தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 30 juli 2013

போரினால் பாதிக்கப்பட்ட பெண்களில் நானும் ஒருத்தி! வலிகள் எனக்குத் தெரியும்!- ஆனந்தி எழிலன்

அமைச்சா்களின் மகன்கள் மீதான தாக்குதல்கள் நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதை பறைசாற்றுகிறது!
[ செவ்வாய்க்கிழமை, 30 யூலை 2013, 09:10.43 AM GMT ]
அமைச்சர்களான மேர்வின் சில்வா மற்றும் ஜனக பண்டார தென்னக்கோன் ஆகியோரின் மகன்மார் தாக்கப்பட்டுள்ளனர்.  இது நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதை பறைசாற்றுகின்றது என ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
நாட்டில் காட்டுச் சட்டமே அமுல்படுத்தப்படுகின்றது என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் நாட்டின் முக்கிய நகரமொன்றில் வைத்து தாக்கப்பட்டுள்ளார் என்றால் சாதாரண மக்களின் நிலைமையை யோசித்துப் பாருங்கள்.
அதேவேளை, நாடு உக்கிர பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றது.
இலங்கை மற்றும் மக்கள் வங்கி ஆகியன பாரிய நிதி நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றது.
அரசாங்கம் சீனாவிடம் கடன் பெற்று, உகண்டாவிற்கு நன்கொடை வழங்கி வருகின்றனது.
நாட்டின் ஒவ்வொருவரும் தலா மூன்று லட்ச ரூபா கடன் செலுத்த வேண்டியுள்ளது என திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
போரினால் பாதிக்கப்பட்ட பெண்களில் நானும் ஒருத்தி! வலிகள் எனக்குத் தெரியும்!- ஆனந்தி எழிலன்
[ செவ்வாய்க்கிழமை, 30 யூலை 2013, 08:48.34 AM GMT ]
நடந்து முடிந்த போரில் பெரு­ம­ளவு பெண்­களும் சிறு­வர்­க­ளுமே பாதிக்­கப்­பட்­டுள்­ள­வர்கள். யுத்தம் முடிந்து நான்கு வரு­டங்­க­ளா­கின்­றன. ஆனால், பாதிக்­கப்­பட்­டுள்ள இவர்­க­ளது பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்கு அமைப்பு ரீதி­யா­கவோ, அர­சியல் ரீதி­யா­கவோ சரி­யான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வில்லை.
எனவே, அவர்கள் சார்­பாக மாகாண மட்­டத்தில் குரல் கொடுப்­ப­தற்­கா­கவும், அவர்­க­ளது பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்­கா­க­வுமே நான் இந்த மாகாண சபைத் தேர்­தலில் போட்­டி­யி­டு­கின்றேன் என்று யாழ். மாவட்­டத்தில் போட்­டி­யி­டு­கின்ற ஒரே­யொரு பெண் வேட்­பா­ள­ரா­கிய ஆனந்தி சசி­கரன் தெரி­வித்தார்.
விடு­த­லைப்­பு­லி­களின் முன்னாள் திரு­கோ­ண­மலை அர­சி­யல்­துறை பொறுப்­பாளர் எழி­லனின் மனை­வி­யா­கிய ஆனந்தி சசி­கரன் கிளி­நொச்சி கச்­சே­ரியில் பணி­யாற்றி வந்­தவர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.
இந்தத் தேர்தல் குறித்து அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:
போரில் கண­வனை இழந்த பெண்கள், இறு­திப்­போரில் சர­ண­டைந்த ஆண்­களைக் கொண்ட குடும்­பங்­களைச் சேர்ந்த பெண்கள் மற்றும் அந்தக் குடும்­பங்­களைச் சேர்ந்த பிள்­ளைகள் போர் முடிந்த பின்பும் மிகு­ந்த கஷ்­டங்­களை எதிர்­நோக்­கி­யி­ருக்­கின்­றார்கள்.
அவர்­க­ளது பாது­காப்பு, குடும்பப் பொரு­ளா­தாரம், வாழ்­வா­தாரம் என பல­த­ரப்­பட்ட வழி­களில் பல்­வேறு சிர­மங்­க­ளையும் கஷ்­டங்­க­ளையும் அவர்கள் எதிர்­நோக்­கி­யி­ருக்­கின்­றார்கள்.
ஆயினும் இவர்­க­ளது பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்கு இதுநாள் வரை­யிலும் உருப்­ப­டி­யான நட­வ­டிக்­கைகள் எதுவும் எடுக்­கப்­ப­ட­வில்லை.
போரினால் பாதிக்­கப்­பட்ட பெண்­களில் நானும் ஒருத்தி என்ற வகையில் அவர்கள் அனு­ப­விக்­கின்ற வேத­னைகள் வலிகள் துன்ப துய­ரங்கள், நெருக்­க­டிகள் என்­ப­வற்றை நான் நன்கு உணர்வேன்.
இந்தப் பெண்­க­ளு­டைய பிரச்­சி­னை­க­ளுக்கு மாகாண மட்­டத்தில் தீர்வு காண்­ப­தற்கு முயற்­சிப்பேன்.. அது முடி­யா­விட்டால், அதனை தேசிய மட்­டத்தில் தீர்வு காண்­ப­தற்கு மாகாண சபையின் ஊடாக முயற்சிகளை மேற்­கொள்வேன்.
அதேநேரம் இந்தப் பிரச்­சி­னையை சர்­வ­தேச மயப்­ப­டுத்தி அதற்குத் தீர்வு காண்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­க­ளையும் நான் மேற்­கொள்வேன்.
என்னைப் போன்­ற­வர்­க­ளுக்கு அர­சியல் புதி­துதான். இல்­லை­யென்று சொல்­வ­தற்­கில்லை. ஆனால் பெண்கள் எதிர்­நோக்­கு­கின்ற பிரச்­சி­னை­க­ளுக்குப் பெண்­களே தீர்வு காண வேண்­டி­யி­ருக்­கின்­றது.
வேறு யாரா­வது எங்­க­ளு­டைய பிரச்­சி­னைக்குத் தீர்வு காண்­பார்கள். அதற்­காக அவர்கள் பாடு­ப­டு­வார்கள் என்று எதிர்­பார்க்க முடி­யாது. எங்­க­ளு­டைய பிரச்­சி­னை­களை நாங்­களே கையாள வேண்டும்.
அந்தப் பிரச்­சி­னை­க­ளுக்கு நாங்­களே முகம் கொடுக்க வேண்டும். என­வேதான் நான் இந்தத் தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்கு முன்­வந்­துள்ளேன் என்றார் ஆனந்தி சசி­கரன்.
இறுதி யுத்­தத்தின் பின்னர் வட்­டு­வாகல் பகுதியில் இராணுவத்தினரிடம் சரணடைந்த இவரது கணவன் எழிலன் என்ற சசிகரன், அதற்குப் பின்னர், அவர் எங்கு இருக்கின்றார், எப்படி இருக்கின்றார் என்ற தகவல் இதுவரையில் கிடைக்கவில்லை.
இதனால், அவரைத் தேடிக் கண்டுபிடிப்பதற்காக நீதிமன்றத்தின் உதவியை நாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten