தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 30 juli 2013

வெளிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். பிரித்தானிய குடிவரவிற்கு 100 போர்க்குற்றவாளிகள் விண்ணப்பம்

மட்டு. அரச திணைக்களங்களுக்கு தனிச் சிங்களத்தில் கடிதம்! திணறும் அதிகாரிகள்- திறமைக்கு மதிப்பளிக்காமை குறித்து தமிழ் இளைஞர், யுவதிகள் கவலை
[ செவ்வாய்க்கிழமை, 30 யூலை 2013, 01:44.23 PM GMT ]
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரச திணைக்களங்களுக்கு கொழும்பில் அமைந்துள்ள அத்திணைக்களங்களின் தலைமையகங்களால் தனிச் சிங்களத்தில் கடிதங்களும், சுற்று நிரூபங்களும் அனுப்பப்பட்டு வருகின்றன.
இதனால் சிங்களம் தெரியாத தமிழ் அரச உத்தியோகஸ்தர்கள் பலத்த சிரமங்களுக்கு உள்ளாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
தனிச் சிங்களத்தில் கடிதங்கள் வருவதானால் அதனை மொழி பெயர்ப்பு செய்வதற்கு இன்னுமொரு இடத்தினை நாடிச் செல்ல வேண்டியுள்ளது. இதனால் தமது நேர விரயம், வேலை தாமதம் ஏற்பட்டு வருவதாகவும் மட்டக்களப்பு மாவட்ட அரச திணைக்கள உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
திறமைக்கு மதிப்பளிக்காமை குறித்து தமிழ் இளைஞர், யுவதிகள் கவலை
இலங்கை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் பொலன்நறுவையில் நேற்று முன்தினம் நடாத்தப்பட்ட தேசிய விளையாட்டு விழாவில் தமிழ் இளைஞர், யுவதிகளின் சாதனைகளுக்கு மதிப்பளிக்கப் படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதில் தேசிய சாதனைககுக்கு உரிய பரிசில்களும் விருதுகளும் வழங்கப்படாமையாது மிகுந்த வேதனையளிப்பதாக வடகிழக்கினைப் பிரதிநிதித்துவப் படுத்தும் தமிழ் இளைஞர், யுவதிகள் தெரிவிக்கின்றனர்.
அம்பாந்தோட்டை, குருணாகல், காலி, போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த பெரும்பான்மை இனத்தினைச் சேர்ந்த இளைஞர் யவதிகளுக்கு  மேற்படி சாதனைகளுக்குரிய விருதுகள் வழங்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
இம்முறை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் 25 வது விளையாட்டு விழாவில், மன்றத்தில் பதிவு செய்யப்பட்ட இலங்கையிலுள்ள அனைத்து இளைஞர் கழகங்களும் பங்கு கொண்டு தத்தமது திறமைகளை வெளிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

பிரித்தானிய குடிவரவிற்கு 100 போர்க்குற்றவாளிகள் விண்ணப்பம்
[ செவ்வாய்க்கிழமை, 30 யூலை 2013, 01:03.42 PM GMT ]
கடந்த ஆண்டு பிரித்தானிய குடிவரவிற்கு சுமார் 100 போர்க்குற்றவாளிகள் விண்ணப்பித்துள்ளதாக பிரித்தானிய குடிவரவு அதிகாரிகள் அறிவித்துள்ளார்கள்.
இவ்வாறு விண்ணப்பித்தவர்களுள் அநேகர் பல வருடங்களாக பிரித்தானியாவில் வசித்து வருபவர்களெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போர்க்குற்றவாளிகளுள் பெரும்பாலானோர் ஆப்கனிஸ்தான், ஈரான், ஈராக், றுவண்டா, சேர்பியா மற்றும் இலங்கையைச் சேர்ந்தவர்களாவர்.
போர்க்குற்றவாளிகளிற்கு பிரித்தானிய அரசாங்கம் ஒரு போதும் அகதி அந்தஸ்து வழங்காதென குடிவரவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பல்வேறுப்பட்ட மனித உரிமை நிறுவனங்கள் இக்குற்றவாளிகள் சொந்த நாட்டில் சித்திரவதைகளிற்கு முகங்கொடுக்க நேரிடுகின்றமையினால் பிரித்தானிய நீதிமன்றங்களில் இவர்களின் குற்றச்செயல்கள் விசாரிக்கப்பட வேண்டுமென்று கோரிக்கை விடுக்கின்றன.
தகவல் பெற்றுக்கொள்ளும் உரிமை அடிப்படையில் பிபிசி சேவையினால் விடுக்கப்பட்ட கோரிக்கையிற்கேற்ப கடந்த 15 மாதங்கள் அதாவது தை 2012 முதல் 800 போர் குற்றவாளிகள் உள்நாட்டில் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
இவர்களுள் 99 பேர் பிரித்தானிய குடியுரிமையிற்கு விண்ணப்பித்துள்ளனர் என்பதுடன் மேலும் 16 கொலைக்குற்றவாளிகள் பிரித்தானியாவிற்குள் உட்புகுவதற்கும் விண்ணப்பித்துள்ளனர்.
2005 -2012 ம் ஆண்டு காலப்பகுதிகளிற்குள் சுமார் 700 போர் குற்றவாளிகள் அடையாளங் காணப்பட்டுள்ளனர் என குடிவரவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten