[ திங்கட்கிழமை, 15 யூலை 2013, 10:25.40 PM GMT ]
வடமாகாண சபைத் தேர்தல் நடைபெற்றால், அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவதாக தெரிவித்த சிலர் தொடர்ந்தும் அதில் இணைந்திருப்பதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.
தற்போது, வட மாகாண சபை தேர்தலுக்கான நடவடிக்கைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், மாறுபட்ட கருத்தை முன் வைப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
பிரித்தானியா கார்டிப் மைதானத்தில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது புலிக்கொடியுடன் ஓடியவருக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த கருத்தினை வெளியிட்டார். காணி மற்றும் காவல்துறை அதிகாரம் நீக்கப்படாமல், வடக்கில் தேர்தலை நடத்த இடம் அளிக்கப்போதவில்லை என கூறி வந்தவர்கள், தற்போது அரசாங்கத்திற்கு உள்ளே மௌனமாக உள்ளனர் என தெரிவித்தார்.
ஆனால், 13வது அரசியல் திட்டத்திற்கு அமையவே, வட மாகாண சபை தேர்தல் நடத்தப்படுவதற்கான ஆயத்த பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த நிலையில், அவர்கள் குற்ற உணர்வின்றி எப்படியிருக்கின்றனர் என கேள்வி எழுப்பினார்.
புலிக்கொடியுடன் ஓடியவர் இலங்கை வந்தால் விமானநிலையத்தில் கைது செய்யுமாறு சிவப்பு அறிவிப்பு!
[ செவ்வாய்க்கிழமை, 16 யூலை 2013, 12:11.52 AM GMT ]
இந்த வழக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே வழக்கை செப்டெம்பர் 30ம் திகதிவரை நீதவான் ஒத்திவைத்தார்.
சாம்பியன்ஸ் கிண்ணத்துக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் ஜுன் மாதம் 20 ஆம் திகதி கார்டிப் நகர மைதானத்தில் நடைபெற்றது.
இதன்போது மைதானத்திற்குள் புலிக்கொடியுடன் ஓடிய லோகேஸ்வரன் மணிமாறன் என்பவரைக் கைது செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்ட திறந்த பிடியாணையை (open warrent) கடந்த 3ம் திகதி புதன்கிழமை பிறப்பித்தார்.
இந்நிலையில், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அவர் வருகைதந்தால் கைது செய்யுமாறு நேற்று திங்கட்கிழமை உத்தரவிட்ட நீதவான் சிவப்பு அறிவிப்பு (red notice) விடுத்துள்ளார் என இலங்கை இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten