தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 31 juli 2013

இந்திய மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல் - இலங்கை கடற்படையினரால் 65 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை மீனவர்களால் தாம் நேற்று தாக்கப்பட்டதாக இந்திய மீனவர்கள் முறையிட்டுள்ளனர்.
இலங்கைக்கு அப்பால் உள்ள கோடியக்கரை கடற்பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக இந்திய மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பெருமாள்பேட்டை பகுதியில் இருந்து கடலுக்கு சென்ற மீனவர்களே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதன்போது அங்கு வந்த இலங்கை மீனவர்கள் கற்களாலும் பொல்லுகளாலும் தம்மை தாக்கியதாக இந்திய மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதன்போது 5 இந்திய மீனவர்கள் காயமடைந்துள்ளனர். அவர்கள் நாகப்பட்டினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
65 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது
இலங்கையின் கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட 65 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.
பருத்தித்துறை கடற்பரப்பில் நேற்றிரவு மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 34 இந்தியா மீனவர்களும், முல்லைத்தீவு கடற்பரப்பில் 31 இந்திய மீனவர்களும் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மீனவர்களுடன், 09 மீன்பிடி படகுகள், வலைகளையும் இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர் என கடற்படையின் பேச்சாளர் கமாண்டார் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten