காதலியை ஏமாற்றி பணமோசடியில் ஈடுபட்ட காதலன் விளக்கமறியலில்!- கோமா நிலைக்குள்ளான கர்ப்பிணித் தாய் மரணம்
[ புதன்கிழமை, 17 யூலை 2013, 01:03.31 PM GMT ]
காதலியை ஏமாற்றி, 16 லட்சம் ரூபா பணத்தையும் 54 பவுண் தங்க நகையையும் மோசடி செய்த நபரை கொழும்பு கோட்டை பதில் நீதவான் பிரியந்த லியனகே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
கிறிஷான் பீரிஸ் என்ற நபரே எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நீதிமன்றத்தில் சாட்சியமளித்த சந்தேக நபரின் காதலி,தான் சிறிய வயதில் இருந்து சந்தேக நபரை காதலித்து வந்ததாகவும் நியூசிலாந்து விசாவை பெற்று அங்கு குடியிருக்க போவதாக கூறி, தன்னிடம் இருந்த பணம் மற்றும் நகைகளை பெற்று கொண்டதாகவும் கூறினார்.
தான் தற்போது கர்ப்பிணியாக இருப்பதாகவும், நிரந்தர வருமானம் இல்லாத தனது காதலர் இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும் அவர் குறிப்பிட்டார்.
சத்திரசிகிச்சைக்குட்படுத்தப்பட்டு கோமா நிலைக்குள்ளான கர்ப்பிணித் தாய் மரணம்
திருகோணமலை கிண்ணியா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு, கோமா நிலையிலிருந்த கர்ப்பிணி தாய் ஒருவர் இன்று திருகோணமலை பொது வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
கிண்ணியா குட்டிக்கராச்சியைச் சேர்ந்த 6 பிள்ளைகளின் தாயான 43 வயதான கனூன் என்பவரே இன்று காலை 10 மணியளவில் உயிரிந்துள்ளார்.
கடந்த வருடம் டிசம்பம் மாதம் 28 ஆம் திகதி தனது ஏழாவது பிள்ளை பேறுக்காக கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதன்போது மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையில் ஏற்பட்ட தவறு காரணமாக அவர் கோமா நிலையை அடைந்தார்.
இதனையடுத்து, மட்டக்களப்பு, திருகோணமலை, கண்டி வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனளிக்காத நிலையில், மீண்டும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
ஏற்கனவே 6 பிள்ளைகளை அறுவை சிகிச்சையின்றி அவர் பெற்றெடுத்திருந்தார்.
இந்த நிலையில், சத்திரசிகிச்சையை மேற்கொண்ட நான்கு வைத்தியர்களுக்கு எதிராக திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்கு விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன.
விசாரணைகள் நடைபெற்று வரும் சந்தர்ப்பத்தில், கோமா நிலையைில் இருந்த அந்த பெண், சுமார் 7 மாதங்களின் பின்னர் உயிரிழந்துள்ளார்.
பெண்ணின் சடலம் திருகோணமலை பொது வைத்தியாலையில் வைக்கப்பட்டுள்ளது.
வாஸ் குணவர்தன தொடர்ந்தும் விளக்கமறியலில்- காணாமல் போனவர் சடலமாக மீட்பு
[ புதன்கிழமை, 17 யூலை 2013, 11:51.09 AM GMT ]
இந்த கொலை வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், கொலை சம்பந்தமான விசாரணைகளை நடத்தி வரும் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விடுத்த வேண்டுகோளை அடுத்து நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
வழக்கில் மூன்றாவது சந்தேக நபரான வாஸ் குணவர்தன மற்றும் அவரது மனைவியிடம் இருந்து ஏனைய சந்தேக நபர்களுக்கு மிரட்டல் விடுக்கப்படுகிறது என திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் கூறினர்.
இதனால் ஏனைய சந்தேக நபர்களை அவரிடம் இருந்த பிரித்து, தனியான சிறைக்கூட்டில் அடைக்க உத்தரவிடுமாறு அந்த அதிகாரிகள் நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டனர்.
குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளின் கோரிக்கைக்கு இணங்க உத்தரவை பிறப்பித்த நீதவான், வாஸ் குணவர்தன உட்பட சந்தேக நபர்களை எதிர்வரும் 19ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
கடலில் விழுந்து காணாமல் போனவர் சடலமாக மீட்பு
திருகோணமலை சீனன் குடா பொலிஸ் பிரிவிலுள்ள மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆழ்கடல் மீன்பிடி படகில் இருந்த படகோட்டி கடலில் விழுந்து காணாமல்போன நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் என சீனன் குடா பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த நபர் நேற்றிரவு கடலில் தவறி விழுந்துள்ளார். இன்று அதிகாலை கடற்படையின் சுழியோடிகள் கடலில் இருந்து சடலத்தை மீட்டுள்ளனர்.
போகுவத்தை மடம்வெளி பிரதேசத்தை சேர்ந்த 44 வயதான பிரியந்த என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இறந்தவரின் சடலம் சீனன் குடா துறைமுகத்தில் வைக்கப்பட்டிருந்ததுடன் மரணம் தொடர்பிலான விசாரணைகளை திருகோணமலை நீதவான் நடத்தினார்.
இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சீனன் குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Geen opmerkingen:
Een reactie posten