[ புதன்கிழமை, 17 யூலை 2013, 05:59.00 AM GMT ]
யாழில் போக்குவரத்தில் ஈடுபடும் சில பஸ்களில் திருட்டு நடவடிக்கையில் ஈடுபடும் திருடர்களுக்கு பேருந்து நடத்துனர்களும் உடந்தையாக இருப்பதாக யாழ்.போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
"உங்கள் பணப்பைகளையும் கைத்தொலைபேசிகளையும் நீங்களே கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள் களவுபோனால் எங்களையும் பொலிஸ் நிலையத்திற்குக் கூட்டிக்கொண்டு போகவேண்டாம்” என தனியார் சாரதிகளும் நடத்துனர்களும் சாரதிகளும் தெரிவிப்பதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
காலையிலும், மாலையிலும் அதிகளவில் பயணிகள் பேருந்துகளில் பயணிக்கின்றனர். அவ்வேளையில் பயணிகளிடம் கிடைப்பதை சுருட்டவென திருட்டுக் கூட்டங்களும் பேருந்துகளில் ஏறுகின்றனர்.
இவ்வாறு பொருட்களைப் பறிகொடுக்கும் சம்பவம் அண்மையில் அதிகரித்துள்ளது.
யாழ் - கொடிகாமம் சேவையில் ஈடுபடும் பேருந்துகளில் இவ்வாறான சம்பவங்கள் தற்போது அடிக்கடி நடைபெறுவதாகவும் பொலிஸ் நிலையங்களுக்குச் செல்வதாகவும் தெரிவிக்கின்றனர்.
நேற்று கூட இவ்வாறான சம்பவம் ஒன்று நிகழ்ந்து பணத்தைத் திருடியவரும் அகப்பட்டார். இதனால் பேருந்து சேவை காலதாமதமாக இடம்பெறுகின்றது. எனவே பயணிகள் தங்கள் உடமைகளை மிக அவதானத்துடன் வைத்திருக்க வேண்டும் என பொலிஸார் அறிவுரை கூறுவதைக்காணக் கூடியதாக இருக்கின்றது.
பணம், கையடக்கத் தொலைபேசி, நகைகள் என்பன சனநெரிசல் உள்ள பேருந்துகளில் திருடப்படும் சம்பவங்கள் தற்போது இடம்பெறுவதாகவும் பொதுமக்களே அதிகளவில் கவனம் செலுத்தவேண்டும் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பிள்ளையுடன் பிச்சையெடுத்த தாய் யாழ். பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்
[ புதன்கிழமை, 17 யூலை 2013, 07:04.15 AM GMT ]
யாழ்ப்பாணம் பஸ் நிலையப் பகுதியில் சுமார் ஒரு வயது மதிக்கத்தக்க குழந்தைப் பிள்ளையுடன் கடந்த சில நாட்களாக நாற்பது வயது மதிக்கத் தக்க பெண் கொதிக்கும் வெய்யிலில் பிள்ளையையும் கொண்டு இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார்.
நேற்று நண்பகல் பஸ் நிலையத்திற்கு வந்த யாழ்ப்பாணம் பிரதேச செயலக ஊழியர்கள் குறிப்பிட்ட பெண்ணைப் பல நூற்றுக் கணக்கான பொது மக்கள் முன்னிலையில் பிடித்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய சிறுவர் மகளிர் விவகார பொலிஸ் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளார்கள்.
குறிப்பிட்ட பெண் இன்று யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார் என பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
Geen opmerkingen:
Een reactie posten