தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 18 juli 2013

வடக்கில் அரச சார்பற்ற நிறுவனமொன்று மனித உரிமை மீறல் குறித்த தகவல்களை திரட்டுவதாக குற்றச்சாட்டு

ஐக்கிய தேசியக்கட்சி பலவீனப்படவில்லை- வடக்கில் தேர்தல் சுயாதீனமாக இடம்பெறுவது சந்தேகம்: ஐ.தே.க
[ வியாழக்கிழமை, 18 யூலை 2013, 02:25.13 AM GMT ]
ஐக்கிய தேசிய கட்சி பலவீனமாக உள்ளது என்பதை ஏற்க முடியாது என்று அதன் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஹெரான் குணவர்தனவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்துக் கொண்ட உரையாற்றும்; போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி குணவர்தனவுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட குற்றவியல் பிரேரணைக்கு எதிராக செயற்படுவதற்கு, ஐக்கிய தேசிய கட்சி முக்கிய பங்கினை வகித்திருந்தது.
தற்போது கட்சி சிறந்த நிலையை அடைந்துள்ளதுடன், அரசாங்கத்தை எதிர்த்து போட்டியிடுவதற்கு தயாராக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, அரசியல் தீர்வின் யதார்த்தத்தை புரிந்துக் கொண்டால் மாத்திரமே, அதன்பால் மக்களை ஒன்று திரட்ட முடியும் என்றும் அவர் இந்த நிகழ்வின் போது குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தற்போது நாட்டுக்கு 17ம் திருத்தச்சட்டத்தின் கீழ் உள்ள சுயாதீனக்குழுக்கள் அத்தியாவசியமாவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வடக்கில் தேர்தல் சுயாதீனமாக இடம்பெறுவது சந்தேகம் -ஐதேக
வடக்கில் தேர்தல்களின் போது ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளமை சர்வதேசத்துக்கு பிழையான தோற்றத்தை ஏற்படுத்திக்காட்டும் என்று, ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் கித்சிரி மன்ஞநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய அவர், வடமாகாணத்தில் இந்த முறை தேர்தல்கள் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெறும் என்பது சந்தேகமே.
சர்வதேச நாடுகள் வடக்கு தேர்தலை அவதானித்துக் கொண்டுள்ள நிலையில், இதனை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்துவதே இலங்கைக்கு நன்மை பயக்கும்.
இராணுவத்தினர் தேர்தல் செயற்பாடுகளில் ஈடுபடுத்தப்படக்கூடாது.
ஆயுதம் தாங்கிய நிலையில் இராணுவத்தினர் நிறுத்தப்பட்டிருந்தால், அது சர்வதேச நாடுகளுக்கு பிழையான ஒரு தோற்றத்தை காட்டிவிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கில் அரச சார்பற்ற நிறுவனமொன்று மனித உரிமை மீறல் குறித்த தகவல்களை திரட்டுவதாக குற்றச்சாட்டு
[ வியாழக்கிழமை, 18 யூலை 2013, 03:11.26 AM GMT ]
வடக்கில் அரச சார்பற்ற நிறுவனமொன்று மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான தகவல்களை திரட்டி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
போர் இடம்பெற்ற காலத்தில் சிறுவர் சிறுமியரின் சுகாதார வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் சேவையாற்றி வந்த கெவி எலயன்ஸ் என்ற அரச சார்பற்ற நிறுவனமே இவ்வாறு தகவல்களை திரட்டியதாகத் புலனாய்வுப் பிரிவினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
பிரதேசத்தைச் சேர்ந்த சுகாதார உத்தியோகத்தர்களை பிழையாக வழிநடாத்தி தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன.
போர் இடம்பெற்ற காலத்தில் வடக்கு மக்களின் மனித உரிமைகள் மீறப்பட்டமைக்கான சான்றுகளை இந்த நிறுவனம் திரட்டியுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கொலைகள் மற்றும் காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பிலும் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன.
தகவல்களை திரட்டும் பணியில் ஈடுபட்ட வெளிநாட்டுப் பிரஜைகளில் ஒருவர் 30 ஆண்டுகள் பி.பி.சீ ஊடகத்தில் கடமையாற்றிவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் குழுவினர் பெருந்தோட்டப் பகுதிகளிலும் தகவல்களை திரட்டியுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten