தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 16 juli 2013

லண்டன் ரஸ்டோரன்டில் 2 இலங்கையர் கைது: 10,000 பவுண்டுகள் தண்டம் !

பிரித்தானியாவில் உள்ள பிளாக்-பூல் பகுதியில், உரிய ஆவணங்கள் எதுவும் இன்றி ஒரு உணவகத்தில் வேலைபார்த்த 2 இலங்கையர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். விசா காலாவதியாகிய நிலையில் இவ்விரு இளைஞர்களும் குறிப்பிட்ட உணவகத்தில் வேலைசெய்து வந்துள்ளார்கள். 21 வயது மற்றும் 20 வயது நிரம்பிய இரண்டு இலங்கையர்களே மேற்படி கைதுசெய்யப்பட்ட நபர்கள் ஆவர். இவர்களை இலங்கைக்கு நாடு கடத்தவிருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள். இதேவேளை இவ்விரு இளைஞர்களையும் வேலைக்கு அமர்த்திய குற்றத்திற்காக உணவக உரிமையாளருக்கு தலா 10 ஆயிரம் பவுண்டுகளை தண்டமாகக் கட்டவேண்டும் என குடிவரவு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளார்கள். பிரித்தானியாவில் இவ்வாறு சரியான வேலை அனுமதிப் பத்திரம் இல்லாத நபர்களை வேலைக்கு வைத்திருந்தால், இவ்வாறு தண்டப்ப பணம் கட்டவேண்டிய நிலை காணப்படுகிறது. 

பிரித்தானியாவில் விசா மற்றும் வேலை அனுமதி இல்லாமல் தங்கியிருக்கும் பல இலங்கையர்கள், லண்டனுக்கு வெளியே சென்று புறநகர்ப் பகுதிகளில் வேலைசெய்து வருகிறார்கள். இவ்வாறு வேலைசெய்தால் பொலிசாரால் அல்லது குடிவரவு அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியாது என்று இவர்கள் தப்புக்கணக்கு போடுவது வழக்கம். ஆனால் தற்போது இதுதொடர்பாக உஷார் அடைந்துள்ள பொலிசார், லண்டனில் உள்ள கடைகளை தேடுவதை விடுத்து, லண்டனுக்கு வெளியே உள்ள கடைகளில் வேலைசெய்பவர்களை தேடிவருகிறார்கள். அத்தோடு தற்போது வியாபார உரிமையாளர்களுக்கு 10,000 பவுண்டுகள் தண்டப்பணம் அறவிடப்படும் நிலையை மாற்றி, அதனை 20.000 ஆயிரம் பவுண்டுகளாக உயர்த்தவுள்ளதாக குடிவரவு அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளார்கள்.

Geen opmerkingen:

Een reactie posten