யாழில் காதலுக்காய் அடிபடும் பெண்கள்….
காதல் விவகாரம் சம்பந்தமாக இரு பெண்கள் அணியினரிடையேஇடம் பெற்ற சண்டை காரணமாக ஐந்து பெண்கள் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
காயப்பட்ட பெண்களில் ஒரு சாரர் சட்டைகள் கிழிந்த நிலையில் காயத்துடன் சுன்னாகம் பொலிஸ் நிலையம் வந்து முறையிட காத்திருந்த போதிலும் ஒரு மணித்தியாலத்திற்கு மேல் உடனடியாக முறைப்பாடு எடுக்காத நிலையில் மயங்கி வீழ்ந்த நிலையில் அவர் பொலிஸ் நிலையத்தில் இருந்து வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இதில் மகாலிங்கம் செல்வராணி வயது 57 பொலிஸ் நிலையத்தில் மயங்கி வீழ்ந்தவர் மற்றும் மகாலிங்கம் பகிந்தா வயது 30, சகோதரியான சசிதரன் ஆனந்தி வயது 41, மற்றும் குமரேசன் ஜெனித்தா வயது 30, சின்னராசா ஞானேஸ்வரி வயது 60, ஆகியவர்களே வைத்தியசாலையில் மண்டை உடைந்த நிலையிலும் மற்றும் அடி காயங்களுடனும் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களாவர்
http://www.jvpnews.com/srilanka/76883.html
ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இலங்கைக்கு பாரிய ஆபத்து! முன் எச்சரிக்கை….
இலங்கையில் வடக்கு தவிர்ந்த ஏனைய அனைத்து பிரதேசங்களுக்கும் காற்றுவீசக்கூடும் என்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் எதிர்வரும் நாட்களில் மத்திய மாகாணத்தில் மணித்தியாலத்திற்கு 70-80 கிலோமீற்றர் வேகத்தில் காற்றுவீசும் என்று எதிர்வுகூறப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
http://www.jvpnews.com/srilanka/76877.html
Geen opmerkingen:
Een reactie posten