தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 31 juli 2014

ஈழத்தமிழர் நலனில் அக்கறை கொண்ட பாஜகவின் மூத்த உறுப்பினர் அழகப்பன் மரணம்: வைகோ இரங்கல்!

இலங்கையின் ஆட்சி மாற்றத்துக்காக அரசசார்பற்ற அமைப்புகளுக்கு கிடைத்துள்ள நிதி! அரச பத்திரிகை தகவல்
[ வியாழக்கிழமை, 31 யூலை 2014, 02:00.56 AM GMT ]
இலங்கையில் ஆட்சி மாற்றத்துக்காக அரச சார்பற்ற அமைப்புக்களுக்கு பல மில்லியன் ரூபாய்கள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கையின் அரசாங்க பத்திரிகையான டெய்லி நியூஸ் தெரிவித்துள்ளது.
இதன்படி மாற்றுக்கொள்கைகளுக்கான நிறுவனத்துக்கு 618.33 மில்லியன் ரூபாய்கள் கிடைத்துள்ளன.
தேசிய சமாதான பேரவைக்கு 277 மில்லியன் ரூபாய்கள் மற்றும் ட்ரான்ப்பேரன்சி இன்டர்நெசனல் 174 மில்லியன் ரூபாய்கள்; கிடைத்துள்ளதாக பத்திரிகை தெரிவித்துள்ளது.
பத்திரிகையின் தகவல்படி, வெளிநாட்டு அரசாங்கங்கள்,  மேற்கத்தைய நாடுகளின் நிறுவனங்களான ஐரோப்பிய ஒன்றியம், ஹெல்வேட்டாஸ் ஸ்ரீலங்கா, பெடரல் ரீப்பல்லிக் ஒப் ஜெர்மனி மற்றும் கனேடியன் சர்வதேச அபிவிருத்தி நிறுவனம், யுஎன்எச்சிஆர் மற்றும் யுஎஸ்எய்ட் என்பவற்றுக்கு நிதிகளை வழங்குகின்றன.
இந்த நிறுவனங்களே வெளிநாடுகளின் அரசாங்கங்களை மாற்றியமைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.
இந்தநிலையில் நிதிகளை பெற்றுள்ள இலங்கையின் அரசசார்பற்ற அமைப்புக்கள் நிதிகளை பங்குசந்தையிலும் ஏனைய துறைகளிலும் முதலீடு செய்வதாக இலங்கையின் அரசாங்க பத்திரிகை தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyHQVLchx3.html
ஜனாதிபதியின் ஆலோசகர்களாக பௌத்த பிக்குகள். மகாநாயக்கர்களை அரசாங்கம் ஓரங்கட்டுகிறது!- ரணில்
[ வியாழக்கிழமை, 31 யூலை 2014, 02:10.40 AM GMT ]
ஜனாதிபதியின் ஆலோசகர்களாக பௌத்த பிக்குகள் நியமிக்கப்பட்டுள்ளமையை எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க விமர்;சித்துள்ளார்
இது பௌத்த சங்க சபையையும் பௌத்த சமூகத்தையும் ஓரங்கட்டும் நடவடிக்கையாகும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஸ்ரீகோத்தாவில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது கருத்துரைத்த அவர், அரசாங்கம் சங்க சபையிடமும் மகாநாயக்கர்களிடமும் ஆலோசனைகளை பெறவேண்டும்.
இதனைவிடுத்து சில பிரிவுகளை கொண்டுள்ள பௌத்த பிக்குகளை ஜனாதிபதியின் ஆலோசகர்களாக நியமித்துள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஆலோசகர்கள் ஏற்கனவே தேர்தல்களில் போட்டியிட்டடவர்களாவர்.  இந்தநிலையில் தேர்தல்களில் போட்டியிட்ட பிக்குகள் எவ்வாறு ஜனாதிபதியின் ஆலோசகர்களாக இருக்க முடியும் என்றும் ரணில் கேள்வி எழுப்பினார்.
எனவே இதன்மூலம் அரசாங்கம் மகாநாயக்கர்கள் மற்றும் சங்க சபைகளின் பாரம்பரியத்தை மீறியுள்ளது.
இதேவேளை கசினோவை தடைசெய்யும் கண்டியில் இரவுநேர கார் பந்தயத்தை நிறுத்தவும் மகாநாயக்கர்கள் கோரியிருந்தனர்.
எனினும் அதனை மீறி செயற்படுவதாகவும் ரணில் விக்கிரமசிங்க குற்றம் சுமத்தினார்.
அரசாங்கம் பௌத்த சாசனத்தையும் ஊடகங்களையும் தமது பிடிக்குள் வைத்துக்கொள்ள முனைகிறது என்றும் ரணில் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyHQVLchx4.html
ஈழத்தமிழர் நலனில் அக்கறை கொண்ட பாஜகவின் மூத்த உறுப்பினர் அழகப்பன் மரணம்: வைகோ இரங்கல்
[ வியாழக்கிழமை, 31 யூலை 2014, 02:28.35 AM GMT ]
பாரதீய ஜனதாக் கட்சியின் மூத்த உறுப்பினரும் இலங்கை தமிழர்களுக்காகவும் தமிழக மீனவர்களுக்காகவும் குரல் கொடுத்தவருமான எம்.வி.எம் அழகப்பன் காலமானார்.
சென்னையில் நேற்று அவர் காலமானதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
81 வயதான அழகப்பன், வடபழனி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே காலமானார்.
இதனையடுத்து அவருடைய உடல் அவரின் விருப்பப்படி ராமசந்திரா மருத்துவக்கல்லூரிக்கு வழங்கப்படவுள்ளது.
அழகப்பன், இலங்கை தமிழர்களின் பிரச்சினை தொடர்பில் முக்கிய கருத்து பகிர்வாளராக செயற்பட்டார்.
அத்துடன் கச்சதீவு மீண்டும் இந்தியாவுக்கு கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்தி வந்தார்.
வாஜ்பாய் பிரதமராக இருக்கும் போது பாரதீய ஜனதாக்கட்சியில் இணைந்த அவர், நரேந்திர மோடி பிரதமராக வரவேண்டும் என்பதில் கரிசனை கொண்டிருந்தார்.
ஈழத்தமிழர்களின் துயர் துடைக்கும் குரலாக வாழ்ந்த பேராசிரியர் அழகப்பன் மறைவு! தாங்க முடியாத இழப்பு- வைகோ இரங்கல்
பாரதீய ஜனதா கட்சியின் அறிவுச் சிந்தனையாளர்கள் குழுமத்தின் ஆலோசகராகத் திகழ்ந்த பேராசிரியர் முனைவர் அழகப்பன் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி கேட்டுத் தாங்க முடியாத அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் ஆளானேன்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறைத் தலைவராக, வணிக நிர்வாகத்துறையில் பேராசிரியராகப் பணி ஆற்றிய பேராசிரியர் அழகப்பன் அவர்கள், ஈழத்தமிழர்கள் தேசிய இனப்பிரச்சினை குறித்து ஆழ்ந்த ஞானமும், புரிதலும் கொண்டு இருந்தார். அப்பிரச்சினை குறித்து மிகச்சிறந்த ஆங்கில நூல்களை எழுதி இருக்கிறார்.
சுதந்திரத் தமிழ் ஈழம்தான் ஒரே தீர்வு என்பதையும், தமிழ் இனப் படுகொலைக்குக் காரணமான சிங்கள அரசைக் கூண்டில் நிறுத்தித் தண்டிக்க வேண்டும் என்பதையும், பாரதீய ஜனதா கட்சியின் மாநில, அகில இந்தியக் கூட்டங்களில் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
2010 ஆம் ஆண்டு, தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று, டெல்லியில் தீர்ப்பு ஆயத்தில் வாதாடினார். இல.கணேசன் உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சி முன்னணித் தலைவர்கள் அவரைப் பற்றிக் கூறும்போது, 24 மணி நேரமும் ஈழத்தமிழர்களைப் பற்றிச் சிந்தித்தவர். அதற்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் என்றார்கள்.
பல ஆண்டுகளாக அவரிடம் நெருங்கிப் பழகி இருக்கின்றேன். ஒவ்வொரு முறையும் பல மணி நேரம் என்னிடம் விவாதிப்பார். அண்மையில் யஷ்வந்த் சின்கா அவர்கள் என் இல்லத்திற்கு வந்தபோது, பேராசிரியர் அழகப்பன் அவர்களும் அங்கு வந்து, நீண்ட நேரம் இப்பிரச்சினை பற்றிப் பேசினார்.
ஈழத்தமிழர்களுக்காக பாரதீய ஜனதா கட்சியில் எந்தத் தயக்கமும் இன்றித் துணிச்சலாகக் குரல் கொடுத்து வந்த ஒரு அறிவாளியை, சிந்தனையாளரை இழந்து தவிக்கின்றோம். அந்த இடத்தை வேறு எவராலும் நிரப்ப முடியாது. தான் உயிர் நீத்தபின்பு, தன்னுடைய உடலை இராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆய்வுக்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று எழுதி வைத்து இருக்கின்றார்.
அவரது அருமைப் புதல்வி விம்மலும் கண்ணீருமாக என்னிடம் பேசும்போது, “ஏழைகளுக்காகவும், துன்பப்படும் மனிதர்களுக்காகவும் எப்பொழுதுமே கவலை கொண்டு உதவுகின்ற மனிதாபிமானி என் தந்தை” என்றார்.
அத்தகைய உத்தமர் அழகப்பன் மறைவுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இவ்வாறு மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyHQVLchx5.html

Geen opmerkingen:

Een reactie posten