தெஹிவளையில் 31 அனகொண்டா மலைப் பாம்புக் குட்டிகள்- கட்டிட கால நீடிப்புக்காக அமைச்சர்கள் சார்பில் பணம் கொள்ளை
[ வியாழக்கிழமை, 18 யூலை 2013, 02:49.44 AM GMT ]
தெஹிவளை மிருகக் காட்சி சாலையில், நேற்று இரவு 31 புதிய அனகொண்டா மலைபாம்பு குட்டிகள் பிறந்துள்ளன.
இவை சிறந்த உடல்நிலையில் இருப்பதாக மிருகக் காட்சிசாலையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இங்கு மேலும் இரண்டு தடவைகள் அனகொண்டா பாம்புகள் பிறந்திருந்தன.
அவை பெரும்பாலும் வெளிநாடுகளுக்கு அன்பளிப்பு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்துக்கது.
கட்டிட கால நீடிப்புக்காக அமைச்சர்கள் சார்பில் பணம் கொள்ளை
கொழும்பு கோட்டையில் நிர்மாணிக்கப்படவுள்ள பாரிய கட்டிடம் ஒன்றுக்கான ஒப்பந்த தொகையை வழங்குவதற்காக காலநீடிப்பினை செய்வதற்கு, அரசாங்கத்தின் முக்கிய உறுப்பினர்கள் இருவரின் சார்பாக 4 மில்லியன் டொலர்களை பெற்றுக் கொண்டதாக கூறப்படும் ஒருவர், தமக்கு உயிராபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இது தொடர்பில் உயர் நிலை விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
கிறிஸ்டவர் நிறுவனத்துக்காக இந்த கால அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் இவ்வாறான அனுமதி ஒன்று உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படவில்லை என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தற்போது உயிராபத்து ஏற்பட்டுள்ளதாக முறையிட்டுள்ள குறித்த அதிகாரியின் கூற்றின் மூலம், இந்த ஒப்பந்த தொகையை செலுத்துவதற்கான காலம் நீடிக்க பணம் பெறப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.
எனவே அது தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் ரவி கருணாநாயக்க கேட்டுள்ளார்.
காணி, பொலிஸ் அதிகாரங்கள் மாகாண சபைக்கு பிரதானம்! - விக்னேஸ்வரன் லங்காசிறி FMக்கு விசேட செவ்வி
[ புதன்கிழமை, 17 யூலை 2013, 08:59.35 PM GMT ]
Geen opmerkingen:
Een reactie posten