தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 27 juli 2013

இலங்கை- பிரித்தானியாவுக்கு இடையே ராஜதந்திரப் பிளவு ஏற்படுமா ?

“இலங்கை தமிழரை நாம் கவனித்து கொள்வோம்" சிங் பதில் கடிதம் !
26 July, 2013 by admin
இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்க வேண்டும் என்பதி்ல் இந்தியா உறுதியாக இருப்பதாக பிரதமர் மன்மோகன், முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். இலங்கையில், முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி ஏற்பாட்டில் கொண்டுவரப்பட்ட 13-வது அரசியல் சட்டம் தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் ஒன்று எழுதியிருந்தார். வழமையாக கிணற்றில் போடப்பட்ட கல் போலவே தமிழகத்தில் இருந்து அனுப்பப்படும் கடிதங்களின் கதி இருக்கும்.

ஆனால், இந்தக் கடிதத்துக்கு பிரதமரிடம் இருந்து பதில் வந்துள்ளது.

நேற்று (வியாழக்கிழமை) பிரதமர் மன்மோகன் சிங் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்க வேண்டும் என்பதி்ல் இந்தியா உறுதியாக இருக்கிறது. இலங்கைத் தமிழர்கள் சுய கௌரவத்துடன் வாழ வேண்டும் என்பதை நீண்ட காலமாக இந்தியா வலியுறுத்தி வருகிறது. அதற்காக இறுதி வரை பணியை தொடருவோம். ஒன்றுபட்ட இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை, அதிகாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை- பிரித்தானியாவுக்கு இடையே ராஜதந்திரப் பிளவு ஏற்படுமா ?
27 July, 2013 by admin
தற்சமயம் இலங்கை சென்றிருக்கும் , பிரித்தானிய எம்.பி சயமன் டங்கஸ் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். இதனால் இலங்கை அரசு ஆத்திரமடைந்துள்ளதாகவும், இரு நாடுகளுக்கும் இடையே உள்ள ராஜதந்திர உறவு பாதிக்கும் அளவு நிலமை மோசமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் தங்காலையில் வைத்து கொல்லப்பட்ட பிரித்தானியப் பிரஜை தொடர்பாக இலங்கை அரசு சரியான நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளவில்லை என தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார் சயமன் டங்கஸ். அவர் கடந்த ஆண்டு இதுதொடர்பாக இலங்கை சென்றவேளை அவரை அவமதித்து அனுப்பியது இலங்கை. ஆனால் இம் முறை அவர் ஆபிஷலாக (உத்தியோகபூர்வமாக) இலங்கைக்குச் சென்றுள்ளார். இவர் ஒரு குழுவுடன் சென்றுள்ளார். இக் குழுவே காமன் வெலத் மாநாடு தொடர்பாக இலங்கைக்கு அறிவுரை கூறும் குழு ஆகும். 

இதனைப் பயன்படுத்தி சயமன் டங்கஸ், தான் சொல்லவேண்டிய அனைத்தையும் சொல்லிவிட்டார். ஏற்கனவே அவரைச் சந்திக்க மகிந்தர் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், இலங்கையில் தங்கியிருந்து பல வெளிநாட்டு மீடியாக்களுக்கு அவர் நேர்காணல்களை வழங்கிவருகிறார். அதில் இலங்கை அரசை அவர் சாடிவருகிறார். இதனால் இலங்கை கடும் ஆத்திரமடைந்துள்ளது. இவர் கருத்துக்கள் தொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சு, பிரித்தானிய வெளிவிவகார அமைச்சை தொடர்புகொண்டுள்ளதாம். ஆனால் பிரித்தானியாவைப் பொறுத்தவரை அங்குள்ள எம்.பீக்களின் கருத்தை, அல்லது அவர்களின் சுதந்திரத்தில் அன் நாட்டின் வெளிவிககார அமைச்சு தலையிடுவது கிடையாது என்பதுன் யாவரும் அறிந்ததே.

Geen opmerkingen:

Een reactie posten