[ புதன்கிழமை, 17 யூலை 2013, 11:51.09 AM GMT ]
இந்த கொலை வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், கொலை சம்பந்தமான விசாரணைகளை நடத்தி வரும் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விடுத்த வேண்டுகோளை அடுத்து நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
யாழ்.மாநகராட்சி மன்ற பொது சுகாதாரப் பரிசோதகர் பிரிவினரால் தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வார செயற்பாடுகளின் தொடர் நடவடிக்கையாக கடந்த 5,6,7ம் திகதிகளில் முறையே அரியாலை, நாவாந்துறை, கொழும்புத்துறை ஆகிய பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவுகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக பொதுசுகாதார பரிசோதகர் க.ஆ.ஜீவநாதன் தெரிவித்தார்.
வழக்கில் மூன்றாவது சந்தேக நபரான வாஸ் குணவர்தன மற்றும் அவரது மனைவியிடம் இருந்து ஏனைய சந்தேக நபர்களுக்கு மிரட்டல் விடுக்கப்படுகிறது என திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் கூறினர்.
இதனால் ஏனைய சந்தேக நபர்களை அவரிடம் இருந்த பிரித்து, தனியான சிறைக்கூட்டில் அடைக்க உத்தரவிடுமாறு அந்த அதிகாரிகள் நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டனர்.
குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளின் கோரிக்கைக்கு இணங்க உத்தரவை பிறப்பித்த நீதவான், வாஸ் குணவர்தன உட்பட சந்தேக நபர்களை எதிர்வரும் 19ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
கடலில் விழுந்து காணாமல் போனவர் சடலமாக மீட்பு
திருகோணமலை சீனன் குடா பொலிஸ் பிரிவிலுள்ள மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆழ்கடல் மீன்பிடி படகில் இருந்த படகோட்டி கடலில் விழுந்து காணாமல்போன நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் என சீனன் குடா பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த நபர் நேற்றிரவு கடலில் தவறி விழுந்துள்ளார். இன்று அதிகாலை கடற்படையின் சுழியோடிகள் கடலில் இருந்து சடலத்தை மீட்டுள்ளனர்.
போகுவத்தை மடம்வெளி பிரதேசத்தை சேர்ந்த 44 வயதான பிரியந்த என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இறந்தவரின் சடலம் சீனன் குடா துறைமுகத்தில் வைக்கப்பட்டிருந்ததுடன் மரணம் தொடர்பிலான விசாரணைகளை திருகோணமலை நீதவான் நடத்தினார்.
இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சீனன் குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை தீவிரம்- கவனிப்பாரற்ற குழாய்க் கிணறு! சிரமப்படும் மக்கள்
[ புதன்கிழமை, 17 யூலை 2013, 11:24.03 AM GMT ]
இதன்படி அரியாலைப் பகுதியில் 516 நிலையங்கள் பரீட்சிக்கப்பட்டு 15 இடங்கள் நுளம்பு பெருகுவதற்கு ஏதுவாகக் காணப்பட்டு அழிக்கப்பட்டதுடன் 3 இடங்களில் குடம்பிகள் காணப்பட்டன.இரு இடங்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது.
நாவாந்துறைப் பகுதியில் 103 இடங்கள் பரீட்சிக்கப்பட்டு. 69 இடங்கள் நுளம்பு பெருகுவதற்கு ஏதுவாக இனங்காணப்பட்டு அழிக்கப்பட்டன.
கொழும்புத்துறைப் பகுதியில் 915 இடங்கள் பரீட்சிக்கப்பட்டு இவற்றில் 12 இடங்கள் நுளம்பு பெருகுவதற்கு ஏதுவானவையாக அடையாளம் காணப்பட்டு அவை அழிக்கப்பட்டன.
இதேவேளை டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தில் யாழ்.மாநகராட்சி மன்றத்தினால் பரீட்சைக்கு உட்படுத்தப்பட்ட மொத்த நிலையங்களின் விபரத்தில் 42 பாடசாலைகளில் 9 பாடசாலைகள் இனங்காணப்பட்டன.
23 அரச திணைக்களங்களில் 2 திணைக்களங்கள் இனங்காணப்பட்டன. 7211 ஏனைய நிலையங்கள் (வீடுகள் உட்பட) பரீட்சிக்கப்பட்டு 43 நிலையங்கள் நுளம்பு பரவுவதற்கு ஏதுவாக காணப்பட்டதுடன் 21 நிலையங்களில் நுளம்புக் குடம்பிகள் உள்ளன என இனங்காணப்பட்டன.
இதேவேளை 22 நிலையங்களுக்கு அறிவித்தல்கள் வழங்கப்பட்டதுடன் 15 நிலையங்களுக்கு எதிராக வழங்குத்தாக்கல் செய்யப்பட்டது. இவ் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் ஊழியர்கள், உத்தியோகத்தர்கள், தொண்டர்கள், பொலிஸார், இராணுவ உத்தியோகத்தர்கள் என 797 பேர் ஈடுபட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கவனிப்பாரற்ற குழாய்க் கிணறு!- நீரைப் பெறுவதில் சிரமப்படும் மக்கள்
மல்லாவி ஆதார வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள குழாய்க்கிணறு யாரும் கவனிப்பாரற்ற நிலையில் புனரமைக்கப்படாமல் இருப்பதாகவும் இதனால் இப்பகுதி மக்கள் மற்றும் வைத்தியசாலைக்கு வருவோர் தண்ணீரைப் பெற்றுக் கொள்வதில் பல் வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாக விசனம் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 1995ம் ஆண்டு காலப் பகுதியில் நிறுவப்பட்ட இக்குழாய்க் கிணறு யுத்த அனர்த்தத்தின் பின்னர் இதுவரை புனரமைக்கப்படவில்லை. அத்துடன் சுற்றுப்புறச் சூழலிலுள்ள 33 கிணறுகளும் இதுவரை புனரமைப்புக்கு உட்படுத்தப்படாமலே காணப்படுவதாக பொதுமக்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
சுத்தமான குடிநீர் இதன்மூலம் முன்னர் கிடைக்கப் பெற்ற நிலையில் பழுதடைந்துள்ள இக்குழாய்க் கிணற்றை புனரமைப்பு செய்வதன் ஊடாக வைத்தியசாலை நோயாளர்கள் மற்றும் அப்பகுதி பொது மக்களும் பெரும் நன்மையடைவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
எனவே உரிய தரப்பினர் குழாய்க் கிணறு மற்றும் கிணறுகளையும் புனரமைப்பு செய்து தண்ணீர் வசதியை ஏற்படுத்தி தருமாறு பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
Geen opmerkingen:
Een reactie posten