பிரித்தானிய மகாராணி செல்லாத இந்த வைபவத்திற்கு, அவரது மகன் இளவரசர் சாள்ஸை கொண்டுசெல்ல இலங்கை அரசு பெரும் பிரயத்தனம் காட்டியுள்ளது. இதற்கு அமைவாக இளவரசர் சாள்ஸ் நவம்பர் மாதம் இலங்கை செல்லவுள்ளார் என இரகசியத் தகவல்கள் கசிந்துள்ளது. தனது காதலி கமீலா பார்க்கர் போல்ஸ் உடன் அவர் வரும் நவம்பர் மாதம் 10 திகதி இலங்கை செல்லவுள்ளார். அங்கு நடைபெறும் காமன்வெலத் மாநாட்டில் கலந்துகொள்ளவும் உள்ளார். பிரித்தானியாவில் சுமார் 4 லட்சம் தமிழர்கள் வாழ்கிறார்கள். இவர்கள் பிரித்தானிய அரசுக்கு செலுத்தும் வரிப்பணத்தில் ஒருபகுதிப் பணம் மகாராணியாரின் குடும்பச் செலவுக்கும் , பயணச் செலவுக்கும் பயன்படுத்தப்படுகிறது என்பதனை எவரும் மறுத்துவிட முடியாது.
இலங்கையில் மனித உரிமை விவகாரங்கள் இதுவரை மேம்படவில்லை, காணமல் போவது , கற்பழிப்பது, சட்டத்துக்கு புறம்பான கொலைகள் என்பன தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது. கைதிகள் சித்திரவதை, வெளிநாட்டவர்கள் கடத்தப்பட்டு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதும் குறைந்தபாடாக இல்லை. இன் நிலையில், பிரித்தானிய இளவரசர் சாள்ஸ் இலங்கை செல்வது, இலங்கைக்கு அங்கிகாரத்தை கொடுக்கும் ஒரு நிகழ்வாக மாறிவிடும். இதனை பிரித்தானிய தமிழ் அமைப்புகள், முதலில் கவனத்தில் எடுத்துக்கொள்வது நல்லது.
Geen opmerkingen:
Een reactie posten