பட்டம் விட்டார் மகிந்த – யாழ்ப்பாணத்தில் பட்டம் விடும் நிகழ்வு!
தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சின் ஏற்பாட்டில் நாட்டின் ஏழு கரையோர மாவட்டங்களில் நேற்று பிற்பகல் நான்கு மணி முதல் பட்டம் விடும் விழா நடைபெற்று வருகின்றது.
யாழ்ப்பாணத்தில் பட்டம் விடும் நிகழ்வு!
சமூக ஒருமைப்பாட்டு வாரத்தினை முன்னிட்டு பட்டம் விடும் விழா யாழ்ப்பாணத்தில் இன்று (19) மாலை 4 மணியளவில் பருத்தித்துறை தும்பளை கிழக்கு கடற்கரையில் நடைபெறவுள்ளது.
மேற்படி நிகழ்வினை தேசிய மொழிகள் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சு, ஐக்கிய நாடுகளின் தன்னார்வ நிகழ்ச்சித்திட்டம் இலங்கை பட்ட அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தின் அனுசரணையுடன் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் தமிழ் சிங்கள கலாசார நிகழ்ச்சிகள் இசை நிகழ்ச்சிகள் மூவின பாரம்பரிய உணவுப்பரிமாற்ற நிகழ்வு ஆகியன இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/76803.html
உங்கள் பிள்ளைகள் மீது கவனம் செலுத்துங்கள்!
மிருகங்கள் கூட இத்தகைய கொடுமைகளைச் செய்யமாட்டா என்று கூறும் அளவிற்கு மனித மனங்கள் கொடூரம் மிக்கவையாக மாறிவிட்டன.
ஆறாம் ஆண்டு படிக்கக் கூடிய ஒரு சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துவ தென்பது கொடுமையானது.
துஷ்பிரயோகம் நடந்துமுடிந்து விட்டது என்பதற்கு அப்பால், அந்தச் சிறுமியின் எதிர்கால வாழ்வு எவ்வாறாக அமையப்போகிறது என்பதை ஒரு கணம் சிந்தித்தால், ஏதும் அறியாத ஒரு பாலகியின் வாழ்வு பாழாக்கப்பட்டு விட்டது என்பதை உணர முடியும்.
இத்தகைய கொடுமைகளை கட்டுப்படுத்துவதில்-முற்றாக ஒழிப்பதில் பெற்றோர்களின் பங்கும் பொறுப்பும் முக்கியமானவை.
நாளாந்த சீவனோபாயத்திற்காக கூலி வேலைக்குச் செல்லுதல், கடினமான உழைப்பின் கஷ்டங்கள் என்பன குடும்ப நிர்வாகத்தில் தளர்வை ஏற்படுத்தி விடுகின்றன.
பிள்ளையின் படிப்பு விவகாரம், அவர்கள் ஒழுங்காக பள்ளிக்குச் செல்கிறார்களா? என் பவற்றை அறிதல், தனது பிள்ளையின் பாடசாலை ஆசிரியருடன் கலந்துரையாடுதல் என்ற எந்த விடயத்திற்கும் இடம்கொடாமல், காலை எழுந்தவுடன் வேலை. மாலையானதும் வீடு திரும்புதல் என்ற வரையறைக்குள் உழைப்பின் அர்த்தமே புரியாமல் போய் விடுகின்றது.
இவ்வாறான சூழமைவில் அயல், உறவு, சமூகம் என்பவற்றின் பாதுகாப்பும் கண்காணிப்பும் தேவைப்படுகின்றது.
இருந்தும் இன்றைய எங்களின் வாழ்வியல் முறைமை சுயநலம் என்பதற்குள் ஆட்பட்டுப்போக, சமூகப் பாதுகாப்பு என்ற விடயம் அறவே இல்லாமல் போயிற்று.
முன்பெல்லாம் நம்மிடையே இருந்த கூட்டு வாழ்க்கைமுறை வழக்கொழிந்து; சொந்த ஊரில் உறவில்லை அல்லது சொந்த ஊரில் நாமில்லை என்ற நிலைமையை யுத்த சூழல் தந்துபோக, எல்லாமுமே வில்லங்கமாயிற்று.
இவற்றின் காரணமாக சிறுவர்கள், பெண்கள் ஆகியோரின் பாதுகாப்பு அச்சத்துக்குரியது என்பதை ஏற்றுத்தானாக வேண்டும்.
எதுவாயினும் பிள்ளைகளின் பாதுகாப்பு அவர்களின் நடத்தைகள் தொடர்பில் மிகவும் கவனம் செலுத்தவேண்டியவர்கள் பெற்றோர் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. தன் குடும்பத்தின் நிர்வாகக் கட்டமைப்பை கவனிக்காமல் விடும்போது அதனால் ஏற்படுகின்ற விளைவுகள் பாரதூரமானவையாக இருக்கும்.
இவை எந்த வகையிலும் நிவாரணமும் பரிகாரமும் தேடமுடியாத இழப்புகள், வாழ்தலின் அர்த்தத்தையே தவிடுபொடி ஆக்கிவிடக் கூடியவை.
ஆகையால் ஒவ்வொரு பெற்றோரும் தமது பிள்ளைகள் தொடர்பில் மிகவும் விழிப்பாக இருப்பது அவசியம்.
எவ்வளவுதான் வேலைப்பளு இருப்பினும் தமது குடும்பத்தை மேற்பார்வை செய்வது என்பது உழைப்பை விட முதன்மையானது என்ற உண்மையை உணர்ந்து செயற்படுவது அவசியமும் அவசரமுமானதாகும்.
http://www.jvpnews.com/srilanka/76807.html
காரைநகர் சிறுமிகளை பலாத்காரம் செய்த கடற்படையினர் தப்பிவிட்டனர்….
இதன்போது வல்லுறவுக்குபட்படுத்தப்பட்ட சிறுமி அவர்களை அடையாளம் காண்பதற்காக அழைத்துவரப்பட்டார். ஆனால் அடையாள அணிவகுப்பில் நிறுத்தப்பட்ட எவரையும் அவர் அடையாளம் காட்டவில்லை. ஊரிக் கிராமத்தைச் சேர்ந்த 11 வயது மற்றும் 9 வயதுடைய சிறுமிகள் இருவரை வல்லுறவுக்குட்படுத்தியிருந்தனர் என இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் காரைநகர் ஊரிக் கிராமம் கடற்படை முகாமைச் சேர்ந்த அனைத்துக் கடற்படையினரும் இன்று அடையாள அணிவகுப்பில் நிறுத்தப்பட்டனர் என்று கூறப்பட்டது. சம்பந்தப்பட்ட சிறுமி எவரையும் அடையாளம் காட்டாததால் வழக்கை எதிர்வரும் 21ஆம் திகதிக்கு சிறுவர் நீதிவான் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
Geen opmerkingen:
Een reactie posten