தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 26 juli 2014

காரைநகர் சிறுமி பலாத்காரம்! போலி மருத்துவ அறிக்கைக்கு அழுத்தம்!

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் குறித்த சிறுமிகள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதன் போது 13 வயது சிறுமி பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையும், 9 வயது சிறுமி பாலியல் ரீதியாக இம்சிக்கப்பட்டுள்ளமையும் உறுதியாகி இருக்கிறது.
ஆனால் இதற்கு பதிலாக குறித்த சிறுமிகள் துன்புறுத்தப்படவில்லை என்று மறுத்துவ அறிக்கையை வழங்குமாறு, யாழ்ப்பாண சட்ட வைத்திய அதிகாரிகளுக்கு அழுத்தங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நெருங்கிய அதிகாரிகள் இந்த அழுத்தங்களை வழங்கி வருகின்றனர்.
http://www.jvpnews.com/srilanka/77557.html

சுவிஸ் நாட்டு மூன்று பிள்ளையின் தந்தை! யாழில் திருமணம்! மனைவி கட்டுநாயக்காவில்

இந் நிலையில் சில மாதங்களாக இருவரும் குடும்பத்தகராறு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இதனையடுத்து கடந்த மாதம் யாழ்ப்பாணம் வந்த குறித்த குடும்பஸ்தர் தொலைபேசிக் கடை ஒன்றில் வேலைக்கு நின்ற 19 வயது யுவதி ஒருவரை தனது பேச்சில் மயக்கி காதலிப்பதாகத் தெரிவித்து ஏராளமான பணத்தையும் அந்த யுவதிக்கு செலவு செய்துள்ளார்.
அதன் பின்னர் குறித்த யுவதியின் வீட்டுக்குச் சென்ற நபர் யுவதியின் அனுசரனையுடன் பெற்றோரைச் சம்மதிக்க வைத்து பதிவுத் திருமணம் செய்துள்ளார். இவர் தான் வெளிநாட்டில் திருமணம் முடிவத்தவர் என்றும் தனது மனைவி தன்னை விட்டு இன்னொருவருடன் ஓடிவிட்டதாகவும் தெரிவித்தே யுவதியையும் பெற்றோரையும் ஏமாற்றி பதிவுத் திருமணம் முடித்துள்ளார்.
இவரது இந்தத் திருமணத்தைக் கேள்வியுற்ற மனைவி நேற்று இரவு தனது 3 வயதுக் கடைசிப் பிள்ளையுடன் கட்டுநாயக்காவில் இறங்கியுள்ளதாகவும் தெரியவருகின்றது. சொந்த மனைவி இருக்கத்தக்கதாக விவாகரத்துப் பெறாது பதிவுத் திருமணம் செய்த குடும்பஸ்தர் சில வேளைகளில் கம்பி எண்ணவும் கூடும். பதிவுத் திருமணம் முடித்து ஒன்றாயிருக்கும் யுவதியின் வாழ்க்கையும் இனி கேள்விக்குறியே?
http://www.jvpnews.com/srilanka/77562.html

Geen opmerkingen:

Een reactie posten