அவசரத் தாக்குதல் பயிற்சியாம்: அமெரிக்க படைகள் இலங்கையில் ! இல்லாத இடத்தின் பிரதமர் ருத்திரம் கொள்ளாதது இருக்கும் இட விசுவாசம்தான்!
அமெரிக்காவின் நேவி சீல் படையினர் இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்கள். அவர்களது போர் கப்பல் திருகோணமலைத் துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது. இன் நிலையில் அவர்கள் இலங்கைப் படையினருக்கு பயிற்சிகளை வழங்கிவருகிறார்கள். "பிளாஷ் ஸ்டைல்" தாக்குதல் என்று பெயரிடப்பட்ட திடீர் தக்குதலை எப்படி நடத்துவது என்பது தொடர்பாகவே அமெரிக்க படையினர் இலங்கைப் படையினருக்கு கற்றுக்கொடுப்பதாக, சிங்கள ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது. அமெரிக்க நேவியின் சீல் படைப்பிரிவினரே பாக்கிஸ்தானில் உள்ள எல்லைக் கிராமத்தில் வைத்து பின்லேடனை சுட்டுக்கொன்றார்கள் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
Geen opmerkingen:
Een reactie posten