட்சியமளிக்கும் சாட்சியாளர்கள் யார் என்பது 2015  ஆம் ஆண்டே இலங்கைக்கு தெரியவரும் என ஜெனிவா தகவல்கள் தெரிவிக்கின்றன.

போர் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தும் குழுவிற்கு பின்லாந்து முன்னாள் ஜனாதிபதி, நியூலாந்து முன்னாள் நீதிபதி, பாகிஸ்தான் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ஆகியோர் ஆலோசகர்களாகவே நியமிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆணையாளர் அறிவித்திருந்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRaLcjx6.html

Geen opmerkingen:

Een reactie posten