தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 18 juli 2013

அகதிகள் தொடர்பில் இறுக்கமான தீர்வு: அவுஸ்திரேலிய பிரதமர் அறிவிப்பார்?

விமானத்தின் கதவைத் திறக்க முயன்ற ரமித் ரம்புக்வெலவிற்கு அபராதம்
[ வியாழக்கிழமை, 18 யூலை 2013, 03:32.40 AM GMT ]
ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் மகன் ரமித் ரம்புக்வெல மதுபோதையில் விமானத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியமைக்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்தது.
ரமித் ரம்புக்வெலவின் கிரிக்கெட் சுற்றுப் பயணத்தில் 50 சதவீத பணத்தொகையே அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதுடன், கடுமையாக எச்சரிக்கப்பட்டதாகவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் குறிப்பிட்டுள்ளது.
பிரிட்டிஷ் எயார்வேஸ் விமான நிலையத்திற்கு சொந்தமான விமானத்தில் சென் லூசியாவிலிருந்து கெட்விக் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோதே மது போதையில் இருந்த ரமித் ரம்புக்வெல விமானத்தின் கதவை திறக்க முயன்றுள்ளார்.
இவர், 35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் கதவை திறக்க முயன்றமையினால் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அகதிகள் தொடர்பில் இறுக்கமான தீர்வு: அவுஸ்திரேலிய பிரதமர் அறிவிப்பார்?
[ வியாழக்கிழமை, 18 யூலை 2013, 02:34.00 AM GMT ]
அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளின் அகதிகளுக்கு எதிராக அடுத்த வாரம் அவுஸ்திரேலியாவின் பிரதமர் கெவின் ரட் (kevin rudd) இறுக்கமான சட்டதிட்டம் ஒன்றை அமுலாக்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
தமது ஆதரவாளர்களை திருப்திபடுத்தும் வகையில் அவர் இந்த தீர்வினை அறிவிப்பார் என்று அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
கெவின் ரட் மற்றும் ஜுலியா கிளார்ட் தலைமையிலான தொழில் கட்சியினால் கடந்த பல வருடங்களாக இலங்கை உள்ளிட்ட நாடுகளின் அகதிகள் குறித்த விவகாரம் தீர்க்கப்படாமலே உள்ளது.
இந்த பிரச்சினைக்கு சரியான தீர்வுகள் எதனையும் யாரும் இதுவரையில் முன்வைக்கவில்லை.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களில் ஈரானில் இருந்து வருகின்ற அகதிகளின் எண்ணிக்கை இரட்டிப்பு அதிகரிப்பை காட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது. இது தற்போது அரசாங்கத்துக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் பிரதமர் பொறுப்பை மீண்டும் பொறுப்பேற்றுள்ள கெவின் ரட், இந்த விடயத்தில் அடுத்த வாரம் இறுக்கமான தீர்வு ஒன்றை அறிவிக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருட ஆரம்பித்தில் இருந்து இதுவரை சுமார் 5 ஆயிரம் சட்டவிரோத குடியேறிகள் அவுஸ்திரேலியா சென்றிருந்தனர். இலங்கை, ஈரான் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஏராளமான சட்டவிரோத குடியேறிகள் அவுஸ்திரேலியா நோக்கி செல்கின்றனர்.
அவர்களில் ஈரான் பிரஜைகளே அதிகமாக இருப்பதாக அவுஸ்திரேலியா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten