தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 16 juli 2013

பிக்குகள் எரித்த லாரி இதுதான்: புகைப்படம் இணைப்பு !

புலிக்கொடியுடன் ஓடியவருக்கு எதிராக இலங்கையில் வழக்கு !
16 July, 2013 by admin


பிரித்தானிய கார்டிஃப் நகர மைதானத்தில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது புலிக்கொடியுடன் ஓடியவருவருக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் நேற்று(திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே வழக்கை செப்டெம்பர் 30 ஆம் திகதிவரையிலும் நீதவான் ஒத்திவைத்தார்.

சாம்பியன்ஸ் கிண்ணத்துக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் ஜுன் மாதம் 20 ஆம் திகதி கார்டிஃப் நகர மைதானத்தில் நடைபெற்றது. இதன்போது மைதானத்திற்குள் புலிக்கொடியுடன் ஓடியவரையே கைது செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்ட திறந்த பிடியாணையை கடந்த 3 ஆம் திகதி புதன்கிழமை பிறப்பித்தார். இந்நிலையில், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அவர் வருகைதந்தால் கைது செய்யுமாறு நேற்று திங்கட்கிழமை உத்தரவிட்ட நீதவான் உள்ளூர் சிவப்பு அறிவிப்பு விடுத்துள்ளார்.

புலிக்கொடியுடன் மைதானத்திற்குள் ஓடி குழப்பம் விளைவித்த மணி என்பவருக்கே இவ்வாறு சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டு திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் அவருக்கு எதிரான வழக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=5348

பிக்குகள் எரித்த லாரி இதுதான்: புகைப்படம் இணைப்பு !
16 July, 2013 by admin


சில மணி நேரங்களுக்கு முன்னர் தெமட்டகொடவில், முஸ்லீம் வர்தகருக்குச் சொந்தமான லாரி ஒன்றை பிக்குகள் எரித்துள்ளார்கள். கூட்டமாக கையில் நெருப்பு பந்தங்களோடு வந்த பிக்குகளே லாரியை எரியூட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர் என்று வாகன ஓட்டுனர் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட இந்த லாரி ஒரு முஸ்லீம் வர்தகருக்குச் சொந்தமானது என்றும், அது மாட்டு இறைச்சியை ஏற்றிச் செல்லவே அங்கே வந்தது எனவும் கூறப்படுகிறது. பொதுபலசேனா, ராவண சத்தி போன்ற சில சிங்கள பெளத்த அமைப்புகள், மாடை வெட்டவேண்டாம் எனவும், மாட்டிறைச்சியை சாப்பிடவேண்டாம் எனவும் கூறிவருகிறார்கள்.

இவர்களே முஸ்லீம்களுக்கு எதிராக இவ்வாறு செய்துள்ளார்கள் என்று பெயர் குறிப்பிட விரும்பாத முஸ்லீம் அதிகாரி ஒருவர் அதிர்வு இணையத்துக்கு தெரிவித்துள்ளார். சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட ஆதாரப் புகைப்படம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.


http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=5350

Geen opmerkingen:

Een reactie posten