[ வியாழக்கிழமை, 18 யூலை 2013, 05:11.28 AM GMT ]
வேடர்களின் தலைவர் ஊருவரிகே வன்னிலத்தோவுக்கு முக்கிய பிரமுகர் (வி.ஐ.பி.) அந்தஸ்தை அளித்துள்ள அரசாங்கம், அவருக்கான உத்தியோகபூர்வ வாகனம் ஒன்றையும் அளித்துள்ளது.
குறித்த வாகனம் தற்போது மஹியங்கனை பிரதேச செயலக அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன், வேடர்களின் தலைவர் பயணங்களை மேற்கொள்ளும்போது இதனைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதற்காக அவருக்கு நாளொன்றுக்கு 200 லீட்டர் வரையான பெட்ரோல் ஒதுக்கப்படுகிறது.
மேலும் வாகனத்தை செலுத்துவதற்கு ஒரு சாரதியும் எந்த நேரமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதன்மூலம் வேடர்களின் தலைவர் வன்னிலத்தோ, இனிவரும் காலங்களில் நாட்டின் முக்கிய பிரமுகர்களில் ஒருவராக மாற்றம் பெற்றுள்ளார்.
அரச அலுவலகங்களிலும் அவருக்கான மரியாதை கிடைக்கும் எனறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருபுறத்தில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு! மறுபுறத்தில் ஆயுத விற்பனை: பிரித்தானிய அரசின் இரட்டை வேடம்
[ வியாழக்கிழமை, 18 யூலை 2013, 01:31.31 AM GMT ]
இலங்கை மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துக் கொண்டே பிரித்தானிய அரசாங்கம், இலங்கைக்கு பெருந்தொகை ஆயுதங்களை விற்பனை செய்திருப்பது மனித உரிமை ஆர்வலர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பிரித்தானிய அரசாங்கத்தினால் இலங்கைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ள ஆயுதங்களின் பெறுமதி சுமார் 8 மில்லியன் பவுண்கள் என்று தெரியவந்துள்ளது. இவற்றில் இராணுவ மற்றும் புலனாய்வு கருவிகளுக்காக 49 ஏற்றுமதி அனுமதி பத்திரங்களை வழங்கியுள்ளதாகவும் தெரிகிறது.
இலங்கைக்கு மட்டுமன்றி மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதாக பிரித்தானியாவினால் குற்றம் சாட்டப்பட்ட இன்னும் பல நாடுகளுக்கும் இவ்வாறான ஆயுத விற்பனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
13.2 பில்லியன் பவுண் பெறுமதியான இராணுவ மற்றும் புலனாய்வு கருவிகளுக்கான 3000 ஏற்றுமதி அனுமதி பத்திரங்களை அந்த நாடுகளுக்கு பிரித்தானியா வழங்கியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உள்நாட்டில் அடக்கு முறைக்கு பயன்படுத்தக்கூடிய அல்லது பிராந்தியத்தில் மற்றும் உள்நாட்டு மோதல்களை தூண்டக்கூடிய பொருட்களுக்கு ஏற்றுமதி அனுமதிப்பத்திரம் வழங்கப்போவதில்லை என கூறியிருந்த பிரித்தானிய அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடு பல தரப்பினரையும் ஆச்சரியப்படவைத்துள்ளது.
அதிலும் குறிப்பாக கடுமையான மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதாக பிரித்தானியாவினால் குற்றம் சாட்டப்பட்ட இலங்கைக்கு ஆயுத விற்பனை நடைபெற்றிருப்பது மனித உரிமை ஆர்வலர்களை கடுமையான அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இது பிரத்தானிய அரசாங்கத்தின் மனித உரிமை தொடர்பான இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துவதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்
Geen opmerkingen:
Een reactie posten