தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 29 juli 2014

பாடம் புகட்டும் தமிழர்கள்: அவுஸ்திரேலியாவிடம் நஷ்ட ஈடு கோரவுள்ள ஈழத் தமிழர்கள் !


இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நட்டஈடு கோர உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள், நட்டஈடு கோரத் திட்டமிட்டுள்ளதாக சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
157 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் இவ்வாறு நட்டஈடு கோர உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. படகு மூலம் புகலிடம் கோரிய தங்களை அவுஸ்திரேலிய உரிய முறையில் பராமரிக்கத் தவறியுள்ளதாக புகலிடக் கோரிக்கையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
நீண்ட நாட்கள் கடலில் தடுத்து வைக்கப்பட்டதனால் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியதாக புகலிடக் கோரிக்கையாளர்கள் சட்டத்தரணிகள் ஊடாக தெரிவித்துள்ளனர்.அவுஸ்திரேலிய அதிகாரிகள் தம்மை மிகவும் கடுமையாக நடத்தியதாக குற்றம் சுமத்தியுள்ளனர். புகலிடக் கோரிக்கையாளர்களின் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten