தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 31 juli 2013

மறைமுக கொலை அச்சுறுத்தலோ!!-விக்னேஸ்வரன் முதலமைச்சரானால் தமிழர்களுக்கு சுடுகாடு நிச்சயம்: சம்பிக்க ரணவக்க!

தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்று முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் முதலமைச்சரானால் தமிழ் மக்களுக்கு கண்ணீரும், இரத்தமும், சுடுகாடும் நிச்சயம் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
எனவே வடக்கு மக்கள் வீணாக பிரிவினைவாதிகளுக்கு துணை போய் அழிவை தேடிக் கொள்ளக்கூடாது எனவும் அவர் கூறினார்.
ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளருமான அவர் மேலும் தெரிவிக்கையில்,
பிரபாகரனை நம்பி அழிவைத் தேடிக்கொண்டது போல், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இனவாத அரசியல் ஊடாக வடக்கு மக்கள் மீண்டும் அழிவை தேடிக் கொள்ளக்கூடாது.
வடக்கில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகளின் எதிர்காலம் அந்த மாகாண மக்களின் கைகளில் தங்கியுள்ளது.
மாகாணசபை முறைமையை முற்றாக எதிர்க்கும் கட்சி என்ற வகையில் ஜாதிக ஹெல உறுமய வடக்கு மாகாண சபை தேர்தலை புறக்கணிக்கின்றது.
விடுதலைப் புலிகளினால் விரட்டியடிக்கப்பட்ட சிங்கள மக்களை யாழ் குடா உட்பட வடக்கின் பல்வேறு பகுதிகளிலும் மீள்குடியமர்த்தாது தேர்தல் நடத்தப்படுதை நாம் எதிர்க்கின்றோம்.
13வது திருத்தச் சட்டத்தில் பிரிவினைவாத அதிகாரங்களை நீக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு அரசு உரிய பதிலை வழங்க வேண்டும்.
13ஆவது திருத்தச் சட்டம் நாட்டின் இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட தேசிய ஒருமைப்பாட்டிற்கே அச்சுறுத்தலாகும்.
இந்தியாவின் தமிழீழ கனவு இலங்கையில் ஒரு போதும் நிறைவேறாது.
இந்தியா கபட நோக்கத்துடன் இலங்கையில் தனி தமிழீழத்தை அமைத்துக் கொடுப்பதற்காக 1987ஆம் ஆண்டு இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக மாகாணசபை முறையை அறிமுகம் செய்ததுடன் அதில் பிரிவினைவாத அதிகாரங்களையும் உள்ளடக்கியது.
அன்று முதல் இன்று வரை நாடு பெரும் இனவாத போராட்டத்தை சந்தித்து வருகின்றது.
இந்த நிலையில், வட மாகாண சபை தேர்தலின் ஊடாக தமிழீழக் கனவை நிறைவேற்றிக்கொள்ள இந்தியா முயற்சித்து வருகிறது. இதற்கு ஒரு போதும் இடமளிக்க போவதில்லை என்றார்.

மறைமுக கொலை அச்சுறுத்தலோ!!

Geen opmerkingen:

Een reactie posten