தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 28 juli 2013

மாமனாரினால் தீயிட்டு கொலை செய்யப்பட்ட மருமகள்: கட்டுநாயக்கவில் சம்பவம்!

ஹலால் சான்றிதழை நீக்காவிடின் போராட்டம் வெடிக்கும்: பொது பலசேனா எச்சரிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 28 யூலை 2013, 05:16.17 AM GMT ]
ஹலால் சான்றிதழை முழுமையாக நீக்காவிடின் நாடளாவிய ரீதியில் போராட்டம் வெடிக்கும் என பொது பலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். 
இந்த விடயம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சுக்கு தெரிவித்துள்ளதாகவும் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்காவிடின் தாம் நிச்சயமாக அதனைத் தடுத்து நிறுத்துவதற்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாகவும். அவர் மேலும் தெரிவித்தார்.
ஹலால் சான்றிழை நிறுத்த வேண்டும் என கோரி நாம் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டோம். அதன் விளைவாக பேச்சுவார்த்தைகளும் பல்வேறு மட்டங்களில் முன்னெடுக்கப்பட்டதுடன் அதனை நீக்குவதாகவும் உறுதியளிக்கப்பட்டது. ஆனால் அந்த வாக்குறுதி தற்போது மீறப்பட்டுள்ளது.
சந்தைகளுக்குச் சென்றுபார்த்தால் ஹலால் இலட்சனைகள் பொறிக்கப்பட்ட உணவுப்பொருட்களைக் காணமுடிகின்றது. எனவே, அது தொடர்பாக ஆராய்ந்து பார்த்து அதனை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நாம் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.
எமது இந்த கோரிக்கைக்கு உரிய பதில் கிடைக்கும் என நாம் எதிர்பார்க்கின்றோம். அவ்வாறு கிடைக்கவில்லையெனில் மீண்டும் ஹலால் சான்றுக்கு எதிராக பாரிய போராட்டம் நடத்தி அதனை நிறுத்தியே தீருவோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மாமனாரினால் தீயிட்டு கொலை செய்யப்பட்ட மருமகள்: கட்டுநாயக்கவில் சம்பவம்
[ ஞாயிற்றுக்கிழமை, 28 யூலை 2013, 04:28.14 AM GMT ]
கட்டுநாயக்க பிரதேசத்தில் மாமனாரினால் தீயிட்டுக்  மருமகள் கொலை செய்யப்பட்ட சம்பவம்  நேற்று இடம் பெற்றுள்ளது. 
கட்டுநாயக்க, குரணை, நத்தா மாவத்தையை சேர்ந்த செல்லப்புலிகே லக் சிகா சுதர்ஸனி ரோஸா என்ற 28 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயாரே கணவரின் தந்தையினால் தீயிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

குறித்த பெண் சந்தேக நபரான கணவரின் தந்தையினால் தீயிட்டு சம்பவத்தை அடுத்து எரிகாயங்களுக்கு உள்ளான பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று மரணமடைந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக சீதுவை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் மரணமடைந்த பெண்ணின் மாமனாரை கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது, மருமகளுக்கு தானே தீ மூட்டியதாக சந்தேக நபர் பொலிஸாரிடம் வாக்குமூலமளித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான நீதிமன்ற விசாரணை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் ஆறாம் திகதி நடைபெறும் எனவும் அன்றைய தினம் சாட்சிகளை மன்றில் ஆஜர் செய்யுமாறும் நீர்கொழும்பு மேலதிக நீதவான் துலானி எஸ் வீரதுங்க உத்தரவிட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு பிராந்திய உப பொலிஸ் அத்தியட்சகர் பி. ஏ.டி. விஜயரத்னவின் ஆலோசனையின் போரில் சீதுவை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten