தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 17 juli 2013

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக அஞ்சல் தொலைத் தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கம் எச்சரிக்கை

யாழ். அச்சுவேலி நகர்ப்புற வீடுகளில் சைக்கிள் திருட்டுக்கள் அதிகரிப்பு- யாழில் மதுவை ஒழிக்கும் செயற்திட்டம்! பதனீர் உற்பத்திக்கு அதிக வாய்ப்பு
[ புதன்கிழமை, 17 யூலை 2013, 04:53.59 AM GMT ]
யாழ்பபாணம் அச்சுவேலிப் பிரசேத்தில் கடந்த பல மாதங்களாக சைக்கிள் திருடப்படும் சம்பவங்கள் இடம்பெறுவதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அப்பகுதியில் கடமையில் உள்ள பொலிஸார் இதனைக் கண்டு கொள்வதாக இல்லை என அப்பிரதேச வாசிகள் குறிப்பிடுகின்றனர்.
தூர இடங்களில் இருந்து சைக்கிளில் வந்து அச்சுவேலி நகர்ப் பகுதியில் உள்ள வீடுகளில் நிறுத்தி விட்டுச் செல்லும் பாடசாலை மாணவர்கள் மற்றும் அரச தனியார் துறைகளில் பணிபுரிவோரின் சைக்கிள்களே இவ்வாறு திருடப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சைக்கிள் பூட்டிய நிலையில் உள்ள போதும் பூட்டை உடைத்துக் கொண்டு திருடர்கள் தமது கை வரிசையைக் காட்டிச் செல்கின்றனர். இதனால் பாடசாலை மாணவர்களும் ஏனையோரும் பல்வேறு சிக்கல் நிலையை எதிர் நோக்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
யாழில் மதுவை ஒழிக்கும் செயற்திட்டம் பதனீர் உற்பத்திக்கு அதிக வாய்ப்பு
யாழ்ப்பாணம் வடமராட்சி நல்லொழுக்க நிறுவனம் மதுவை ஒழிக்கும் நோக்கமாக பனை மரத்திலிருந்து பதனீர் இறக்குவோருக்கு கூடிய சந்தர்ப்பம் வழங்கவுள்ளது.
முதற்கட்டமாக வல்லிபுரம் குறிச்சிக் கிராமத்தில் 3 குழுக்களை தெரிவு செய்து அக்குழுக்கள் உற்பத்தி செய்த பதனீரை காய்ச்சி அதனை கருப்பட்டி ஆக்குவதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகிறது.
பனம் பாணியை உற்பத்தி செய்பவர்களிடமிருந்து ஒரு போத்தல் 400 ரூபாய்படி தரமான பனம்பாணியை கொள்வனவு செய்து அவற்றினை பின்னர் விஞ்ஞான முறைப்படி கருப்பட்டியாக்கி விற்பனை செய்வதற்குரிய ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஒரு குழுவிற்கு பொருட்கள் கொள்வனவு செய்வதற்கு 3 ஆயிரம் ரூபாவும் பனம்பாணி கொள்வனவுக்கு 10 ஆயிரம் ரூபாவும் முற்பணமாக வழங்கி அவர்களிடமிருந்து கருப்பட்டியை கொள்வனவு செய்து அதனை சந்தைப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
இதன் மூலம் பனையிலிருந்து கள்ளை இறக்கி மதுபாவனையை குறைத்து கருப்பட்டி உற்பத்தியை அதிகரிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. போரூட் நிறுவனத்தின் திட்டப் பணிப்பாளர் ஜனாப் எம்.எப்.மரிக்கர் நேற்று முன்தினம் நிறுவனத்துக்கு வருகை தந்து இந்தச் செயற்பாட்டை பார்வையிட்டார்.
அதன் பின்னர் 30 குழுக்க ளுக்கு முதற்கட்ட உதவியாக 4 இலட்சம் ரூபா வழங்குவதற்கு முன்வந்துள்ளார். அவருடைய முக்கிய நோக்கம் யாழ்.குடாநாட்டில் கள்ளு உற்பத்தியை குறைத்து தேவையான கருப்பட்டியை உற்பத்தி செய்வதே என குறிப்பிடப்படுகிறது.

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக அஞ்சல் தொலைத் தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கம் எச்சரிக்கை
[ புதன்கிழமை, 17 யூலை 2013, 05:52.10 AM GMT ]
தபால் திணைக்கள உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் பிரதான பிரச்சினைகளை நிவர்த்தி செய்யாத பட்சத்தில், தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாக அஞ்சல் தொலைத் தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அஞ்சல் தொலைத் தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கம் தமது அங்கத்தவர்களுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் “தபால் திணைக்கள உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் பிரதான பிரச்சினைகள் மிக நீண்ட காலமாக தீர்வின்றி தொடர்கின்றன” என்று குறிப்பிட்டுள்ளது.

இவை சம்பந்தமாக முகாமைத்துவத்திற்கு எழுத்து மூலமாகவும், நேரடியான கலந்துரையாடல் மூலமாகவும், தொழிற் சங்கக் கூட்டத்தினூடாகவும் பல முறை முயற்சி செய்தும் அவை பயனற்றதாகவே போயுள்ளது.

இதன் காரணமாக எமது அஞ்சல் தொலைத் தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கத்திலுள்ள சகோதர சகோதரிகள் அனைவரும் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளதோடு எதிர்பார்ப்பற்ற நிலைக்கும் உள்ளாகியுள்ளனர்.

இவ்வாறானதொரு நிலைமை அஞ்சல் திணைக்கள சேவையின் தரத்தைக் குறைப்பதற்கு நேரடியாக வழிவகுக்கும்.

ஒருங்கிணைந்த அஞ்சல் சேவை அதிகாரி அ,ஆ தரத்திற்கான பதவி உயர்வுகள் மற்றும் சம்பள உயர்வுகள் கடந்த ஏழாண்டுகளுக்கு மேலாக வழங்கப்படவில்லை.

முகாமைத்துவ உதவி ஒருங்கிணைந்த தபால் சேவை 3ஆம் நிலை அதிகாரிகளின் வெற்றிடங்கள் நிரப்பப்படாமை,

சம்பள முரண்பாடு, நிரந்தர நியமனம் இன்மை போன்ற பிரச்சினைகளும், 2013 ஆம் நியமனம் வழங்கப்பட்ட ஆயிரத்திற்கு மேற்பட்ட உத்தியோகத்தர்களில் கூடுதலான பெண் உத்தியோகத்தர்களுக்கு அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை.

இந்த வியடங்கள் உள்ளிட்ட இன்னும் பல தீர்க்கப்படாத பிரச்சினைகள் குறித்து எமது உயர்மட்டக் குழு கடந்த ஜுன் மாதம் கலந்தாலோசித்ததோடு அவற்றைத் தீர்த்து வைக்க வேண்டும் என்று முகாமைத்துவத்திற்கு இரண்டு வார கால அவகாசம் கொடுத்தோம்.

எனினும் இன்னமும் எமது கோரிக்கைகள் குறித்து முகாமைத்துவம் கரிசனையற்று இருக்குமாயின் எமது அஞ்சல் தொலைத் தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கம் தொழிற் சங்க நடவடிக்கைகளுக்கு செல்வது தவிர்க்க முடியாததாகி விடும்.

எனவே தொழிற் சங்க நடவடிக்கையில் இறங்கும் சரியான தினம் என்ன வகையான தொழிற் சங்க நடவடிக்கைகள் என்பது பற்றி பின்னர் அறிவிக்கப்படும். அதற்கு எமது அங்கத்தவர்களைத் தயாராய் இருக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.” என அஞ்சல் தொலைத் தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் ஏ.டபிள்யூ.டி. ரணதுங்க அதன் சங்க அங்கத்தவர்களுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten