தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 30 juli 2014

அமெ­ரிக்கா எத்­த­கைய அறிக்­கை­யினை விடுத்­தாலும் எமது பணி தொடரும்!- ஞான­சார தேரர் திட்­ட­வட்டம்

மகிந்த அரசுக்கு கண்ணை மூடிக்கொண்டு ஆதரவளிக்கிறது இந்தியா: தா.பாண்டியன் குற்றச்சாட்டு
[ புதன்கிழமை, 30 யூலை 2014, 07:13.18 AM GMT ]
இந்திய மத்திய அரசு மகிந்த ராஜபக்ச அரசுக்கு ஆதரவாக கண்ணை மூடிக்கொண்டு செயல்படுவதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார்.
கோவை மாவட்ட குழு கூட்டத்தில் பத்திரிகையாளர்களிடம் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கச்சதீவு, இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களுக்கு சொந்தமானது. மன்னராட்சி ஒழிக்கப்பட்ட பின்னர் அவை அனைத்தும் அரசுக்கு சொந்தமாகி விடும். ஆனால் கச்சதீவு எப்போதும் இந்தியாவுக்கு சொந்தமானது அல்ல என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றம் மனு தாக்கல் செய்துள்ளது.
இலங்கை போர் குறித்து விசாரணை நடத்துவதற்காக இந்தியா வரும் ஐ.நா. குழுவுக்கு விசா அளிக்க மத்திய அரசு மறுத்துள்ளது.
இலங்கை இராணுவத்தினருக்கு கடந்த மாதம் வரை குன்னூரில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் இராணுவ கருத்தரங்குக்கு இந்திய அதிகாரிகள் கலந்து கொள்ள செல்வது என இலங்கையின் ராஜபக்ச அரசுக்கு ஆதரவாகவே மத்திய பாரதீய ஜனதா அரசு கண்ணை மூடிக்கொண்டு செயல்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது என தா.பாண்டியன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHQULchu0.html
அமெ­ரிக்கா எத்­த­கைய அறிக்­கை­யினை விடுத்­தாலும் எமது பணி தொடரும்!- ஞான­சார தேரர் திட்­ட­வட்டம்
[ புதன்கிழமை, 30 யூலை 2014, 07:18.37 AM GMT ]
எவர் தடுத்தாலும் அமெரிக்கா எந்த அறிக்கைகளை வெளியிட்டாலும் பௌத்தத்தையும் நாட்டையும் பாதுகாக்கும் எமது வேலைத்திட்டம் தொடரும் என்றும் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
அமெ­ரிக்­காவின் அர­சியல் தேவை­களை இலங்­கைக்குள் நிறை­வேற்­று­வ­தற்கு பொது­ப­ல­சேனா தடை­யாக இருப்­பதன் கார­ண­மா­கவே அமெ­ரிக்க இராஜாங்­கத்­ தி­ணைக்­களம் பொது­ப­ல­ சே­னா­வுக்கு எதி­ரான அறிக்­கை­களை தொடர்ச்­சி­யாக வெளி­யி­டு­கின்­ற­தென குற்றம்சாட்டும் அதன் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான­சா­ர­தேரர், இலங்­கையில் முஸ்லிம் பயங்­க­ர­வாதம் செயற்­ப­டு­வ­தாக இந்­திய உளவுப் பிரிவினர் முன்­வைத்த குற்­றச்­சாட்டு தொடர்பில் அமெ­ரிக்­காவின் நிலைப்­பாடு என்­ன­வென்றும் கேள்வி எழுப்­பினார்.
இலங்­கையில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­களில் பொது­ப­ல­சேனா அமைப்பு உள்­ள­தாக அமெ­ரிக்கா ராஜாங்க திணைக்­களம் வெளி­யிட்­டுள்ள அறிக்கை தொடர்­பாக தெளி­வு­ப­டுத்­திய போதே கல­கொட அத்தே ஞான­சா­ர­தேரர் இதனை தெரி­வித்தார்.
தேரர் இது தொடர்­பாக மேலும் தெளி­வு­ப­டுத்­து­கையில்,
இலங்­கையில் அமெ­ரிக்­காவின் கைபொம்­மை­யாக ஆட்­டு­விக்­கக்­கூ­டிய அர­சியல் பொம்­மை­களை உரு­வாக்க அனைத்து முயற்­சி­களும் மேற்­கொள்­ளப்­பட்­டன.
இங்கு மதங்­க­ளி­டையே நல்­லி­ணக்கம் இல்­லை­யென்றும் இனங்­க­ளி­டையே ஒற்­றுமை இல்­லை­யென்றும் குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்­டன.
அதற்­காக நாட்­டுக்­குள்­ளேயே கைக்­கூ­லிகள் அமர்த்­தப்­பட்­டனர். மனித உரி­மைகள் பாது­காக்­கப்­ப­டு­வ­தில்­லை­யென்றும் ஜன­நா­யகம் வாக்­கு­ரிமை பாது­காக்­கப்­ப­டு­வ­தில்­லை­யென்றும் குற்­றச்­சாட்­டுக்கள் முன் வைக்­கப்­பட்­ட­தோடு அவற்றை நிவர்த்தி செய்­வ­தற்­கென கூறிக்­கொண்டு அரச சார்­பற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு பணத்தை அமெ­ரிக்­காவின் பல்­வேறு நிறு­வ­னங்கள் ஊடாக வழங்கி குழப்­பங்­களை நாட்­டுக்குள் ஏற்­ப­டுத்த முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டன.
ஆனால், பொது­ப­ல­சேனா விழிப்­பாக இருந்து இவ்­வா­றான திட்­டங்­களை தடுத்து நிறுத்­தி­யது. இந்த கோபா­வே­சமே எமக்­கெ­தி­ராக குற்­றச்­சாட்­டுக்­களை முன் வைப்­ப­தற்கு கார­ண­மாக அமைந்­துள்­ளது. அதை­வி­டுத்து எமக்­கெ­தி­ராக நியா­ய­மான முறையில் எந்­த­வொரு குற்­றச்­சாட்டும் முன்­வைக்­கப்­ப­ட­வில்லை.
இலங்­கையில் அடிப்­ப­டை­வாத கிறிஸ்­தவ அமைப்­புக்­க­ளுக்கு பணம் கொடுத்து மத­மாற்­றங்­களை அமெ­ரிக்­காவே முன்­னெ­டுக்­கின்­றது.
அத்­தோடு இலங்­கையில் முஸ்லிம் பயங்­க­ர­வா­தமும் அடிப்­ப­டை­வா­தமும் செயற்­ப­டு­வ­தாக இந்­திய உள­வுப்­பி­ரி­வினர் தக­வல்­களை வெளி­யிட்­டனர்.
இது தொடர்பில் அமெ­ரிக்­காவின் கவனம் எங்கே போனது? எந்த அறிக்­கையை வெளியிட்டார்கள்? எதனையும் செய்யவில்லை. அரசாங்கத்திற்குள்ளிருக்கும் முஸ்லிம் அடிப்படைவாத சக்திகளும் அமெரிக்காவுக்கு துணை போகின்றன.
எவர் தடுத்தாலும் அமெரிக்கா எந்த அறிக்கைகளை வெளியிட்டாலும் பௌத்தத்தையும் நாட்டையும் பாதுகாக்கும் எமது வேலைத்திட்டம் தொடரும் என்றும் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyHQULchu1.html

Geen opmerkingen:

Een reactie posten